முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

INTJ தலைமை அலுவலகத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஜெர்மன் பெண்..!!


சென்னை, மார்ச் 31 : இஸ்லாமிய அழைப்பு பணியினை முதன்மை விசயமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நேற்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிருஸ்தவ பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜனாப். சையது இக்பால் ஆங்கில மொழிபெயர்ப்பு குர் ஆன் ஒன்றை வழங்கினார்.
source from : www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் அபு பைசல்

முத்துப்பேட்டை கூட்டுறவு அங்காடியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்...



முத்துப்பேட்டை,மார்ச் 30 ௦: முத்துப்பேட்டை அடுத்து பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அங்காடியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அந்தந்த மாதத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் இன்று பேட்டை சிவன் கோயில் அருகே நடைபெற்றது. அதில் மண்ணெண்ணை மாதத்திற்கு இரண்டு தடவை முன்னறிவிப்பு இல்லாமல் மண்ணெண்ணை வழங்குகிறார்கள். இதனால் கூட்டம் அதிகமாகி தள்ளு முள்ளு ஏற்படுகிறது. டோக்கன் கொடுத்து வரிசையை வரிசையை முறைப்படுத்துவதில்லை, மண்ணெண்ணை அந்ததந்த மாதத்திற்கு எல்லோருக்கும் கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் வேலையை போட்டு விட்டு வரிசையில் நின்றும் மண்ணெண்ணை கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவற்றை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எ. காளிமுத்து தலைமை யில் நடைபெற்றது த.மு.எ.க.சங்க செயலாளர் சி.செல்லத்துரை வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு பி.என்.தங்கராசு, ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன், த.வி.ச.மாவட்ட துணைசெயலாளர் என்.ஜி.முருகையன், த.மு.எ.க.பொருளாளர் பி.ஆறுமுகம், ம.தி.ப.சங்க மாவட்ட செயலாளர் கே.பாலசுப்ரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!


பெங்களூர்,மார்ச் 30 ௦:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழையும் பொழுது உடலில் தீப்பற்றியது. கேரளாவைச் சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றியதாக உறவினர்கள் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு மேலாக அஜ்மலை கேரளாவைச் சார்ந்த மாணவர்களின் தலைமையில் அஜ்மலை ராகிங் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழைந்த பொழுது தீப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க முயன்ற அஜ்மலின் உடலில் பெரும்பகுதி தீயால் காயமடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிட்சைக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அஜ்மலிடம் பணம் கேட்டு மிரட்டியதால் மூன்று மாதம் முன்பு அஜ்மலின் தாயார் தனது தங்கச் செயினை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து செயினை விற்று கிடைத்த தொகையில் 20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை அடுத்த ஆண்டு தரலாம் என்று உறுதி அளித்தனர். ஆனால், பின்னர் அஜ்மலை கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வாடகை அறையில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். அஜ்மலுக்கு மார்ச் 22-ஆம் தேதி உடலில் தீக்காயம் ஏற்பட்ட பிறகும் கல்லூரி நிர்வாகிகள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஹாஸ்டலில் உள்ள மாணவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள்தாம் பெற்றோருக்கு இவ்விபரம் தெரியவந்துள்ளது.
2011 செப்டம்பர் மாதம் அஜ்மல் பெங்களூருக்கு எஞ்சீனியரிங் பயில சென்றுள்ளார். ஏரோநாடிகல் எஞ்சீனியரிங் படிக்க விரும்பிய அஜ்மலுக்கு கல்விக் கடனை வாங்கி படிக்க அனுப்பியுள்ளனர். அவரது தந்தை அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.

பழனி பாபாவை பற்றிய ஓர் ஆவணப்படம் விரைவில், ஆளூர் ஷாநவாஸ் பேட்டி!




சென்னை,மார்ச் 24 : இறந்து போன பழனி பாபா அவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஜனாப். அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:
காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்பட உருவாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு பழனி பாபா அவர்களைப்பற்றிய அவானப்பட உருவாக்கத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அவர் தெரிவித்தார். ஏனென்றால் பழனி பாபா நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தவர் என்றும், அவரது பேச்சுகள் அனைத்தும் காட்சி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பழனி பாபாவோடு பழகியவர்களும், அரசியல் நடத்தியவர்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே அவரைப்பற்றிய ஆவணப்படம் என்பது மிக எளிதாகவும், விரைவாகவும் செய்து விடக்கூடிய ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அதற்க்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். விரைவில் அந்த தலைவரின் வரலாறும் ஆவணப்படமாய் உங்கள் கைகளில் தவழும் இன்ஷா அல்லாஹ்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை.

முத்துப்பேட்டை SDPI -யின் கோரிக்கையை ஏற்று உறுதியளித்த வட்ட வழங்கல் அலுவலர்!



