முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேட்டை இமாம் பத்ரு ஜமான் அவர்களின் மகன் பல்கலைகழக அளவில் முதல் இடம் பிடித்து சாதனை !










அதிரை, ஆகஸ்ட் 28: அதிரையை சேர்ந்தவர் பத்ரூஜமான் இவர் தற்போது முத்துப்பேட்டையில் பேட்டை பள்ளி வாசலில் இமாமாக இருந்து வருகிறார். இவரது மகன் முஹம்மது ஹுசைனுதீன். சென்ற 2013 - 15 ஆம் கல்வியாண்டில் நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் பாடப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வந்தார். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம் சார்பில் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் முஹம்மது ஹுசைனுதீன் பல்கலைகழக அளவில் முதல் இடம் படித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். நமது கல்லூரிக்கும் - பிறந்த ஊருக்கும் பெருமை தேடித்தந்த மாணவனை கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், துணை முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக பணியாளர்கள், சக மாணவர்கள் - பெற்றோர் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாணவன், கல்லூரியில் படிக்கும் காலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும், பாராட்டுதலையும் தொடர்ச்சியாக பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்...






தஞ்சை, ஆகஸ்ட் 24: தஞ்சை மாவட்டம் இராஜகிரியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்டத்தலைவர் குடந்தை ஜாபர் தலைமையில். நடைபெற்றது.மாநிலச்செயலாளர் ரஸ்தாசெல்வம் மாவட்டபொருளாளர் ஹனாஇஸ்மாயில் மாவட்டசெயலாளர்முகம்மதுநபில் மா.தகவல் தொடர்பாள் ஹாஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கமாக மாநிலப்பேச்சாளர் ஒளிமுகம்மது பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற தலைப்பிலும் மாநிலசெயலாளர் நா.கோவில் ஜாஃபர் வஃக்பு சொத்துக்களை மீட்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மாநிலச்செயலாளர் அப்துல்காதர்மன்ப ஈ அப்பாவிசிறைவாசிகளின் விடுதலை என்ற தலைப்பிலும் மாநிலதுணைத் தலைவர் முகம்மதுமுனீர் முஸ்லிம்களுக்குதனி இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் மாநிலத் தலைவர் S.M. பாக்கர் ஊடகங்களின்சதிவலைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவாக ஜாவித்முகம்மது நன்றியுரை கூறினார்
கூட்டம் ஆரம்பம் முதல் மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தபோதும் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் திரண்டு வருகை தந்துஇருந்த்து குறிப்பிடத்தகுந்த்து.
அன்று காலை இந்தியதவ்ஹீத்ஜமாஅத் சார்பில் நடைபெற இருந்த மைதீன் மருத்துவமனை மீண்டும் செயல்பட வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டம் இறுதிநேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது்
கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது தாக்குதல் நடைபெற இருந்த சம்பவத்திற்கு கடும்கண்டணம் தீர்மானமாக நிறைவேற்றியதுடன் அவருக்கு தமிழகரசு உரியபாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது்

Reported By 

SMB  

முத்துப்பேட்டையை சேர்ந்த புதிய இளம்வயது மருத்துவர் சதாம் ஹுசைன்





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டையில் நேற்று பங்களாவாசல் அருகில் புதிய மருத்துவமனை ஒன்றை துவக்கியுள்ளார்கள். தன் கடின உழைப்பால் மிக நல்ல முறையில் படித்து அரசு மருத்துவ கல்லூரியில் பட்டம் வாங்கி அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவராக தந்தையின் கனவை நனவாக்கியுள்ளார் மருத்துவர் க.சதாம் ஹுசைன். முத்துப்பேட்டை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தந்தையின் கனவை நனவாக்க தந்தையின் முன்னிலையிலும், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையிலும் மருத்துவமனையை துவக்கியுள்ளார். இவரின் இந்த முயற்சி வெற்றி பெறவும் இவர்மூலம் ஏழை எளிய மக்கள் பயனடையவும் வல்ல அல்லாஹ் உதவிசெய்வானாக...

