முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருமணச்செய்தி: "A .அப்துல் சமது, M .நிலோபர் நிஷா"






முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : அல்லாஹ்வின் திருப்பெயரால். நிகழும் ஹிஜ்ரி 1433 - ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை 20, 16 .12 .2011 வெள்ளிக்கிழமை மதியம் 1 .30 மணியளவில் முத்துப்பேட்டை செக்கடி தெருவை சேர்ந்த மர்ஹும் PS . அன்வர் பாட்சா அவர்களின் புதல்வர் தீங்குலச்செல்வன் A .அப்துல் சமது மணாளருக்கும், உடையநாடு, களனிவாசல் ஊரை சேர்ந்த M .மாருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M .நிலோபர் நிஷா மணாளிக்கும் இரு வீட்டார் அனுபதி பெற்று மாப்பிளையுடைய அரைபவுன் மகருக்கு வக்கீலாக இருந்து ஒடைய நாடு ஜும்மா பள்ளி வாசல் இமாம் திருமணத்தை நடத்தி வைத்தார். ("பாரக்கல்லாஹு லக்க, வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீஹைர்")
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா

மேலும் மாப்பிள்ளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 99657 77838

முத்துப்பேட்டை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : முத்துப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பை சேர்ந்த இருதரப்பு மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் பிரச்சனை குறித்து தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பினரும் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் இரு தரப்பினர்களுக்கு மத்தியில் தல 10 பேரை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பு மாணவர்களும் நேற்று காலை சுமார் 10 மணியளவில் ஒன்று திரண்டு பள்ளிக்கூட உல்வளாகத்திலே உள்ளிருப்பு போராட்டத்தில் இடுபட்டனர். இதனைக்கண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் சுமார் 2 மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் அனைத்து மாணவர்களும் அப்போராட்டத்தை கலைத்துவிட்டு வழக்கம்போல வகுப்பறைக்கு சென்றார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் பாலா (ஆலங்காடு), ரிப்போர்ட்டர் யூசுப் அலி.

சிறுபான்மையர்களின் தினம் கொண்டாட அனைத்து ஜமாத்தார்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அழைப்பு...


திருவாரூர், டிசம்பர் 17: திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு ச. முனியநாதன் அவர்கள் சிறுபான்மையோர் தினம் 18 .12 .2011 ஆம் தேதி அன்று கொண்டாடும் விதமாக அனைத்து மதத்தவருக்கும் நேற்று கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அக்கடிதம் பின்வருமாறு: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதவழி சிறுபான்மை யினர்களான இஸ்லாமியர், கிருத்தவர், புத்தமதத்தினர், பாரசீகர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் சிறுபான்மையினருக்காண மத்திய / மாநில அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் 18 .12 .2011 அன்று மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் பிரநிதிநிகளுடன் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படியும், தங்களின் ஆலோசனைகளை தெரிவித்திடவும் கேட்டுக்கொள்கிறேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய போலீசார்


முத்துப்பேட்டை, டிசம்பர் 16 : முத்துப்பேட்டையை அடுத்து செங்காங்காடு என்ற கிராமத்தில் முருகானந்தம் வயது 32 என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் தில்லைவிலாகத்தை சேர்ந்த முன்னாள் பிரசிடென்ட் லோகநாதன் என்பவர் தில்லைவிலாகத்திர்க்குட்பட்ட ஓர் பள்ளிகூடத்தை கட்டுவதற்கு முருகானத்தத்திர்ற்கு சொந்தமான இடத்தில் பள்ளிக்கூடம் கட்ட அனுமதி கேட்டுள்ளார். இதற்க்கு சம்மதம் தெரிவித்து அந்த இடத்திற்குரிய பத்திரத்தை லோகநாதனிடம் கொடுத்துள்ளார். ஆனால் முருகானந்தம் கொடுத்த இடத்தில் பள்ளிக்கூடத்தை கட்டாமல் வேறு இடத்தில் கட்டியுள்ளார் லோகநாதன். இதனை கேள்விப்பட்ட முருகானந்தம் நான் கொடுத்த பத்திர இடத்தில் பள்ளிகூடத்தை கட்டவில்லை எனவே என்னுடைய பத்திரத்தை திரும்ப தருமாறு பணித்துள்ளார். இதனால் அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இவற்றில் மனம் உடைந்து போன முருகானந்தம் 10 தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டு முத்துப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் லோகநாதன் மீது புகார் அளித்துள்ளார். இப்பூகாரை கொடுத்துவிட்டு வெளியில் வந்த முருகானந்தம் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்னையை தன் மீது ஊற்றி கொளுத்த முயர்த்சித்துள்ளார். இதனை பார்த்த போலீசார் முருகேசன் அவர்கள் விரைந்து வந்து முருகானந்த்தத்தை தடுத்துநிருத்தினார். அவர் சாப்பிட்ட தூக்க மாத்திரை காரணத்தால் காவல் நிலையம் முன்பு மயக்கம் அடித்து கீழே விழுந்துள்ளார். உடனே போலீசார் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமத்தித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முத்துப்பேட்டை சரக DSP கோபி அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி, EK . முனவ்வர் கான். அவு மர்வா.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)