ஆர் .எஸ் .எஸ் .போன்ற தீவிரவாத சக்திகள் .
இந்நிலையில் இந்த வருடம் முத்துப்பேட்டையில் இந்துமுன்னனியின் சார்பாக இருபதாம் ஆண்டு விநாயகர் ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் .முத்துப்பேட்டையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்றுவிடாமல் இருக்க ,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருமுறையும் ,முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒருமுறையும் இருசமுதயத்தை சார்ந்தவர்களையும் அழைத்து அமைதிக்கான ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .நடந்து முடிந்த இந்த இருகூட்டங்களிலும் நீதிமன்றம் அனுமதித்த பாதையில் மட்டும்தான் செல்லவேண்டும் என்றும் ,பிறமதங்களை புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக்கூடாது என்றும் ,ஊர்வலத்தை விரைவாக நடத்திமுடிக்கவேண்டும் என்றும் ,உள்ளூர்வாசிகள் மட்டுமே இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் ,வெளியூர்களிலிருந்து வருபவர்களை இந்த ஊர்வலத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர் .
இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் பேட்டையில்,உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் மூன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர் இந்துமுன்னணியினர் . .பேட்டையிலிருந்து அரபுசாகிபு பள்ளிவாசல் வழியாக ஊர்வலமாக பங்களாவாசல வந்தடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அந்த சட்டவிரோதமான மூன்று சிலைகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு எடுத்து வந்தனர் முத்துப்பேட்டை காவல்துறையினர் .
இதை பெரிதுபடுத்தி ,முத்துப்பேட்டையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுருந்த இந்துமுன்னணியினர் ,பேட்டையில் பா.ஜ .க .வின் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நேற்று உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு கலகலத்து போன ,காமெடி நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் .பேட்டையில் உள்ள அனைத்து இந்துக்களையும் உசுப்பேற்றி ,இஸ்லாமியர்களுக்கு எதிராய் சிண்டுமுடித்து விடலாம் என்ற கற்பனையோடு திட்டம் தீட்டப்பட்ட இந்த காமெடி விரதத்தில் ஒருசிலரை தவிர மெஜாரிடியான இந்துக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததால் இந்த உண்ணாவிரதம் பிசுபிசுத்துப்போன காமெடி விரதமாய் காட்சியளித்தது .
source from:www.muthupettai express.com
தொகுப்பு :
துபாயிலிருந்து ஜே .ஷேக்பரீத் .