முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இடும்பாவனம் கிராமங்களில் முத்துப்பேட்டை தமுமுகவினர் நிவாரணம்








முத்துப்பேட்டை, நவம்பர் 29: முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனம் கிராமத்தில் கடும் மழையால் குடிசைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த முத்துப்பேட்டை தமுமுகவினர் நகர தலைவர் அண்ணன் சம்சுதீன் தலைமையில் சென்று நேரில் பார்வையிட்டனர். அதன் பின் முத்துப்பேட்டை திரும்பிய தமுமுகவினர் அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் (ப்ரெட்,பிஸ்கெட்,பால் பவுடர்) மற்றும் பணம் ஆகியவைகளை திரட்டிக்கொண்டு மீண்டும் இரவு நேரம் என்று பாராமல் நகர தலைவர் அண்ணன் M.சம்சுதீன் (முன்னாள் மாவட்ட செயலாளர்) தலைமையில் இடும்பாவனம் சென்ற தமுமுகவினர் அங்குள்ள மக்களுக்கு நிவாரணம் மற்றும் சிறய அளவில் பணமும் 50 வீடுகளுக்கு வழங்கினர்.
இதில் நகர செயலாளர் M.M.சீமான், நகர பொருளாளர் A.தாவுதுஷா, மாவட்ட துணை தலைவர் A.அப்துல் அலீம், மா.மாணவரணி செயலாளர் பைசல், மருத்துவ அணி செயாலளர் நபீல் மற்றும் தமுமுக நகர தொண்டரணியினர் உடன் இருந்தனர்.
எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தும் முத்துப்பேட்டையிலிருந்து முஸ்லிம்கள் (தமுமுகவினர்) வந்து உதவுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது என்று அம்மக்கள் கூறியபோது தமுமுகவினர் மக்கள் சேவையின் நலனை உணர்ந்தனர்.

ரிப்போர்ட்டர் இல்யாஸ்  

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)