BSNL நிறுவனத்தின் நிலைகளாவன:




சென்னை, ஆகஸ்ட் 20: பி.எஸ்.என்.எல் ஒரு 100 % அரசு நிறுவனம். கொள்கை அளவு முடிவுகளை பி.எஸ்.என்.எல் ஐ சார்ந்த எந்த ஒரு உயர் அதிகாரிகளும் எடுக்க முடியாதபடி கைகள் கட்டப்பட்டிருப்பதை தயவு செய்து அறிக.
பின் முடிவுகளை எடுப்பவர்கள் யார்??? 
1) பி.எஸ்.என்.எல் ஐ சாராத DOT ஐ சார்ந்த வாடகைக்கு இருக்கும் ITS முதலாளிகள் மட்டுமே.. முடிவெடுக்கிறார்கள்… [நமது சொந்த வீட்டில் யாரோ மூன்றாம் மனிதர் வாடைக்கு இருப்பதை போல].
2) 2008-2012 காலகட்டத்தில் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் பி.எஸ்.என்.எல் இன் விரிவாக்கத்திற்கு முடிவு செய்த டென்டரை…சில அல்ப காரணங்களுக்காகவும்  அரசியல் பழிவாங்கல் செயலாகவும் பின் அமைச்சராக வந்த ராசா தடை செய்தது  பி.எஸ்.என்.எல் க்கு போடப்பட்ட முதல் முட்டுக்கட்டை.
3) பி.எஸ்.என்.எல் மற்ற எந்த தனியார் கம்பெனிகள் போல் ஆயுட்கால வேலிடிட்டி [TRAI சட்டதிட்டதிற்கு புறம்ப்பாக] தருவதில்லை. நீங்கள் உபயோகிக்கவில்லை என்றால் 180 நாட்களுக்குள் எண்கள் கணக்கிலிருந்து நீக்கப்பட்டுவிடும். ஆகையால் தான் பி.எஸ்.என்.எல் ன் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை மற்ற தனியார் நிறுவனங்களை போல் விண்னை தொடுவதில்லை. 
4) வாடிக்கையாளர்களுக்கு சாதகமான திட்டங்களை அதிகாரிகள் வரையறுதாலும், மேல்மட்ட அளவில் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்று முடிவை எடுக்கும் DOT ஐ எந்த பத்திரிக்கையோ..ஊடகமோ கண்டுகொள்வதில்லை.
5) பி.எஸ்.என்.எல் ன் ஊழியர்களின் எண்ணிக்கையும் சராசரி ஊழியர்களின் வயதும் பி.எஸ்.என்.எல் தற்போது சந்திக்கும் மிகப்பெரிய சவால். இதற்கு அரசோ…நிறுவனத்தின் மேல்மட்ட அதிகாரிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
6) தற்போதைய அரசு.. பி.எஸ்.என்.எல் ன் துறைகளை பிரித்து தனியார் மயமாக்குவதிற்கு மிகவும் முனைப்பக உள்ளது.
பி.எஸ்.என்.எல் தனியார் ஒருவரின் சொத்து அல்ல… லாப வருமானமும் நஷ்டமும்.. மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று…பி.எஸ்.என்.எல் ன் லாபம்… அதன் ஊழியர்களுக்கு அல்ல… அரசிற்கே [DIVIDENT TO PRESIDENT OF INDIA] கொடுக்கப்படுகிறது..
சட்டியில் இருந்தால் தானே… அகப்பையில் வரும்…..!
ஒட்டப்பந்தயத்தில் ஓடும் ஒருவனின் முதுகில் 100 கிலோ ஏற்றி வைத்து ஓட சொன்னால் அவனால் ஓடி ஜெயிக்க முடியுமா…?????
1GB ரூபாய் 89 க்கு கொடுத்த ஏர்டெல் இன்றைய விலை ரூ 256. தனியார் நிறுவனங்களின் அனைத்து திட்டங்களும் இனிப்பு தடவிய கசப்பு தான். 

கீழ்க்கண்ட இந்திய அரசு நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைபடுகிறது.