முத்துப்பேட்டை, மார்ச் 21 : திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக முறையற்ற முறையில் சமையல் எரிவாயு கேஸ் வினியோகம் செய்யும் மரியா (HP) மற்றும் - இன்டேன் கேஸ் நிறுவனத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி 22 .03 .2012 அன்று அறிவித்தது தொடர்பாக திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜாராம். அவர்கள் முன்பாக சமாதான கூட்டம் நேற்று
20 ௦.03 .2012 மாலை நடைபெற்றது. கூட்டத்தில் SDPI கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர் டோர் டெலிவரி கட்டாயமாக செயல்பட வேண்டும். சிலிண்டர் வரும்போது வாடிக்கையாளர்களுக்கு தெரிவதற்கு முன்பாக புரோக்கர்களுக்கு முன் தெரிந்து அவர்களே பெற்றுச் சென்று விடுகின்றனர் என்று புகார் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் கிடைக்கப் பெறுவதில்லை. முன் பதிவு முறையில் கேஸ் பதிவு செய்தவர்களுக்கு எடுத்து வருவதை இடையில் பதிவு செய்தவர்களுக்கு வழங்குவதால் தான் பதிவு செய்த நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் முறையை கைவிட வேண்டும். ஏற்றத்தாழ்வு பாராமல் பதிவு முப்பது அடிப்படையிலே நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும், என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மரியா கேஸ் நிறுவனத்தின் சார்பில் மேலாளர் திரு. ராஜாராமன் என்பவர் போராட்டக் குழுவினர் கூறியவாறு பதிவு மூப்பின் அடிப்படையில் டோர் டெலிவரி மூலம் வரிசையாக வழங்குவதாகவும், இனிவரும் காலங்களில் வாடிக்கையாளர் வீடுகளுக்கு முறையாக சமையில் எரிவாயு உருளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். பின்னர் 22 .03 .2012 யில் நடக்க விருந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கைவிடப்பட்டது. மேலும் போராட்டக்குழுவினர் தரப்பில் சூழ்நிலை சமரச நிலைக்கு வந்ததாக உறுதியளித்தனர்.



இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் அவர்கள், நாங்கள் கொடுத்துள்ள மனுவிற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் எங்களை அழைத்து பேசினார்கள், மேலும் அவர்கள் எழுத்து பூர்வமாகவும் எழுதியும் கொடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மிகப்பெரிய அளவில் இவற்றை நாங்கள் நடத்த தயாராக உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் ஜனாப்.பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் ஜனாப்.நெய்னா முஹம்மது, நகர செயற்குழு உறுப்பினர் ஜனாப். நிசார் அஹமது, மற்றும் SDPI யின் துபாய் பிரதிநிதி ஜனாப். M .காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

O .M .சுபைத் கான், ANA .நவாப்

முத்துப்பேட்டை அடுத்த பெருகவாழ்ந்தானில் இளம் பெண் கடத்தல்! பொது மக்கள் சாலைமறியல்!



முத்துப்பேட்டை, மார்ச் 19 : முத்துப்பேட்டை அடுத்து பெருகவாழ்ந்தான் காவல் சரகம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை அவர்களது மகள் மீனா (வயது 17) தனது உறவினருடன் தென்பரை கிராமத்துக்கு பஸ்ஸில் சென்றார். பின்னர் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்ற போது தல மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் தமிழ் நேசன் மற்றும் சிலர் காரில் மீனாவின் துணைக்கு வந்த பெண்ணை தாக்கிவிட்டு மீனாவை கடத்தி சென்று உள்ளனர். தகவல் அறிந்ததும் மீனாவின் தாய் செல்வி அண்ணாத்துரை பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் சென்ற மாதம் 19 ம் தேதி புகார் கொடுத்துள்ளார். முறையாக தகவல் இருக்கும் இடம் ஆகியவற்றை மீனாவின் உறவினர்கள் கூறியும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த புத்தகரம் கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதம் இருப்பதற்காக அறிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வருக்கு கடிதமும் எழுதி அனுப்பி உள்ளனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்க வில்லை, அதன் அடிப்படையில் திட்டமிட்டப்படி இன்று காலை காவல் நிலையம் முன்பு உண்ணா விரதம் இருப்பதற்காக புத்தகரம் கிராம மக்கள் சுமார் 300 பேர் ஊர்வலமாக நடந்து வந்தனர். அப்போது கடைதெருவிலிருந்து காவல் நிலையத்திற்கு செல்லும் வழியில் பெருகவாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் குணா சேகரன் தலைமையில் போலீசார் போராட்டகாரவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டன. இதனால் பதட்டம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுபடுத்த முடியவில்லை. பின்னர் பொது மக்கள் காவல் நிலையம் முன்பு உண்ணாவிரதத்தை துவங்கினர். இதில் இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பால சுப்பிரமணியன், தி.மு.க. நிர்வாகிகள், கோவிந்தராஜ்,ராமசாமி, ராமநாதன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், அன்பழகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஐயம் பெருமாள், பலரும் கலந்து கொண்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கோபி தலைமை போலீசார், போராட்ட குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அந்த பெண்ணை இன்னும் மூன்று நாளைக்குள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்தனர். பின்னர் போராட்ட குழுவினரும் கிராம மக்களும் உண்ணா விரதத்தை விளக்கி கொண்டனர் இதனால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,

முத்துப்பேட்டையில் போலி சிலிண்டர் விநியோகம்,வட்ட வழங்கல் அலுவலர் திடீர் சோதனை..




