முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அதிகாலையில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: தமுமக வினரின் போராட்டத்தால் பரபரப்பு...







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டையில் தேர்வுநிலை பேரூராட்சியில் அலுவலகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக நாகராஜ் என்பவர் பொறுப்பேற்றார் . திடீரென்றுபணியில் இருக்கும்பொழுது மாரடைப்பால் மரணம் அடைந்தார். காரணம் அலுவலக நிர்வாகத்தில் குளறுபடிகள் இருந்ததாலும், வரவு - செலவு கணக்கில் தணிக்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் மனஅழுத்தம் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பொறுப்பு ஏற்ற பாலசுப்ரமணியன் ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு பொறுப்பேற்ற நந்தகுமார் மனஉளைச்சல் காரணமாக பணி செய்ய விரும்பாமல் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பொறுப்பேற்ற சித்தி விநாயகமூர்த்தி அலுவலகத்தில் ஒத்துழைப்பு இல்லாததால் அவரும் சென்றதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற சிவராமன் உடல் நிலை காரணமாக சென்று விட்டதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற இப்ராகிம் என்பவர் இந்த சம்பவங்களெல்லாம் கேள்விபட்டு பொறுப்பேற்று இதுநாள் வரை தனது அறையில் அமரவில்லை என்று தெரிகிறது. 

மேலும் , பேரூராட்சி தலைவராக உள்ள அருணாச்சலதுக்கு சில மாதங்கள் முன்பு உடல்நிலை சரியில்லாமால் பல மாதங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை. பேரூராட்சி திமுக கவுன்சிலர் ஐயப்பன் சென்ற மாதம் விபத்தில் சிக்கி படுகாயம், பேரூராட்சி மதிமுக கவுன்சிலர் மதியழகன் என்பவருக்கு உடல் நிலை சரியில்லை, சில தினங்களுக்கு முன்பு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து பேரூராட்சி பணியாளர் ராஜா ஆகியோருக்கு விபத்தில் சிறு காயம், மேலும் பேரூராட்சி பணியாளர்கள் கவுன்சிலர்களுக்கு மன உளைச்சல், கடன்தொல்லை, குடும்பத்தில் தொல்லை இப்படி தொடர்ந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பேரூராட்சி நிர்வாகம் - கடவுள் குத்தம் இருக்குமோ என்று கருதி அலுவலகத்தில் கணபதி ஓமம் நடத்த முடிவு செய்யப்பட்டன . அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு புரோகிதர்களை கொண்டு கணபதி ஓமம் பேரூராட்சி அலுவலர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அருணாச்சலத்திற்க்கு கழுத்தில் மாலை போட்டு தோஷம் கழிக்கப்பட்டது. பின்னர் புனிதநீரை அலுவலகத்திற்கு சுற்றுப்புறமும் புரோகிதர் தெளித்தார்.

 அதிகாலையில் இது நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெறும் பரபரப்பானது. இதனால் ஏராளமான மக்கள் கூடினர் . அப்பொழுது தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றகழகம் நகர தலைவர் நெய்னா முகம்மது தலைமையில் ,ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக் மற்றும் மனித நேய மக்கள் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் உரிமை மீட்பு இயக்கம் மாநில நிர்வாகியும் சமூக ஆர்வலருமான நிஜாமுதீன் உட்பட தமுமுகவினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தடுக்க முயற்சித்தனர் . இதனால் பெறும் பரபரப்பானது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தனிபிரிவு காவலர் குணசேகரன் உட்பட போலீசார் முற்றுகையிட்ட தமுமுகவினரிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர் . பிறகு உரிய விசாரணை செய்யப்படும். என்று தெரிவித்தார். மேலும் ரம்ஜான் அன்று கலவரம் நடந்த நிலையில் இச்சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: முத்துப்பேட்டை TMMK    


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)