முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 19.02.2012 நேற்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்.





முத்துப்பேட்டை,பிப்ரவரி 20: போலியோ சொட்டு மருந்து (இளம்பிள்ளை வாத தடுப்பு) சிறப்பு முகாம் நேற்று 19.02.2012 நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பிறந்த குழைந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை போலியோ சொட்டு மருந்து ஊற்றுவது வழக்கம். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை நகரில் மதியலன்காரம், செம்படவன் காடு, முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரம், மற்றும் தர்ஹா ஆகிய இடங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நர்ஸ் அவர்கள், போலியோ சொட்டு மருந்து குறித்து அனைத்து தாய்மார்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது என்றும் சென்ற முகாமை விட இந்த முகாமில் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து பெற்றோர்கள் சொட்டு மருந்துந்தை போட்டு சென்றார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.நேற்று குழந்தைகளை அழைத்து வராத வீட்டிற்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடா இருப்பதாகவும் அப்போது அவர் மேலும் தெரிவித்தார்.
source from: www.mttexpres.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

ANA . நவாப்

PFI நடத்தும் வலிமையான மக்கள், வலிமையான தேசம் ஓர் பார்வை.






முத்துப்பேட்டை, பிப்ரவரி 19 : பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் வலிமையான மக்கள், வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 20 வரை நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் முத்துப்பேட்டையில் முதலாக உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சேவைகலையும் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் இன்று நாடுமுழுவதும் 19 ஆம் தேதி இந்தியா முழுவதும் சுத்தம் செய்யும் நாளாக அறிவிக்கப்பட்டு பட்டி தொட்டி எல்லாம் சுத்தம் செய்யப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த PFI - யின் முத்துப்பேட்டை நகர தலைவர் ஜனாப். M . முஹம்மது மாலிக் அவர்கள், கடந்த 12 ஆம் தேதி PFI சார்பாக மக்களுக்கு உடல் திறன், உடல் ஆரோகியம், ஆகியவையின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று குட்டியார் ஜும்மாஹ் பள்ளி வாசலை சுத்தம் செய்யும் பணியை நடத்தினோம் என்றும், இது போன்று இந்தியா முழுவதும் அரசு பொது மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளிவாயில்கள், மற்றும் பொது இடங்கள் ஆகிய இடங்களில் PFI - யை சேர்ந்த நாங்கள் சுத்தம் செய்து நாங்கள் வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். உடன் PFI - யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, PFI - யின் உறுப்பினர்கள்,கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)