முத்துப்பேட்டை, மார்ச் 18 : முத்துப்பேட்டையில் கடந்த பல மாதங்களாக கேஸ் சிலிண்டர் விநியோகம் மிக தட்டுபாடாகவே இருந்து வந்தது. இது குறித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களும் சம்மந்தப்பட்ட துறைக்கு பல முறை புகார் தெரிவித்தனர். இதனை கண்டு கொள்ளாத HP சிலிண்டர் நிர்வாகம் சுதந்திரமாக உலா வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களும் மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்களும் போராடினார்கள். மேலும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு கடிதமும் எழுதி உள்ளனர். இதனை அறிந்த தஞ்சாவூர் ஆயில் துணை மேலாளர் திரு.ராஜேஷ் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் (TSO ) ஆகியோர் கொண்ட குழு அமைத்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஹோட்டல் மற்றும் சிறிய கடைகளிலும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. சோதனையிட்ட எல்லா கடைகளிலும் அனுமதி இல்லாத காலி சிலிண்டர்கள் சுமார் 179 மற்றும் 5 முழு சிலிண்டரையும் கைப்பற்றினர். இதனை அறிந்த பொது மக்கள் சம்பவ இடத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொது மக்கள் மற்றும் SDPI மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா மற்றும் பொருளாளர் நெய்னா முஹம்மது ஆகியோர் ஒன்று சேர்ந்து ஊரில் நடக்கும் அவலங்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள் அனைவரிடமும் உள்ள குறைகளை பெற்று இதற்க்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எழுத்து மூலமாக எழுதியும் கொடுத்துள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அதிகாரிகள், இன்று நடைபெற்ற சோதனை யில் மொத்தம் 184 போலி சிலிண்டர்கள் இடைத்தரகர் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும், இனிமேல் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீடு வீடாக சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் நமதூர் கொய்யா மஹால் எதிரே உள்ள மரியா சிலிண்டர் நிறுவனம் அனுமதி இல்லாமல் நடத்தியது சோதனையின் போது தெரியவந்தது. அவற்றை உடனே அகற்ற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, OM . சுபைத் கான்.

காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை விரைவில்! அமைச்சர் பழனிமாணிக்கம் பேட்டி


தஞ்சாவூர், மார்ச் 17 : காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை மீட்டர் கேஜ் ரயில் பாதையை மாற்றும் பணிகள் இந்த மாதத்துக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கபடுவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை மாற்றப்பட உள்ளது. இதன் நீளம் 149 .42 கீ.மீ, ஆகும். இதே போல் திருவாரூர் அகஸ்தியப்பள்ளி இடையே உள்ள 36 .80 கீ.மீ தொலைவு மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற திட்டம் உள்ளது. இதன் மொத்த மதிப்பீடு 506 .76 கோடி. இந்த இருவழித் தடங்களில் 30 பெரிய பாலங்களும், 542 சிறு பாலங்களும் உள்ளன. இப்பணிகள் தொடங்க 12 தேதி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பணிகள் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளன. அதில் முதல் கட்ட மாக 73 கீ.மீ. தொலைவுள்ள காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதைப்பணியை 2014 செப்டம்பர் மாதத்திற்குள்ளும், அடுத்த கட்டமாக 49 கீ.மீ. தொலைவுள்ள பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி அகல அகல ரயில் பாதைப்பணியை 2016 மார்ச் மாதத்துக்குள்ளும், 26 கீ.மீ. தொலைவுள்ள திருத்துறைப்பூண்டி - திருவாரூர் அகல ரயில் பாதைப்பணியை 2015 செப்டம்பர் மாதத்திற்க்குளும், ஆகிய அனைத்து பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
source from: www.mttexpress.com
நன்றி

தினமணி நாளிதழ்

அகல ரயில் பாதை அமைக்க MMJ முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் அலோசனை கூட்டம்.


முத்துப்பேட்டை, மார்ச் 17 : திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் அகல ரயில் பாதை அமைக்கக் கோரி பல முறை அரசுக்கு எடுத்துரைத்தும் செவி சாய்க்காததால் முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் MMJ . இவற்றை சரி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த MMJ வின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள், முத்துப்பேட்டை முதல் காரைக்குடி வரை உள்ள அகல ரயில் பாதை வழியை கண்டு கொள்ளாத அரசை கண்டித்தும், போராட்டத்தை தீவிர படுத்தும் பொருட்டு வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய மக்களை ஒன்றிணைத்து அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை 18.03.2012 மாலை 4 மணியளவில் நமதூர் கொய்யா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

OM . சுபைத் கான்

துபாயில் உள்ள பிரபல "FIRST TECHNOLOGY " நிருவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை.


துபாய்,மார்ச் 17 : FIRST TECHNOLOGY என்ற பிரபல நிறுவனத்திற்கு உடனடியாக கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைபடுகிறது.
1 ) CIVIL ENGINEER (BE SIVIL) சம்பளம் திரகம் 3000 .
2 ) CIVIL FOREMEN DIP (CIVIL) சம்பளம் திரகம் 3000 .
3 ) TELECOM ENGINEER (BE , ECE ). சம்பளம் திரகம் 3000 .
4 ) TELECOME TECHNICIAN சம்பளம் திரகம் 3000. இந்த பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 18 .03 .2012 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. எனவே இந்த பணிகளில் சேர விற்பம் உள்ளவர்கள் உடனே தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு சென்னை யாசர்: 72005 00225 .

