முத்துப்பேட்டை, ஜனவரி 20 ௦: கடந்த 21 ஆண்டுகளாக நமதூரில் சிறப்புடன் நடைபெற்று வரும் புகாரி ஷரீபு மஜ்லீஸின் 22 ம் ஆண்டு நிகழ்வு இன்ஷா அல்லாஹ் வரும் ஹிஜ்ரி 1433 ரபியுல் அவ்வல் பிறை 1 (25 .01 .2012 ) புதன் கிழமை தொடங்கி பிறை 30 (23 .02 .2012) வியாழக்கிழமை நிறைவு பெறவிருக்கிறது. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்வும், வாக்கும் அடங்கிய ஹதீஸ் தொகுப்புகளின் விளக்கம் கேட்டுப் பயன் பெற வருகை தந்து கண்ணியத்துடன் மஜ்லிஸை சிறப்பித்து ஒத்துழைக்க வேணுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நேரம் காலை 7 .45 வரை ஹதீஸ் ஓதி 8 .30 மணி வரை அதன் விளக்கம் கூறப்பட்டு துஆவிற்குப் பிறகு நாற்சா வழங்குவதுடன் நிறைவு பெரும்.
source from www.muthupettaiexpress.blogspot.com
இப்படிக்கு
புகாரி ஷரீபு மஜ்லிஸ்
நமது நிருபர்
K .எர்சாத் அஹமது, TR . அப்துல் ரஹ்மான்
முத்துப்பேட்டை, ஜனவரி 20 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) & திருவாரூர் வண்டாம்பானை லயன்ஸ் கண் மருத்துவமனை மற்றும் திருவாரூர் மாவட்ட கண் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் IOL (லென்ஸ்) பொருத்தும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்ற மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம், வருகிற 25 .01 .2012 அன்று காலை 9 மணிமுதல் மதியம் 1 மணிவரை முத்துப்பேட்டை மஸ்ஜிதுந் நூர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும், மேலும் இந்த முகாமில் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு பெற்றவர்கள் இலவசமாக திருவாரூர் வண்டாம்பாளை லயன்ஸ் கண் மருத்துவமனை அழைத்து செல்லப்படுவார்கள். இதில் உணவு தங்குமிடம் மருந்து மற்றும் IOL விழி லென்ஸ், போக்குவரத்து ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் தொடர்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 96982 56747 , 99942 03523
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
K .எர்சாத் அஹமது, TR .அப்துல் ரஹ்மான்