முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் TNTJ சார்பில் நடைபெற்ற பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்



முத்துபேட்டை, அக்டோபர் 01 : முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத் நகர்) ன் சார்பாக பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் 29-9-2012 அன்று ரஹ்மத் நகர் சகோ.இம்ரான் கான் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தாவா சம்மந்தமான ஊக்கமும், எந்த முறையில் தாவா செய்யவேண்டும் என்றும், இதில் கலந்துக்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூர் மஸ்ஜித் இமாம் சகோதரர். அல்தாப் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்) இக்கூட்டத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். கிளை தலைவர் சகோதரர். அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

source from: www.muthupettaiexpress.com
நன்றி - TNTJ முத்துப்பேட்டை   

காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட சட்டவிரோத பிள்ளையார், காமெடியாய் கலகலத்துப்போன பா.ஜ.க .வின் உண்ணாவிரதம்.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில்  இந்துக்களும் ,முஸ்லீம்களும்  பழங்காலந்தொட்டே அண்ணன்  தம்பிகளாக சகோதர வாஞ்சையுடன் பழகி வருகின்றனர்  .கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி ,இந்து முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கோடு மதக்கலவர தீயை மூட்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் இந்து முன்னணி ,
ஆர் .எஸ் .எஸ் .போன்ற தீவிரவாத சக்திகள் .
                          இந்நிலையில் இந்த வருடம் முத்துப்பேட்டையில் இந்துமுன்னனியின் சார்பாக  இருபதாம் ஆண்டு விநாயகர் ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் .முத்துப்பேட்டையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்றுவிடாமல் இருக்க ,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருமுறையும் ,முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒருமுறையும் இருசமுதயத்தை சார்ந்தவர்களையும் அழைத்து அமைதிக்கான ஒத்துழைப்பு  மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .நடந்து முடிந்த இந்த இருகூட்டங்களிலும் நீதிமன்றம் அனுமதித்த பாதையில் மட்டும்தான் செல்லவேண்டும் என்றும் ,பிறமதங்களை புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக்கூடாது என்றும் ,ஊர்வலத்தை விரைவாக நடத்திமுடிக்கவேண்டும் என்றும் ,உள்ளூர்வாசிகள் மட்டுமே இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள  வேண்டும் என்றும் ,வெளியூர்களிலிருந்து வருபவர்களை இந்த ஊர்வலத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர் .
                              இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் பேட்டையில்,உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் மூன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர் இந்துமுன்னணியினர் . .பேட்டையிலிருந்து அரபுசாகிபு பள்ளிவாசல் வழியாக ஊர்வலமாக பங்களாவாசல வந்தடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அந்த சட்டவிரோதமான மூன்று சிலைகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு எடுத்து வந்தனர் முத்துப்பேட்டை காவல்துறையினர் .
                               இதை பெரிதுபடுத்தி ,முத்துப்பேட்டையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுருந்த இந்துமுன்னணியினர் ,பேட்டையில் பா.ஜ .க .வின் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நேற்று உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு கலகலத்து  போன ,காமெடி நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் .பேட்டையில் உள்ள  அனைத்து இந்துக்களையும் உசுப்பேற்றி ,இஸ்லாமியர்களுக்கு எதிராய் சிண்டுமுடித்து விடலாம் என்ற கற்பனையோடு திட்டம் தீட்டப்பட்ட இந்த காமெடி விரதத்தில் ஒருசிலரை தவிர மெஜாரிடியான இந்துக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததால் இந்த உண்ணாவிரதம் பிசுபிசுத்துப்போன காமெடி விரதமாய் காட்சியளித்தது .
source from:www.muthupettai express.com
தொகுப்பு :  

துபாயிலிருந்து ஜே .ஷேக்பரீத் . 

அஸ்ஸாம் மக்களுக்கு துணிகள் வசூலும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளமும் ஓர் பார்வை











                                       
முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில் சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடுமையான இன கலவரத்தால் பாதிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் பொது மக்கள் சுமார் 4 லட்சம் பேர் உடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இதனை அறிந்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இனையதள நிர்வாகிகள் தீவிரமாக முத்துப்பேட்டை பகுதிகளில் ஆடைகளை சேகரித்தது. இதில் சிறுவர்கள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் தங்களுடைய உடைகளை குத்பா பள்ளி வாசலில் கொண்டு வந்து குவித்தனர். இதில் பல நாட்களாக இரவு பகல் பாராமல் தரம் பிரிக்கப்பட்டு அட்டைப்பெட்டிகளில் கட்டப்பட்டன. கட்டப்பட்ட அந்த அனைத்து பெட்டிகளையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிர்வாகத்தினர் சென்னை மக்கா மஸ்ஜிதில் கொண்டு சேர்த்தனர். மேலும் வசூல் செய்யப்பட அனைத்து துணிகளும் வருகிற செவ்வாகிழமை அன்று மூன்று கண்டைனர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அந்த நிர்வாகம் தெரிவித்தது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

தமிழகத்தில் தொடர்ந்து வரும் முஸ்லிம்களின் ஒற்றுமையும், ஆர்பாட்டத்தின் பிரதிபளிப்பும்..