நமது நிருபர்

சென்னை யாசர்

மவுத்து அறிவிப்பு: "M .அன்வருதீன்"


முத்துப்பேட்டை, மார்ச் 16 : கல்கேனித் தெரு மர்ஹும் SM. இபுராஹீம் அவர்களின் மகனும், பாலாவை MM .காதர் முஹைதீன் அவர்களின் மருமகனும், M .அன்சாரி, M .அப்துல் ரசாக் ஆகியோரின் சகோதரரும், பாலாவ KM .சேக் முஹம்மது அவர்களின் சம்மந்தியும், செல்லாப்ப என்கிற S .காதர் முஹைதீன் அவர்களின் மாமனாரும், MTKM . ஹமீது சுல்தான் KM .முஹம்மது இபுராஹீம், PKM . அப்துல் ரஹ்மான், RA . மீரா உசேன் ஆகியோரின் சகலையும், MMK .சேக் முஹைதீன், MMK . கமால் முஹைதீன் ஆகியோரின் மச்சானும், A . முஹம்மது தாகிர் அவர்களின் தகப்பனாருமாகிய M . அன்வருதீன் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 .30 மணியளவில் முஹைதீன் பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.mttexpress.com
அறிவிப்பவர்

MM . காதர் முஹைதீன்

நமது நிருபர்

KM.காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் நடைபெற்ற ம.ம.க வின் மாபெரும் ஆர்பாட்டம்!!!





முத்துப்பேட்டை,மார்ச் 15 : முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் தமிழக அரசு அரிவித்த 4 மணி நேரத்திற்கு மேல் எந்த அறிவிப்பும் இல்லாமல் மின் தடை, HP, கேஸ் நிறுவனத்தின் முறையற்ற பராமரிப்பை கண்டித்தும், முத்துப்பேட்டை நகரங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க பேரூராட்சி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பன மூன்று கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் MMK கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். நாச்சிக்குளம் M . தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர் . இதில் மாவட்ட தலைவர் ஜனாப். K . நூர்தின், மாவட்ட செயலாளர் ஜனாப். S . முஹம்மது மாலிக், துணைத்தலைவர் ஜனாப். M . சம்சுதீன், நகர செயலாளர் வழக்கறிஞர் L . தீன் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

யூசுப் அலி (ஆலிம்)

மவுத்து அறிவிப்பு: " அப்துல் சலாம்"


முத்துப்பேட்டை, மார்ச் 12 : குத்பா பள்ளி தெரு மர்ஹும் SM . சேக்கா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹும் டீக்கடை அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், NS . சகாப்தீன் NS . ஷேக் அப்துல் காதர், NS . ஹாஜா, மர்ஹும் NS . நாகூர் பிச்சை, NS .சுல்தான் ஆகியோரின் தம்பியும் மாகிய அப்துல் சலாம் அவர்கள் இன்று மதியம் 1 .45 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 7 .மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்

SM . நெய்னா முஹம்மது, NS . சகாப்தீன் பிரதர்ஸ்

நமது நிருபர்

KM . காதர் கனி (பாடகர்)

த.மு.மு.க. தலைவர் KS.ரிபாயி அவர்களை சிறையில் சந்தித்த INTJ நிர்வாகிகள்


சென்னை, மார்ச் 11 : த.மு.மு.க வின் தலைவர் ஜனாப் கே.எஸ். ரிபாயி அவர்கள் புழல் சிறையில் இருக்கும் இவரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜனாப். S.M . பாக்கர், துணைத்தலைவர் M .I .முஹம்மது முனீர், திருவள்ளூர் மாவட்டம் தலைவர் வேலூர் இப்ராஹீம், உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த INTJ தலைவர் ஜனாப். S .M . பாக்கர் அவர்கள் சகோதரர் ரிபாயி அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்கவும், மேலும் அவர் சிறையிலிருந்து விரைவில் வெளிவரவும் இறைவனிடம் துவா செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முத்துப்பேட்டை முஹைதீன்

முத்துப்பேட்டை கவுன்சிலர் சாக்கடை கலந்த குடிநீருடன் வந்ததால் பரபரப்பு!!!



முத்துப்பேட்டை, மார்ச் 11 : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் புரங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுபாடு பெரும் அளவில் உள்ளது. சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டால் வர்த்தகம், தொழில், அரசு அலுவலக பணிகள் பெரிதளவு பாதிப்புகள் ஏற்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, அதன் வகையில் முத்துப்பேட்டை நகருக்கு வரும் கொள்ளிடம் குடிநீரை சேமித்து வைக்க மின் மோட்டார் பயன்படுத்தி வருகிறார்கள். இது மின்வெட்டால் தடைபட்டது மட்டும் அல்லாமல் சுற்றுபுற நகரங்களிலிருந்து வரும் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அந்த பணி தற்போது முடிந்து முத்துப்பேட்டை நகருக்கு சில திங்கங்கலாக முறையான குடிநீர் வழங்கக்கப்பட்டு வந்த நிலையில் அப்போது திடீர் என்று பொது மக்களுக்கு ஊர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது என்ன வென்று பார்க்கும் போது குடிநீரில் சாக்கடை கலந்து வருவதுதான். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பேட்டை கவுன்சிலர் ஜனாப். ஜபருல்லாஹ் சாக்கடை கலந்து குடிநீரை ஒரு பாட்டிலில் அடைத்து பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் அங்கிருந்தே தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அப்போது இதற்க்கு உடனே நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால் அமைதியாக சென்றார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கவுன்சிலர் .ஜபருல்லாஹ் எங்க பகுத்திக்கு வரும் குடிநீர் மட்டும் அல்ல எல்லா பகுதிகளுக்கும் வரும் குடிநீர் இதே அவலத்துடன் தான் வருகிறது என்றும், இவற்றை உடனே சரி செய்யாவிட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்றும் அவர் தரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, EKA . முனவ்வர் கான்

மதுவை ஒலிக்க முஸ்லிம் பெண்கள் எடுத்த அவதாராம், மிரண்டு போன தமிழகம்..!!