இந்தியா, ஆகஸ்ட் 19: கீழ்க்கண்ட அரசு நிறுவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவைபடுகிறது. எனவே முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் உடனே இந்த பதிவை கண்டு தங்களுடைய பதிவை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நிறுவனம்: Controller General of Patents Designs & Trademarks (CGPDTM)
காலியிடங்கள்: 459
பணிகள்: Examiner of Patent & Design
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://goo.gl/tO3NGF

நிறுவனம்: Tamil Nadu Public Service Commission (TNPSC)
காலியிடங்கள்: 89
பணிகள்: Maternal and Child Health Officer - 89
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://goo.gl/TPVXIt

நிறுவனம்: Neyveli Lignite Corporation (NLC)
காலியிடங்கள்: 56
பணிகள்: Manager, Hindi translator, etc.,
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://goo.gl/IpyszT
நிறுவனம்: Department of Atomic Energy, General Services Organisation, Kalpakkam
காலியிடங்கள்: 05
பணிகள்: Scientific Officer, Scientific Assistant, Pharmacist, Technician
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.igcar.ernet.in/recruitment/Advt2_GSO2015.pdf

நிறுவனம்: Staff Selection Commission (SSC), Chennai
காலியிடங்கள்: 7
பணிகள்: Technical Superintendent (Processing), Technical Superintendent (Weaving), Textile Designer, Technical Assistant(Wildlife preservation),
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.sscsr.gov.in/SSC-SR-ADVT-NO-2OF2015.pdf

நிறுவனம்: National Mineral Development Corporation (NMDC)
காலியிடங்கள்: 13
பணிகள்: Jr. Assistant – 1, Micellaneous Attendant (trainee) - 12
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: https://www.nmdc.co.in/…/Care…/PWD%20032015%20for%20web1.pdf

நிறுவனம்: Aiports Authority of India
காலியிடங்கள்: 52
பணிகள்: Junior Assistant (Fire Services)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.aai.aero/employment_ne…/Fire_Recruitment_2015.pdf
நிறுவனம்: Cabinet Secretariat, Government of India
காலியிடங்கள்: 20
பணிகள்: Interpreter
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.08.2015
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண: http://www.davp.nic.in/WriteReadDa…/…/eng_58101_15_1516b.pdf

Reported By

அப்துல் ரஹ்மான். 

INTJ தஞ்சையில் நடத்த இருக்கும் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டம்...


தஞ்சாவூர், ஆகஸ்ட் 19: தஞ்சையில் மாபெரும் 5 அம்ச கோரிக்கை விளக்க போத்துக்கூட்டத்தை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வருகிற ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடத்த உள்ளது. இதில் 5 அம்ச கோரிக்கைகளான: 1) தனி இடஒத்துக்கீடு, 2) வக்பு நிலா மீட்பு, 3) ஷரீயத் நீதி மன்றங்களுக்கு சட்ட அதிகாரம், 4) சிறைவாசிகளின் விடுதலை, 5) பூரண மது விளக்கு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலிருத்து நடைபெற உள்ளது.  இடம்: ஜமாலியா தெரு ராஜகிரி, நேரம்: மாலை 6 மணிக்கு. 

Reported By 

SMB 

பிறை விசயத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி முயற்சி...!!!


சென்னை, ஆகஸ்ட் 19: பிறையை கண்ணால் பார்த்து அமல் செய்வதே நபிவழியாகும்.பிறை விசயத்தில் தற்பொழுது நிகழும் சிறு குழப்பத்தை சரி செய்யும் பொருட்டு ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி  "பிறை ஓர் ஆய்வு"என்ற தலைப்பில் மார்க்க மற்றும் விஞ்ஞான அடிப்படையில் டிவிடி தயார் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
நேற்று(17.08.15)ஐஎன்டிஜேவின் மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிலால் கமிட்டியை சேர்ந்த பிர்தவுஸ்,முகம்மது முகைதீன்,முகம்மது ஷிப்லி ஆகியோர் அரசு தலைமை காஜி மற்றும் ஜமாத்துல் உலமா சபையை சேர்ந்த தர்வேஷ் ரசாதி ஆகியோரை சந்தித்து,பிறை ஓர் ஆய்வு டிவிடியை வழங்கினர்.
ஐஎன்டிஜே ஹிலால் கமிட்டி பிறை விசயத்தில் கருத்தொற்றுமை ஏற்படுத்த, தொடர்ந்து பல்வேறு அமைப்பு பிரதிநிதிகளை சந்திக்க உள்ளனர்.

Reported By 

SMB 

துபாயில், 330 பேர் இஸ்லாத்தை ஏற்றனர், துபாய் இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிடு...