இராமநாதபுரம், செப்டம்பர் 26 :  இராமநாதபுரம் நகரில் இன்று தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான  முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.

அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழிக்கினங்க மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது.

பேரணியி்ன் பின்னர் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்த்தில் முதலாவதாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல் வீர உரையுடன் துவக்கினார் பின்னர் த.மு.மு.க வின் பேச்சாளர் ஜனாப் கோவை செய்யது அவர்கள் ஆக்ரோசத்துடன் கண்டன உரை நிகழ்த்தினர் அதன் பின்னர் உரையாற்ற வந்த முகவையின் மைந்தன் இந்திய தவ்ஹித் ஜமாத்தின் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தனது சிம்மக் குரலில் கண்டனத்தை பதிவு செய்தார்கள் , நிகழ்சியின் இறுதியில் த.மு.மு.க வின் சகோ. அன்வர் அவர்கள் நன்றியுரை கூற கண்டன பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.நிகழ்ச்சிகளை அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஜனாப் முத்தலிப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர். கூட்டத்தில் சிறப்பம்சமாக பெண்கள் வரவேண்டாம் என கூறியும் பெரியபட்டினம் என்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பென்கள் வாகனங்களில் வந்து மேடையின் பின்புறம் அமர்ந்திருந்தது வியப்பாக இருந்தது. நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர்.

 source from: www.muthupettaiexpress.com
நன்றி - செங்கிஸ்கான் ஆன்லைன்  

முத்துப்பேட்டையில் அனுமதி இல்லாத 3 பிள்ளையார் சிலையை போலீசார் கைப்பற்றினர்.







முத்துப்பேட்டை, செப்டம்பர் 26 : முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலம் என்றாலே தமிழகம் முழுவதும் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஊர்வலத்தில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புடன் பலவிதமான பல அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வாகனகளுடன் 16 விநாயகர் சிலை மற்றும் நூற்றுக் கணக்கான கிராமத்தினருடன் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை வடகாடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு முத்துப்பேட்டை நகர் வழியாக பாமணி ஆற்றில் கரைக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டில் 20 ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் வருகிற 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக நூற்றுக் கணக்கான போலீசார் ரகசிய போலீசார் என முன் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். முத்துப்பேட்டை நகர் எந்த நேரமும் பொலிசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ள நிலையில் இந்த ஆண்டு விநாயகர் ஊர்வலத்துக்கான பேட்டை சிவன் கோவில் ஆஸ்பத்திரி தெரு துரெளபதி அம்மன் கோவில், மங்களூர் மாரியம்மன் கோவில் என மூன்று இடங்களில் புதிதாக விநாயகர் சிலை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த மூன்று இடங்களுக்கு முறையான அனுமதி பெற வில்லை என்றும், வழக்கம்போல் உள்ள 16 சிலைக்குமே முறையான அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை திருவாரூர் எஸ்.பி. சேவியர் தன்ராஜ், முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கர் ஆகியோர் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் படி முத்துப்பேட்டை இன்ஸ் பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் மேற்படி முற்று சிலைகளையும் (கைது) அதிரடியாக பறிமுதல் செய்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட விநாயகர் சிலை ஊர்வல கமிட்டினரும், அந்த பகுதி மக்களும் பெரும் அதிர்ப்த்தி அடைந்து உள்ளனர். மேலும் இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பும் பதட்டமும் அப்பகுதியில் நிலவி உள்ளது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் விநாயகர் ஊர்வலம் நடக்குமா? அல்லது தள்ளி போகுமா? என்ற கேள்விக்குறியில் முத்துப்பேட்டை உள்ளது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டையில் 200 ஆண்டாக உள்ள புளிய மரத்தில் பயங்கர தீ.