சென்னை,மார்ச் 08 : நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக மது மற்றும் ஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி சென்னை இராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. இதில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாவட்ட தலைவி ஆர். ஜீனத் ஆலிமா தலைமை தாங்கி நடத்தித்தந்தார்.தமிழகத்தில் தற்போதையை கணக்கெடுப்பின் படி 6696 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது எனவும் 4350 பார்கள் இயங்கி வருகிறது எனவும் கூறப்படுகிறது. மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று ஒவ்வொரு மதுக்கடைகளிலும் எழுதி வைத்துவிட்டு அதை அரசாங்கமே நடத்தும் அவல நிலை நமது இந்தியாவில் மட்டுமே காண இயலும். சமூகத்தை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மதுவிற்கு அங்கீகாரம் அழித்திருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. மதுவை அருந்திவிட்டு தன்னிலை உணராமல் சாலை ஓரங்களில் விழுந்துகிடக்கும் அவலங்களை நம்மால் காண முடிகிறது. அச்சாலை வழியாக செல்லும் பெண்களுக்கும், பள்ளிக்குழந்தைகளுக்கும் பெரும் இடையூறாக அமைந்துவிடுகிறது என்பதற்கான மாற்று கருத்து யாருக்கும் இருக்கவியலாது.அதே போன்று இந்தியாவில் பெண்களுக்கென்று தனி கவுரவமும், மரியாதையும் எப்போதுமே இருக்கும். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்று போற்றி புகழ்ந்து கொண்டிருந்த நமது தேசத்தில் ஆபாசம் என்ற ஒழுக்கக்கேடு புகுந்து சமூகத்தை சீரழித்து வருகிறது. பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் நிலை அதிவேகமாக பரவி வருகிறது. எனவே சமூகத்தை சீரழிக்கக்கூடிய மது மற்றும் ஆபாசத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக உலக மகளிர் தினமான மார்ச்-8ஐ முன்னிட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மருத்துவர் ஹெச். ஆயிஷா ஹமீது அவர்கள் "மது மற்றும் ஆபாசம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட N.W.F-ன் மாநில துணைத்தலைவி எம். நபிஸாபானு "இன்றைய பெண்களின் நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதியாக சென்னை மாவட்ட செயலாளர் எஸ். அஹமது மல்லிகா நன்றியுரை நிகழ்த்தினார். இப்பேரணியில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.

சவுதி அரேபியாவில் உள்ள AL-RASHED FOODS நிறுவனத்திருக்கு ஆட்கள் தேவை..


சவுதி அரேபியா, மார்ச் 06 : சவுதி அராபியாவில் உள்ள பிரபல AL - RASHED FOODS .CO என்ற நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது:
1) DATA BASE ADMINISTRATION - சம்பளம் ரியால், 4,000.
2) Accountant - சம்பளம் ரியால்,2000.
3) Store Keeper - சம்பளம் ரியால்,1800.
4) Electrical Supervicer - சம்பளம் ரியால்,2500
இதில் சேர குறைந்தது 2 வருடம் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இந்த பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் வருகிற மார்ச் 12 , 13 ஆகிய தேதிகளில் நேர்முகத் தேர்வு சென்னையில் நடைபெற உள்ளது. மேலும் தொடர்புக்கு: சென்னை யாசர் : 72005 00225.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

சென்னை யாசர்

முத்துப்பேட்டையில் பாகற்காய் தோற்றத்தில் முருங்கக்காய்!!!



முத்துப்பேட்டை, மார்ச் 06: முத்துப்பேட்டை பேரூராட்சி 8 வது வார்டு முன்னால் கவுன்சிலர் மு. ரசூல் பீவி வீட்டு தோட்டத்தில் உள்ள முருங்கை மரத்தில் காய்த்த சில முருங்கைக்காய்கள் பாகக்காய் போன்று காணப்படுகின்றன. இதனை அப்பகுதி மக்கள் மிக ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இலியாஸ், முஹைதீன் பிச்சை

ஓடும் ரயிலில் ஒரு உரையாடல் !


நெல்லை, மார்ச் 05 : நெல்லை எக்ஸ்ப்ரெஸ் எழும்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டது. என்னுடன் அமர்ந்திருந்த பயணக் கூட்டாளிகளைச் சுற்றிலும் பார்த்தேன் யார் யாரோ அறிமுகமில்லாத பல முகங்கள் அதில் என் அருகே அமர்ந்திருந்த ஓர் இளைஞரின் திருமுகம் என்னைக் கவர்ந்தது, அழகான ஷேவ் செய்யப்பட்ட -இளமையும் அமைதியும்தவழும் களையான முகம் . வயது முப்பத்தைந்து இருக்கலாம் அரைக்கை
ஷர்ட்டும் பேண்டும் அணிந்திருந்தார். "யாரோ ? நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் . " என்று எண்ணிக் கொண்டேன். புகை வண்டி புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் இரவு சிற்றுண்டியை முடித்துக் கொண்டு அந்த இளைஞர் மேலே அப்பர் பெர்த்தில் படுத்து விட்டார்.