துபாய், ஆகஸ்ட் 19: இஸ்லாமிய விவகாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இஸ்லாமிய விவகாரத்துறை சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முஹம்மது பின் ராசீத் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் பல் சமய உரையாடல் கருத்தரங்கம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் பங்கேற்றனர். இஸ்லாம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டதுடன் அவர்கள் தங்களுக்கு இஸ்லாம் குறித்து ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர். மேலும் இதில் துபாயில் 330 ரமலான் மாதத்தில் இஸ்லாத்தை ஏற்றனர். இவர்களில் 92 பேர் ஆண்கள், 238 பேர் பெண்கள் ஆவார்கள். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Reported By 

முஹம்மது இல்யாஸ்.

முத்துப்பேட்டை நகரம் முழுவதும் காங்கிரஸ் கொடி ஏற்ற கூட்டத்தில் முடிவு.



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் கூட்டம் தலைவர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் நாச்சிக்குளம் தாஹிர் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் எஸ்.எம்.டி.நாசர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முத்துப்பேட்டை நகரம் முழுவதும் புதியதாக கொடி மரம் அமைத்து கொடி ஏற்றப்படும். மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவரின் சிறப்பான பணிக்கு இந்த கூட்டம், பாராட்டை தெரிவிக்கிறது. உட்பட முக்கிய தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகர துணைத் தலைவர்கள் வேல் துரை, குலாம்ரசூல், குமார் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்த சாமி மற்றும் நிஜாம் மைதீன் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர்.

எதிரியையும் மன்னித்து வாழவைத்து அழகு பாருக்கும் மார்க்கம் உலகிலே இஸ்லாம் ஒன்றுதான்.









துபாய், ஆகஸ்ட் 18: குஜராத்தில் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை கொன்று குவித்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.அவர்களின் சொத்துக்களை சூரையாடியதர்க்கு காரணமாக இருந்தவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த மாநிலத்தில் (குஜராத்) இன்றுவரை அகதிகளாகவே வாழ்கின்ற சூழல்.. இத்தனைக்கும் மத்தியில் அமெரிக்காவே பலமுறை விசா கொடுக்க மறுத்த ஒரு மாபெரும் குற்றவாளி. இருந்தாலும் நாட்டின் பிரதமர் இந்த மோடி இஸ்லாமியர்களுக்கு செய்த அத்தனை துரோகங்களும் அறிந்து இருந்தும் தன் நாட்டுக்கு விருந்தாளியாக வந்தார் என்பாதால் அவரை (விருந்தாளியை) கண்ணியப்படுத்துகிரார்கள் இஸ்லாமியர்கள் என்றால், இதுதான் இஸ்லாம் கற்று கொடுக்கும் அழகிய மாண்பு.




அது மட்டும் அல்ல இந்த நாட்டில் எங்க மதத்தவருக்கு கோவில் கட்டி தாருங்கள் என்று கேட்டதற்கு அதையும் நாங்கள் கட்டி தருகிறோம் என்று கூறினார்களே இதுவா தீவிரவாதி மதம் பிற மதங்களை திட்டி மத்திக்க தெரியாதவன் உண்மையான முஸ்லிம் அல்ல அவ்வாறு எங்களது முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எங்களுக்கு கற்று தரவில்லை, இதன் மூலமாவது இஸ்லாமியர்களை அளிக்க முயலும் என்னத்தை நிறுத்துக்கொள்வது நல்லது. இல்லை எனில் அல்லாஹ் உங்களை அழித்துவிடுவான் அதற்க்கு நேரும் காலம் தேவையில்லை .



Reported By 



முஹம்மது இல்யாஸ். MBA, MA. Journalism & Mass Communication 

முத்துப்பேட்டை அருகே உலக மக்கள் தொகைதின பரிசளிப்பு விழா!



முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 17: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக மக்கள் தொகை தின விழா வட்டரா அளவிலான பேச்சு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் புஷ்பா தலைமை வகித்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு பேசினார், மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் சுமதி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மிதுன், ஜான்ஜோசிக், வேம்பிரித்தியா, சத்யா, கலைமணிபாரதி, சாதம்உசேன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், சீனிவாசன், ராஜேஷ், ஹரிபாஸ்கர் மற்றும் சுகாதார செவிழியர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

Reported By

முஹம்மது இல்யாஸ். MBA. MA.JMC.

