முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

யு.ஏ.இ யில் வேலை:இந்திய அதிகாரிகளின் அனுமதி கட்டாயம்!


புதுடெல்லி,ஏப்ரல் 07 : ஐக்கிய அரபு அமீரகத்தில்(யு.ஏ.இ) வேலை தேடும் இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய அதிகாரிகளின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டம் நிறைவேற உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியும், யு.ஏ.இ தொழில்துறை அமைச்சர் ஸக்ர் கோபாஷும் கையெழுத்திட்டுள்ளனர்.

வேலை பாதுகாப்பும், சம்பளமும் உறுதிச்செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்திய தொழிலாளிகளை ரிக்ரூட்மெண்ட் நிறுவனங்களும், வளைகுடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறுவோரும் மோசடி செய்வதாக புகார்கள் அதிகரித்துள்ள சூழலில் அரசின் இந்நடவடிக்கை ஆறுதலை தரும் என கருதப்படுகிறது.

17 லட்சம் இந்தியர்கள் யு.ஏ.இயில் பணிபுரிகின்றனர். புதிய சட்டத்தின் அடிப்படையில் வேலை ஒப்பந்தத்தில் தொழிலாளி, தொழில் உரிமையாளர் தவிர இந்திய அரசு அதிகாரிகளின் சம்மதமும் தேவையாகும்.

1 comments:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)