முத்துப்பேட்டை, செப்டம்பர் 24 : முத்துப்பேட்டை ரயில்வேக்கு சொந்தமான புளிய மரம் ரயில்வே குடியிருப்பில் உள்ளது. இந்த மரம் அந்த இடத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த மரம் சுமார் 100 அடிக்கு பரந்தும் விரிந்தும் சுமார் 90 அடி உயரத்துக்கு  காணப்பட்ட  புளிய மரம் அந்த பகுதி பொது மக்களுக்கு நிழலாக காணப்பட்டன. அப்போது அந்த இடத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் உடும்பு ஒன்றை கண்டனர் அந்த உடும்பு மரத்திற்கு உள்ளே சென்றதால் அவற்றை பிடிக்க கம்பில் துணியை கட்டி அந்த மரத்து அடிப்பகுதியில் தீயை வைத்தனர். இதனால் அந்த மரம் மல மல வென தீ பற்றி பிடித்தது. இவற்றை அணைக்க முயன்றாலும் அவற்றை முழுமையாக அணைக்க முடியவில்லை. இதனால் அந்த மரம் கீழே சாய்த்து.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை






 

அஸ்ஸாம் மக்களுக்கு துணிகளை வசூல் செய்த முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம்.










முத்துப்பேட்டை, செப்டம்பர் 24: அஸ்ஸாமில் இன கலவரத்தால் பாதிக்கப்பட்ட நமது இஸ்லாமிய சகோதரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 4 லட்சம் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என உடுத்த ஆடைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் உடை இல்லாமல் அவதிப்படும் நிலையில் சென்னையில் உள்ள மக்கா பள்ளி தலைமை இமாம் சம்சுதீன் காசிமி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தன்னார்வ தொண்டாக முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள குழுவினர்கள் கடந்த    ஜும்மாஹ்  தொழுகைக்கு பிறகு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜும்மாஹ் பள்ளி வாசலிலும் இது குறித்து அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட அனைத்து முஹல்லாவை சார்ந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அதிகமான துணிகளை வாரி வழங்கியும் உள்ளனர். வசூல் செய்யப்பட்ட அனைத்து துணிகளையும் சென்னையில் உள்ள மக்கா  மஸ்ஜித் தலைமை இமாமிடம்  கொண்டு  சேர்க்கப்படும்  வந்த துணிகளை பிரித்து அவற்றை சரி செய்யும் பணி நேற்று காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து இளைஞர்கள் மூலம் அவற்றை பிரித்தெடுத்து சரி செய்யப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது. 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரசீத் அலி (சிங்கப்பூர்)

திருமணச் செய்தி: "N. தீன் முஹம்மது, M. ரிஜ்வானா அஜீம்"




முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன்  தீங்குலச்செல்வன் N. தீன் முஹம்மது முத்துப்பேட்டை ஆசாத் நகர்  PM. முஹம்மது இபுறாஹீம் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M. ரிஜ்வானா அஜீம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் AKL .அப்துல் ரஹ்மான் 

திருமணச் செய்தி : N. தமீம் அன்சாரி. M.sc.,(CS ) PDNT , M.பஜிலா பேகம்"




முத்துப்பேட்டை, செப்டம்பர் 21: ஹிஜ்ரி 1433 ஷவ்வால் பிறை 28 , 16.09.2012 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜனாப்.மர்ஹும் சுல்தான் மைதீன் ஓடாவி அவர்களின் பேரன்  தீங்குலச்செல்வன் N. தமீம் அன்சாரி M.sc,(CS ) PDNTமுத்துப்பேட்டை ஆசாத் நகர்  ஹாஜி S. முஹம்மது ஹனிபா அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M.பஜிலா பேகம் மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 3 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஆசாத் நகர் இமாம் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் AKL .அப்துல் ரஹ்மான் 

மவுத்து அறிவிப்பு : "S. சுபைதா அம்மாள்"


முத்துப்பேட்டை, செப்டம்பர்  20 பேட்டை ரோடு அலியார் சந்து  மர்ஹும் நா.சே. சேக் தாவூது அவர்களின் மகளும், மர்ஹும் S. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் நா.சே. முஹம்மது யூசுப் ராவுத்தர், மர்ஹும் நா.சே. ஹமீது சுல்தான், மர்ஹும் நா.சே. நாகூர் கனி, மர்ஹும் நா.சே. அப்துல் காதர், மர்ஹும், நா.சே. சாகுல் ஹமீது, ஆகியோரின் சகோதரியும், பர்வின் சைக்கிள் கம்பெனி S. அப்துல் அஜீஸ் அவர்களின் தாயாரும், A. முசுபூர் ரஹ்மான், A. நிஜாமுதீன், A. பாக்கர் அலி ஆகியோரின் பாட்டியுமாகிய "S. சுபைதா அம்மாள்"அவர்கள் இன்று காலை 11 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அண்ணாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் நமது முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள். 
source from: www.muthupettaiexpress.com