4 முஸ்லிம் மாணவர்கள் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீர் அதிகமானதால் 4 இறப்பு




கும்பகோணம், ஆகஸ்ட் 18: கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரை சேர்ந்தவர் சித்திக். நாகை மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார. இவரது மகன் சல்மான்கான் (15). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
சித்திக்கின் தம்பி இஸ்மத் பாட்ஷாவீண் மகன் யாசர் அரபாத் (14), ஹனிபா (14) ஆகியோர் 9–ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை இவர்கள் 3 பேரும் கும்பகோணம் அருகே உள்ள மணஞ்சேரி பகுதியில் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகம் வருவதால் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர் அவர்களின் உடல்கள் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களுடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் ஈடுபட்டு உடலை மீட்டனர். தற்பொழுது பிரேத பரிசோதனைக்கா கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது. மருத்துவமணையில் இருந்து உடல்களை பெறுவதற்க்காக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் களத்தில் உள்ளார் .

தொடர்புக்கு : 9952838692

இஸ்லாத்தை ஏற்ற ராஜ வேணி!


சென்னை, ஆகஸ்ட் 15: சென்னையின் குடிசைப் பகுதி ஒன்றைச் சேர்ந்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் தனது சகோதரிக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்லி அவரின் தங்கை ராஜவேணி இன்று இஸ்லாத்தை ஏற்று ரபியா பானு ஆனார்! அவருக்கு இன்று ஜுமு ஆவில் எனது மனைவி திருக்கலிமாவை சொல்லி கொடுத்தார்!
மேலும் தங்களது அந்த குடிசைப் பகுதியில் மற்ற மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல அழைத்து இருக்கிறார்! அல்லாஹ் அவர் மூலம் அந்த குடும்பத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் நேரவழி காட்ட பிரார்த்திப்போம்.

கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள்.. அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள்.. இன்றைக்கு மாணவர்கள் படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது.


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞரின் பூரண மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நீதி கேட்கும் பேரணி விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. முத்துப்பேட்டையில் தி.மு.க பொதுக்கூட்டத்தில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேச்சு.. இதில் முன்னாள் அமைச்சர் மதிவாணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாவட்ட துணைச்செயலாளரும், நகர செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் வரவேற்று பேசினார். இதில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேசினார் அப்பொழுது அவர் பேசுகையில்: 

தி.மு.க ஆட்சியில் தமிழக முழுவதும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது, பெரிய முதலிட்டார்கள் கொண்டு வரப்பட்டது, அதேபோல் தளபதி தமிழகத்தில் 80ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டில் 62 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு சேர்த்தார். இன்றைக்கு இப்பகுதி ஏழை விவசாயி பெண் கூட சென்னையில் 1.75 லட்சம் சம்பளம் வாங்கிறது என்றால் அது தி.மு.க ஆட்சியால் மட்டும் தான் முடியும். கலைஞர் ஆட்சியில் தெருவுக்கு தெரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஆனால் அம்மா ஆட்சில தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழக முழுவதும் 7312 டாஸ்மாக் பாரையும் திறந்து இருக்கிறார், கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள் அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள், இன்றைக்கு மாணவர்கள் பெற்றோரை பார்த்து படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் போக முடியல ஆனால் மோடியை வரவேற்க ஏர்ப்போர்டில் கால் கடுக்க நிற்கிறார். 

இன்று தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சி நடைபெறவில்லை அடிமை திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது, 127 நாட்களாக சட்டமன்றம் பூட்டி கிடக்கிறது கேவலமாக உள்ளது என்று இவ்வாறு பேசினார். 


கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை.வே.மன்னர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர் கலைவாணிமோகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஜாம்பை.ராமஜெயம், முன்னால் பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம்.

 முன்னால் அவைத்தலைவர்கள் சேக்தாவூது, வீரையன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், கோவிந்தராஜன், அகமது இபுராஹிம், மகாராஜா தமீம், ஒன்றி பொருளாளர் கோவிலூர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், முத்து லட்சுமிசிவா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ஜாம்பைகல்யாணம், சித்தமல்லி அண்ணாத்துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவஅய்யப்பன், ஜகபருல்லா, ஜெய்புநிஷா பகுருதீன், ரெத்தினகுமார், கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆடலரசன், ரவிக்குமார், நகர பொருளாளர் பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் செல்வம், அன்பன் மற்றும் பெருகவாழ்ந்தான் இளங்கோவன் உப்பட்ட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் நகர துணைச்செயலாளர் சியா நவாஸ்கான் நன்றி கூறினார்.