உறங்கும் பயணிகளை தன் கற்பத்தில் சுமந்து கொண்டு உறங்காமல் ஓடிக் கொண்டிருந்தது அந்த நெல்லை விரைவுப் புகை வண்டி.

பலபல என்று விடிந்தபோது விருதுநகரில் அந்த இளைஞர் விழித்தார் கை கால் முகம் கழுவி காப்பியும் அருந்தி விட்டு உடை மாற்றத் தொடங்கினார் . மாற்று உடையில் அவரைக் கண்டதும் ஓரளவு திகைத்துத்தான் போனேன். ஆம் ! அத்துணை நேரமும் அவரை செல்வக் குடியில் பிறந்த ஒரு வாலிபர் எனக் கருதியிருந்த என் முன் அவர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் உடையில் காட்சியளித்தார் .

அருகில் அமர்ந்திருந்த அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைப் பார்த்ததும் அவருடன் ஏதாவது பேசவேண்டுமென என் துடுக்கு மனம் துடித்தது. நெல்லை வரை பொழுதும் போகவேண்டுமே

பேசத் தொடங்கினேன் ! சென்னையில் பாதிரியார்களின் மாநாட்டுக்கு சென்று வருவதாகவும் , பாளையம்கோட்டையில் வசிப்பதாகவும் அவர் தம்மைப் பற்றிக் கூறினார் . அவர்களின் மத குருவாக ஆவதற்குரிய கல்வி, பயிற்சி சடங்குகள் முதலியவைகளையும் இனிமையுடன் விவரித்தார் . நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அன்புடனும் கனிவுடனும் விளக்கம் கூறினார். அவரது பேச்சும் பதிலளித்த முறையும் சகஜமாகப் பழகிய விதமும் "இன்னும் ஏதாவது கேள் " என்று என்னைத் தூண்டிக் கொண்டே இருந்தன ! சரி ! நாம் என்ன கேட்டாலும் இவர் கோபப் பட மாட்டார் ! என்ற தைரியம் வந்து விட்டது எனக்கு !

" சார் ! உங்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றி எனக்கு சில சந்தேகங்கள் ! உங்களிடம் அதைக் கேட்டு நீக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ! கேட்கலாமா சார் ? நீங்கள் தவறாக நினைக்க வில்லையென்றால் கேட்கிறேன் " என்று ஆரம்பித்தேன் !

"ஏன் ? தாராளமாகக் கேளுங்கள்" எனப் புன் முறுவல் பூத்தார் !

"சார் ! எங்களுடைய வேதத்திற்கு "குரான்" என்று பெயர் ! இந்தப் பெயர் அந்த வேதத்திலேயே சொல்லப் பட்டிருக்கிறது ! அதேபோல் உங்களுடைய வேதமாகிய பைபிளில் "பைபிள்" என்று எங்காவது வருகிறதா ?

"இல்லை !" - அவரது பதில் .

"அப்படியானால் உங்கள் வேதத்திற்கு "பைபிள்" என்று எப்படிப் பெயர் வந்தது ? யாரால் சூட்டப் பட்டது ? "

"நல்ல கேள்வி; ஆனால் உடனடியாக என்னால் பதில் சொல்ல முடியவில்லை "

"சார் ! வருத்தப் படக் கூடாது ! பதினேழு ஆண்டுகள் நீங்கள் பாதிரியார் ஆவதற்குப் பயிற்சி பெற்றும் இந்தச் சந்தேகத்திற்கு யோசித்துத் தான் பதில் சொல்ல வேண்டுமா ?"

" சார் ! இன்னொரு சந்தேகம் ! எங்களுடைய வேதமாகிய குர் ஆன் அரபி மொழியிலேயே அருளப்பட்டது. உங்களுடைய பைபிளை எந்த மொழியில் இயேசு கூறினார் ?"

"ஹிப்ரூ மொழியில்"

" சரி ! நாங்கள் இன்ஜீல் வேதம் சுர்யானி மொழியில் அருளப்பட்டதாக நம்புகிறோம் ! ஆனால் அந்த மொழி உங்களுக்கு தெரியுமா ? "

"தெரியாது !"

"அப்படியானால் நீங்கள் எந்த மொழியில் உங்கள் பைபிளை ஓதுகிறீர்கள் ?"

"ஆங்கிலத்திலும் தமிழிலும் , பிற மொழிகளிலும் "

"எங்கள் குர் ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் ! அது எந்த அரபு மொழியில் அருளப்பட்டதோ அதே மொழியில் ஒரு புள்ளியும் மாறாமல் இன்றளவும் உயிருடன் இருக்கிறது ! எங்களில் சின்னஞ் சிறு வயதினரும் அதை ஓதத் தெரிந்திருக்கின்றனர் ஆனால் உங்களுடைய வேதமாகிய பைபிளோ எந்த மொழியில் இயற்றப் பட்டதோ அந்த ஒரிஜினல் மொழியில் இன்று இல்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இன்று உங்களிடம் இருப்பதெல்லாம் வெறும் மொழிபெயர்ப்புக்கள் மட்டுமே !"

