முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நோன்பிருந்து இப்தார் விருந்து கொடுத்த திருமாவளவன் :வேற்றுமுகம் காட்டும் அரசியல் வாதிகளுள் மாற்றுமுகம் !!!

இஸ்லாமியர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி வந்து போராட்ட  களத்தில் சிங்கமாய் கர்ஜிப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் .அவர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் அளவில்லா அன்பும் ,ஈடு இணையற்ற  கருணையும் கொண்டவர் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று .

இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை சகோதரர் தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக அதிகாலையில் எழுந்து சஹர் செய்து ரமலான் நோன்பிருப்பதை கடைபிடித்து வருகிறார் .

வழக்கம்போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் இந்த வருடமும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பை கடைபிடித்தார் .

வழக்கம் போல் மூன்று நாட்கள் மட்டுமே நோன்பிருக்கும் தொல்.திருமாவளவன் இந்த வருடம் நான்கு நோன்பை கடைபிடித்தார் .

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை அபூ பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி ,SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர் முஹம்மது முனீர் ,இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் ,அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்போலோ ஹனீபா ,சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலைநாசர்,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் இஸ்மாயில் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் ம்ற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட  கட்சி  நிர்வாகிகள்  வாழ்த்தி பேசினர்.


தொகுப்பு ஜே :ஷேக் பரீத் 

பட்டுக்கோட்டையை ஸ்தம்பிக்க வைப்போம் -முத்துப்பேட்டையில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு !!!











கடந்த 10-08-2014 அன்று பட்டுக்கோட்டையில் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளையின் முன்னாள் செயளாலர் சகோதரர் சாதிக் மற்றும் அவர்சகோதரர் யூசுப் இருவரும் குடும்பத்தோடு காரில் வந்துகொண்டு இருக்கும்போது அவரையும் அவர்குடும்பத்தாரையும் தேவையில்லாமல் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தீட்டியுள்ளார் போக்குவரத்து காவலர்

ஏன் தேவையில்லாமல் திட்டுகிற்ரிர்கள் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்க போகிறேன் என் சொல்லிவிட்டு பொலிஸ் ஸ்டேசன் வந்தனர்

இவர்களை பிந்தொடர்ந்து வந்த அந்த காவலர் ஒரு குடிகாரன் போல லத்தியை எடுத்து போலீஸ் ஸ்டேசன் உள்ளேயே வைத்து உயிர் போகும் அளவுக்கு தாக்கியுள்ளார் இதில் அடிதாங்காமல் யூசுப் அவர்கள் மயக்கமடைந்தார்.

தனது சகோதரன் தாக்கப்படுவதை பார்த்து பொருக்காமல் நியாயம் கேட்ட சகோதரியையும் கேவலமாக திட்டியுள்ளார் அந்த வெறியர்

இப்படி ஆசைதீர அநியாயம் செய்தபின்பு வெளியே அனுபியுள்ளார்கள்

லோக்கல் பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில் அந்த போக்குவரத்து காவலர் பலத்டவை இதே போல நடந்து தலைமை அதிகாரி வார்னிங் பன்னியுள்ளதாகவும் கூறினார்.


இந்நிலையில்
  முத்துப்பேட்டை கிளைகளின் சார்பில் மஸ்ஜிதுன் நூரில் ஆலோசனை கூட்டம் புரைதா மண்டல தலைவர் செய்யது இபுறாகிம் தலைமையில் நடைபெற்றது. இதில் 19.8.2014 அன்று நடைபெறும் பட்டுக்கோட்டை காவல்நிலையம் முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்துச்செல்ல ஆலோசனை செய்யப்பட்டது. இரண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அதிக அளவில் சென்று பிரச்சார பணி செய்வது என் முடிவு செய்யப்பட்டது.

தொகுப்பு ஜே :ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)