Reported By 

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

தன்னுடைய ஈமானை இழக்காத ஆடு மேய்த்த சூடானி....அவருக்கு சவுதி அரசு 40,000,00 ரியால் லட்சம் வெகுமதி...





சவுதி அரேபியா, ஆகஸ்ட் 15: ஒரு  நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களிடமும் தூய்மையான இறையச்சமும் மறுமை பயமும் எப்போதுமே மனதில் இருந்தால்... அந்நாட்டில், காவல் துறைக்கோ  நீதித்துறைக்கோ சிறைக்கோ தூக்கு மேடைக்கோ எவ்வித வேலையோ அதற்கான அவசியமோ அறவே தேவையே இல்லாமல் போய்விடும்..! இதுதான் நிதர்சனம்..! இதுவே இஸ்லாமிய வாழ்வியல் நெறியில் இறுதியான உறுதியான குறிக்கோள்..! இப்படியான ஒரு நாட்டில், புறத்தில் இருந்து எதிரிகளின் எவ்வித படையெடுப்பும் இல்லாத பட்சத்தில் சாந்தியும் சமாதானமும் போரற்ற சூழலும் என்றென்றும் குடிகொண்டு இருக்கும்.

இறையச்சத்துக்கான முதன்மை பரிசு மறுவுலக சுவனப்பரிசுதான். மற்றபடி இவ்வுலக பரிசு 40 லட்சம் ரூபாய் என்பதெல்லாம் அதுவும் ஒரு சோதனையே என்று கூறிக்கொண்டு... பதிவுக்கு செல்வோம் சகோஸ்.


சவூதி அரேபிய பாலைவனத்தில் ஆடு மேய்க்க வந்த சூடான் நாட்டு ஏழையிடம், அவரின் நேர்மையை சோதிக்கும் வண்ணம், காரில் பிரயாணித்து வந்த சவூதிகள் சிலர் அவர் வைத்திருந்த ஆட்டு மந்தையில் ஒன்றை தமக்கு தரச்சொல்லி கேட்க...

ஆடு மேய்ப்பவரோ, 'இது தனது ஆடில்லை, இன்னொருவரின் ஆட்டு மந்தை, நான் எப்படி இதை உங்களுக்கு தரும் அதிகாரம் பெற முடியும்?' என்று கூறி ஆட்டை தரமறுக்க...

அவரிடம் 'ஆடு தொலைந்து விட்டது' என்று உரிமையாளரிடம் பொய் கூறி விட்டு, தன்னிடம் 200 ரியாலுக்கு விற்றுவிட பணத்தாசை காட்டி வந்தவர்கள் கேட்க... 

அவரோ... இருநூறல்ல... இருநூறாயிரம் ரியால் தந்தாலும் அடுத்தவரின் ஆட்டை நான் உங்களுக்கு விற்க மாட்டேன்' என்று உறுதியாக கூற... 

அந்த சவூதி சோதனையாளர்கள் அவரிடம் 'இங்கு தான் உரிமையாளரோ வேறு யாருமோ உன்னை பார்க்கவில்லையே, பிறகு ஏன் ஆட்டை நல்ல விலைக்கு விற்க பயம் கொள்கிறீர்?' என்று மீண்டும் பணத்தாசை காட்டி வற்புறுத்த, 

அதற்கு அந்த சூடானிய முஸ்லிம் சகோதரன் அல் தய்யிப் யூஸூஃப் கூறியவார்த்தை... மாஷாஅல்லாஹ்... வரலாற்று புகழ்பெற்று விட்டது.

'அல்லாஹ் எங்கு சென்றான்.. அல்லாஹ் என்னை பார்க்கவில்லையா... அவன் உங்களையும் கண்காணிக்கிறானே... " 

...என்று எதிர்கேள்வி கேட்டு ஆட்டை தரவோ விற்கவோ மிகத்திடமாக மறுத்துவிடுகிறார். 

இது பற்றிய சோதனையாளர்களின் காணொளி யூ ட்யூபில் ஏற்றப்பட்டு வெளி வந்தவுடன்... அந்த சூடானிய ஆடு மேய்க்கும் சகோதரருக்கு பரிசுத்தொகை எக்கச்சக்கமாக நாலா புறத்தில் உள்ள நல்லவர்கள் வழியாக அல்லாஹ்வின் அருட்பார்வையில் குவிந்த வண்ணம் உள்ளது. 