"எந்த மொழியாக இருந்தாலும் அந்தந்த மொழிக்கென்று சில தனித் தன்மைகள் இருக்கும் ! ஆங்கிலமோ , தமிழோ அரபியோ எதுவாக இருந்தாலும் சரிதான் ! ஒரு மொழியிலுள்ள வேதத்தையோ , இலக்கியங்களையோ எவ்வளவுதான் திறமையுடன் பிற மொழிகளில் பெயர்த்தாலும் மூல நூலின் சாறை யதார்த்தத்தை பிற மொழிகளில் அப்படியே கொண்டு வந்திட முடியாது ! எப்படியும் சிறிது கூடவோ குறையவோ தான் மொழி பெயர்க்க முடியும் இல்லையா ? "

"ஆம்....உண்மைதான் !"

"அப்படியானால் உங்களுடைய பைபிள் மூல மொழியில் இல்லை என்பதால் அது தன் ஒரிஜினாலிட்டியை இழந்து விட்டது ! இப்போது உங்களுடைய கையில் இருக்கும் பைபிள் "ஒரிஜினல்" அல்ல என்று நான் சொன்னால் உங்களால் அதை எப்படி மறுக்க முடியும் ?"

"..........................." (பதில் இல்லை )

"இரவா வரம் பெற்ற உங்கள் இயேசுவின் வேத மொழி இறந்து விட்டது என்று சொல்வது உங்கள் வேதத்துக்கும் உங்கள் மதத்துக்கும் பெருமையா ? உங்கள் பைபிள் எப்படி உயிருள்ளதாக இருக்க முடியும் ?

"................................."(பதில் இல்லை)

சிறிது நேர மௌன இடைவெளி. எங்களுடன் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் அனைவரும் இந்து நண்பர்கள் எங்களது உரையாடலை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர் !

மீண்டும் தொடர்ந்தேன் !

"சார் ! இன்னும் ஒரு சந்தேகம் ! என்னுடைய தகப்பனாரை ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம் .அந்தக் கொலைகாரனை மட்டுமல்ல அவன் பயன்படுத்திய துப்பாக்கியை எப்போது பார்த்தாலும் எனக்கு என் தந்தையின் நினைவும் , இந்தத் துப்பாக்கியால் அல்லவா என் தந்தை கொல்லப்பட்டார் என்ற ஆத்திரமும்தான் எனக்கு ஏற்படும் இல்லையா ?"

"துப்பாக்கியைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தையைக் கொன்ற கருவி என்ற காரணத்தால் அவைகளின் மீது வெறுப்புதான் ஏற்படுமே தவிர "ஆஹா ! என் தந்தையைக் கொன்ற துப்பாக்கியே வா ! என் கண்ணே! " என்று அதன் மீது பிரியமோ வாஞ்சையோ ஏற்படுமா ? ஏற்படாதே ! ஏனெனில் சராசரி மனித இயல்பே அதுதான் ! கொலைக் கருவிகள் மீது மனிதனுக்கு நேசம் ஏற்பட எந்த நியாயமும் இல்லை . அல்லவா ?"

"ஆம் ! சொல்லுங்கள் "

" ஆனால் உங்கள் ஏசுவைக் கொன்ற கொலைக் கருவி சிலுவை ! அதில் அறைந்து தான் கொன்றார்கள் என்று நீங்கள் சாதிக்கிறீர்கள் ! அப்படியானால் உங்களுடைய பிதா -மகன்-பரிசுத்த ஆவியான கடவுளையே கொலை செய்யக் காரணமான அந்தச் சிலுவையின் மீது உங்களுக்கு வெருப்பல்லவா ஏற்படவேண்டும் ? மாறாக அதன் மீது அன்பும் பக்தியும் கொள்கிறீர்களே ! எப்படி ? தமது குருநாதரான கடவுளை கடவுளின் குமாரனை கொலை செய்த கொலைக் கருவியான
சிலுவையின் மீது பிரியம் கொள்ள உங்களுக்கு எப்படி மனம் வருகிறது ?இது மனித இயல்புக்கே முரண் அல்லவா ?"

"அது மட்டுமல்ல ! சாதாரணமாக கொலைக் கருவி யார் கையில் இருக்கிறதோ அவன்தான் கொலைகாரனாய்இருக்க முடியும் ! அல்லது அவனுக்கும் கொலைக்கும் எப்படியேனும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் . இல்லையா ? சாதரணமாக இந்த முடிவுக்கே எல்லோரும் வருவர் !"

"ஆனால் கிரிஸ்துவர்கலாகிய நீங்கள் உங்கள் இயேசு பெருமானை கொலை செய்த ஆயுதத்தை கையிலும் கழுத்திலும் மாட்டிக் கொண்டு போற்று கிறீர்களே ! இதைப் பார்க்கும் எந்த மனிதனுக்கும் ஒருவேளை இயேசுவை நீங்கள் தான் கொலை செய்தீர்களோ என்ற சந்தேகம் வராதா ?"

"இயேசு கிருஸ்துவைசிலுவையில் அறைந்து கொன்ற யூதர்களுக்கு வேண்டுமானால் சிலுவை புனிதச் சின்னமாக விளங்கலாமே தவிர கிருஸ்துவர்கலாகிய உங்களுக்கு எப்படி அது புனிதமாக இருக்க முடியும்? "

"......................................" (பதில் இல்லை)

" சார் நான் என் மனதில் எழுந்த சில சந்தேகங்களைத்தான் கேட்டேன் ! நீங்களோ மௌனம் சாதிக்கிறீர்கள் ! ஆரம்பத்தில் இருந்த ஆர்வம் உங்களிடம் மறைந்து விட்டது போல் தெரிகிறது ! எனது கேள்விகளால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்குமானால் நான் இனி கேட்கவில்லை ! சரியா சார் ?"