அறிவிப்பவர் 

பர்வின் சைக்கிள் கம்பெனி S. அப்துல் அஜீஸ் 

நமது நிருபர் 

K.M. காதர் கனி (பாடகர்)


தடையை மீறி பேரணி: ஸ்தம்பித்தது சென்னை அண்ணாசாலை






சென்னை, செப்டம்பர் 18: முஹம்மது நபியை கேலிசெய்து சினிமா வெளியிட்ட யூதனைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட அண்ணாசாலையில் ஜமாதுல் உலமா, SDPI , TMMK . INTJ , ஜமாத்தே இஸ்லாமி, மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், INL , சுன்னத்துல் ஜமாஅத், ஜாமியத்துள் உலமா, முஸ்லிம் லீக், ஐக்கிய சமாதான பேரவை உள்பட 23 இயக்கங்கள் ஒன்று கூடி சாலைமறியலில் ஈடுபட்டு வந்தனர். இதில் போலிசாரால் இவற்றை கட்டுபடுத்த முடியாமல் திணறினர் மேலும், 23 இஸ்லாமிய அமைப்புகள் மீது தடியடி அடித்து மண்டைகள் உடைந்தது போராட்டகாரரகளை களைக்க போலீஸ் நடவடிக்கை எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பதட்டநிலை அந்த பகுதியில் நிலவி வருவதால் மேலும் போலீஸ் அதிகமாக குவிக்கப்பட்டு சென்னை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.com
நமது நிருபர்

வழக்கறிஞர் இல்யாஸ் (சென்னை)

நபிகள் நாயகம் குறித்த சினிமா முத்துப்பேட்டை தர்ஹா சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்.






முத்துப்பேட்டை, செப்டம்பர் 18 : முத்துப்பேட்டையில் அமெரிக்கா நாட்டில் முஹம்மது நபியை சித்தரித்து குறும்படம் வெளியிட்ட சம்பவம் நாடுமுழுவதும் இஸ்லாமியர்கள் மத்தியில் அதிர்ப்தி அடைந்த நிலையில் காணப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து முத்துப்பேட்டையில் உள்ள ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவோனோடை தர்ஹா முழுவதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் தர்ஹாவை சுற்றி உள்ள அனைத்து வீடுகளிலும் மீதும் கறுப்புக் கொடி ஏற்றி கண்டனத்தை தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கார், வேன், ஆட்டோ, இருசக்கர வானகம், ஆகிய வாகனங்களிலும் சிலர் கருப்பு பேஜ்களை அணிவித்து வளம் வருவதால் முத்துப்பேட்டையில் பெரும் பரப்பானது.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த தர்ஹா டிரஸ்டி முதன்மை அரங்காவலர் S.S. பாக்கர் அலி சாஹிப் அவர்கள். அமெரிக்காவின் அடாவடிக்கு எல்லையே இல்லாமல் போகிவிட்டது என்றும், அண்டை நாடுகளுடன் சீண்டுவதையே தொழிலாக கொண்டிருந்த அமெரிக்கா இன்று இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வேளையில் இறங்கியது மிகவும் வேதனையான விசயமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அமெரிக்கா அரசு இது சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் மட்டுமல்லாது அந்த கொடிய செயலுக்காக உலக முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கறுப்புக் கொடி போராட்டம் தொடர்ந்து மூன்று நாளைக்கு நடைபெறும் என்றும் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முஹம்மது நபியை இழிவு படுத்திய யூதனைக் கண்டித்த உலக இஸ்லாமிய நாடுகள் ஓர் பார்வை.














உலகம், செப்டம்பர் 17 : நமது உயிரிலும் மேலான முஹம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இழிவு படுத்தும் விதமாக சினிமாவை வெளியிட்ட யூத இரு பயங்கரவாதிகளைக் கண்டித்து உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த சகோதரர்கள் மற்றும் இஸ்லாத்தின் மீது பற்று வைத்துள்ள மாற்று மத சகோதரர்களும் நம்முடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் சவூதி அரேபியா, துபாய், சூடன், ஈரான், ஈராக், பாகிஸ்தான், இந்தியா, குவைத், மலேசிய, பஹ்ரைன், எகிப்த், ஆப்ரிக்கா, ஆஸ்த்ரேலியா, அமெரிக்க, லண்டன் ஆகிய நாடுகளில் மாபெரும் எதிர்ப்பை எதிர்த்து முஸ்லிம்கள் இந்த கொடியவனை தூக்கில் போடா வேண்டும் என்று உலக மக்கள் கோசங்களையும் எழுப்பி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)