அல்ஹம்துலில்லாஹ்.

ஆம்..! அந்த சூடான் சகோதரனுக்கு சவூதியில் உள்ள சூடானிய தூதரகம் தமது இருப்பிடத்துக்கு அழைத்து உபசரித்து... பாராட்டி, 200,000 சவூதி ரியால் பணத்தை  பரிசாக கொடுத்துள்ளது. தூதரக அதிகாரிகளுடன் சகோ. யூசூப் உள்ள புகைப்படங்களை அடுத்து காணுங்கள்.

மாஷா அல்லாஹ். 
இதற்கு முன்னரே... அல் ஹுசைனி பவுண்டேஷன் என்ற நிறுவனம், 20,000 சவூதி ரியால் வெகுமதியை அந்த சகோதரருக்கு வழங்கியுள்ளது. 

மேலும்,  20,000 சவூதி ரியால் பரிசுப்பணமும் வேறோரு இடத்தில் இருந்து அதாவது சில தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சில கொடையாளிகள் குழு மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.

மாஷாஅல்லாஹ், மப்ரூக்.

ஆக மொத்தம்...
தூய்மையான இறையச்சத்துக்கு சுமார் நாற்பது லட்சம் ரூபாய் சன்மானத்தை அல்லாஹ் இவ்வுலகிலேயே சகோ. யூசுஃபுக்கு வழங்கி, தனது திருமறையில் கூறியதை நிறைவேற்றியுள்ளான். இன்னும் பரிசுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

"அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்". (அல்குர்ஆன் 65: 2-3).


Reported By

அப்துல் ரஹ்மான். 


சவுதி அரேபியாவிற்கு உடனடி ஆட்கள் தேவை IT Software Engineer...


சவுதி அரேபியா, ஆகஸ்ட் 14: சவுதி அரேபியாவில் உள்ள மிக பெரிய நிறுவனத்திற்கு IT SOFTWARE ENGINEER படித்த நபருக்கு 1. CNC Machine Operater, Interior Designer ஆகிய பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. விருப்பம் உள்ள நபர்கள் உடனே தொடர்பு கொள்ளவும், இதனுடைய நேர்முகத்தேர்வு வருகிற திங்கள் கிழமை 17.08.2015 அன்று நடைபெறும் என்று இவற்றை ஏற்பாடு செய்பவரான அஸ்ரப் அலி கூறினார். இந்த வேலைக்கு முஸ்லிம்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்புக்கு: Mr. Asraf Ali : +91 9600 72 8855 

முத்துப்பேட்டை போலீசை கத்தியால் குத்திய வாலிபரை 3 தினங்கள் ஆகியும் நீதிமன்றத்தில் ஒப்படைக்காத காவல் துறை.





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 13: இறந்துவிட்டதாக செய்தி பரவியதால் பெரும் பரபரப்பு.. 
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லியின் முயற்சியால்பின்னர் மாலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு. முத்துப்பேட்டையில் கடந்த 10-ம் தேதி பேட்டை பகுதியைச் சேர்ந்த அப்துல் முத்தலிபு மகன் வாசிம்கான்(20) என்ற வாலிபருக்கும் தெற்கு தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது(25) என்ற வாலிபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்பொழுது தகவல் அறிந்து அப்பகுதிக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் ராமானுஜம், போலீசார் அரவிந்த், சுரேஷ் ஆகியோர் சென்றனர். அப்பொழுது அரவிந்த் என்ற போலீஸ் வாசிம்கானை பிடிக்க முயன்றார். அப்பொழுது வாசிம்கானுக்கு அரவிந்துக்கும் தகராறு ஏற்பட்டது. 

போலீஸ் அரவிந்த் போலீஸ் உடை அணியாமல் இருந்துள்ளார். அதற்கு வாசிம்கான் என்னை பிடிக்க நீ யாரு?.. போலீஸ் உடையும் அணியவில்லை.. நீ உயிருக்கு போராடிய ஆட்டு குட்டியை திண்டவன் தானே? என்று பேசினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. அப்பொழுது ஆத்திரம் அடைந்த வாசிம்கான் போலீஸ் அரவிந்தை கத்தியால் குத்தினார். அதனையடுத்து மற்ற போலீசார் வாசிம்கானை மடக்கி பிடித்து கை கால்களை கட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சேர்த்தனர். காயம் அடைந்த போலீஸ் அரவிந்த் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வாலிபர் வாசிம்கான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டது. 