"இல்லை; வருத்தம் இல்லை ! ஆனால் எங்கள் கிருஸ்த்துவ மதத்தைப் பற்றி ஒரு முஸ்லிம் எப்படியெல்லாம் கருதுகிறார் எனபது குறித்து நேரடியாக அறிந்து கொள்ள இந்த உரையாடல் ஒரு வாய்ப்பு ! அதற்காக ரொம்ப தேங்க்ஸ் ! நீங்கள் கேட்ட கேள்விகள் எனது சிந்தனையைத் தட்டி எழுப்பியிருக்கிறது ! அதற்காகவும் நான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் ! "
பாதிரியாரான அந்த ரயில் நண்பர் இப்படிக் கூறி முடிப்பதற்கும் ரயில் நெல்லை சந்திப்பை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது, கைலாகு கொடுத்தபடி இருவரும் விடைபெற்றோம்.

(சிலேடைக் கவிஞர் சிராஜ் அப்துல் ஹை -என்ற நூலிலிருந்து பீ. எம் கமால்,கடையநல்லூர்)

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க கூடாது: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்.


வாஷிங்டன், மார்ச் 02 : ஈரானிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவுக்கு நிர்பந்தம் அளித்து வருகிறது. இந்தியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளுடன் இவ்விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார். அமெரிக்க செனட்டர்களுடன் நடத்திய சந்திப்பில் ஹிலாரி இதனை தெரிவித்தார். ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் இந்நாடுகளுக்கு எண்ணெய் நெருக்கடி ஏற்படாது என்றும், அமெரிக்கா முன்வந்து மாற்று வழிகளை உருவாக்கும் என்றும் ஹிலாரி கூறினார். மூன்று நாடுகளுடனும் கூடுதல் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இந்நாடுகள் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. நமது அணு வல்லுநர்களும், தூதரக பிரதிநிதிகளும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். ஈரான் மீது கூடுதல் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.’ என்று ஹிலாரி கூறினார். அணுசக்தி துறையில் தனது சாதனையை ஈரான் வெளியிட்டதை தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. கடுமையான தடைகளை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ஈரான் மீது விதித்தாலும் ஈரான் அசரவில்லை. சில ஐரோப்பிய நாடுகளுக்கு இனிமேல் எண்ணெய் ஏற்றுமதிச் செய்யமாட்டோம் என்று ஈரான் அறிவித்திருந்தது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் மேலும் ஓர் அதிசயம்.!! முயல் உருவ உருளைக்கிழங்கு..




முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டை மன்னார்குடி சாலையில் உள்ள திரு.செந்தில் குமார் என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு காய்கறிகள் வெளிஊரிலிருந்து வரவழைக்கப்பட்டு வியாபாரம் செய்பவர். நேற்று அவர் காய்கறி கடைக்கு வந்த உருளைக்கிழங்கு மூட்டையை பிரித்த போது அதில் ஒரு உருளைக்கிழங்கு மட்டும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டது. பிறகு அவற்றை பார்த்தபோது அசல் முயல் குட்டியைப்போல் உருவம் காணப்பட்டது. எனவே இதனை மக்கள் வேடிக்கையுடன் பார்த்து செல்கின்றனர்.
source from: www.muthupettaiexpress.com, www.mttexpress.com
தெகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை, ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் கேஸ் சப்ளை செய்வதில் குளறுபடி பொது மக்கள் ஆவேசம்.!!



முத்துப்பேட்டை, மார்ச் 01 : முத்துப்பேட்டையில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சமையல் கேஸ் சிலிண்டர்களை திருத்துறைப்பூண்டியிலிருந்து இன்டன் கேஸ் சிலிண்டர்கள் மரியா கேஸ் நிறுவனம் சப்பளை செய்து வருகிறது. சமீப காலமாக கேஸ் சிலிண்டர்கள் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் எப்பொழுதாவது லாரியில் வந்து சிலிண்டர்களை சப்பளை செய்யும் போது பல்வேறு குளறுபடிகள், இடைத்தரகர்கள் தொந்தரவு என மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. என்று புகாருக்கு மேல் புகார் எழுந்துள்ளது ஆனால் சப்ளை செய்யும் நேரங்களில் போலிஸ் பாதுகாப்பு போடுவது வழக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வழக்கம் போல் நேற்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் லாரியில் சிலிண்டர் விநியோகம் செய்தனர். அதில் மொத்தம் 290 சிலிண்டர் மட்டுமே கொண்டுவரப்பட்டன. ஆனால் நீண்ட வரிசையில் சுமார் 500 ௦௦க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்படி சப்பளை செய்யும் போது இடைத்தரகர்கள் கூடுதலாக சிலிண்டர்களை பெற்று சென்றதால் அப்போது மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடன் அப்பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஜோதி முத்து ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் சிலிண்டர்கள் வந்த வண்டியை முற்றுகையிட்ட மக்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சுமூகம் ஏற்பட்டு மறியலும் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)