முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தெற்குத்தெரு இளைஞர்கள் நடத்தும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம்




முத்துப்பேட்டை,மே 01 : முத்துப்பேட்டை தெற்குத் தெரு இளைஞர்கள் மற்றும் முத்துப்பேட்டை வெளிநாட்டுவாழ் நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நமது அரபு சாகிப் பள்ளிவாசலில் இன்று 01.05.2012 முதல் துவங்கி அடுத்த மாதம் 01.06.2012 வரை நடைபெறும். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நல்ல முறையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் முடிவில் 30 நாள் நடைபெற்ற பாடத்தை குறித்து தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெரும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இதன் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். M. தப்ரே ஆலம் பாதுஷா தெற்குத் தெரு அவர்கள்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), O.M.சுபைத் கான்

திருக்குர்ஆனை எரித்து மகிழ்ந்தான் கிறிஸ்த்தவ பாதிரி - அமெரிக்காவில் அசிங்கம்.


அமெரிக்க, மே 01 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு மரணத்தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, இறைத்தூதரின் படத்தை வரைவேன் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்காவைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்துள்ளான். ஃப்ளோரிடாவைச் சார்ந்த பாதிரியான டெர்ரிஜோன்ஸ் இந்த ஈனத்தனமான செயலலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் 271 டாலர் மட்டும் அபராதம் விதித்துள்ளது. மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஜோன்ஸிற்கு அடிகொடுத்து கவனித்தனர். ஆனால், உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஜோன்ஸ் கைது செய்யப்படவில்லை. சில தினங்களுக்கு முன்பு ஜோன்ஸ், புனித திருக்குர்ஆனின் பிரதியை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதற்கு முன்பும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான் ஜோன்ஸ். ஆனால், அமெரிக்க அரசு ஜோன்ஸ் மீது உரிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)