ஆனால் நீதி மன்றத்தில் ஒப்படைக்கவில்லை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கைதியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் வாசிம்கானை அன்று இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்திலும், பிறகு 11-ம் தேதி காலை விசாரணை என்ற பெயரில் எடையூர் காவல் நிலையத்திலும், நேற்று 12-ம் தேதி காலை முத்துப்பேட்டை காவல் நிலையத்திலும் வைத்து வாலிபர் வாசிம்கானை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கை, கால் கட்டப்பட்டிருந்த வாலிபர் வாசிம்கான் உடல் நிலை சோர்வாக காணப்பட்டு மிகமும் மோசமான நிலையில் இருந்துள்ளார். 

இதனைக்கண்ட காவலர் ஒரு ஒருவர் வாசிம்கான் மீது பரிதாபப்பட்டு முக்கிய பிரமுகர் ஒருவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வாசிம்கானின் நண்பர்கள் உறவினர்கள் நேற்று வாசிம்கானைப் பார்க்க முத்துப்பேட்டை காவல் நிலையம் சென்றுள்ளனர். அதற்கு போலீசார் அனுமதிக்காமல் மறுத்து திருப்பி அனுப்பினர். அதனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பல மணி நேரம் காவல் நிலையம் வெளியில் காத்திருந்தனர். அப்பொழுது போலீசார் பரப்புடன் காணப்பட்டதால் வாசிம்கான் இறந்துவிட்டதாக முத்துப்பேட்டை முழுவதும் தகவல் பரவியது. இதனையடுத்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் முகம்மது ஷிப்லி துரிதமாக மாவட்ட எஸ்.பி. மற்றும் உயர் போலீஸ் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். 

மேலும் அவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்ற விதிமுறையை மீறி வாசிம்கானை நீமன்றத்தில் ஒப்படைக்காமல் வைத்து துன்புறுத்தி வருகிறார்கள். வாலிபரின் உடல்நிலை மோசமாக உள்ளது. உடன் நீதிமன்றத்தில் அந்த வாலிபரை ஆஜர்ப்படுத்தாவிட்டால் சென்னையில் டி.ஜி.பி.ஐயை சந்திப்பேன். தமிழக முழுவதும் போராட்டம் வெடிக்கும் என்றார். அதனையடுத்து மாவட்ட எஸ்.பி. ஜெயசந்திரன் உத்தரவுப்படி முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருண் மேற்பார்வையில் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அதிரடியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட வாலிபர் வாசிம்கானை காவல் நிலையம் எதிர்புறம் உள்ள அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளித்துவிட்டு நேற்று மாலை திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனால் வாலிபர் வாசிம்கான் இறந்துவிட்டதாக வெளியான செய்திக்கும் முத்துப்பேட்டையில் ஏற்பட்ட பரபரப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 

இந்த சம்பவம் குறித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கூறுகையில்: காவலர் ஒருவரை தாக்கிய புகாரில் வசீம்கான் என்ற இளைஞரை முத்துப்பேட்டை காவல்துறை கைது செய்து ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்களாக சட்ட விரோத காவலில் வைத்து அடித்து, துன்புறுத்தி வருவதாக இன்று(நேற்று) காலை அவரது உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தனர். உடனடியாக நான் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. அருணை தொலைபேசி மூலம் பல முறை தொடர்பு கொண்டேன். அவர் எடுக்கவில்லை. அவரிடம் கூறும் படி அவரின் உதவியாளரிடம் தெரிவித்தும் அலட்சியப்படுத்திவிட்டார். 

அதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட உளவுத்துறை அதிகாரிகளிடம் முத்துப்பேட்டை காவல்துறையின் சட்ட விரோத நடவடிக்கைகள் தவறானது என தெரிவித்தேன். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு வசீம்கான் என்ற இளைஞர் இன்று(நேற்று) மாலை ரிமாண்ட் செய்யப்பட்டார். எஸ்.பி.பட்டிணம், ஆம்பூர், சேலம் போன்ற இடங்களில் சமீபத்தில் நடத்த காவல்நிலைய சாவுகளின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் இது போன்ற காவல்நிலைய துன்புறுத்தல்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. ஒரு சில காவல்துறையினர் செய்கின்ற சட்ட விரோத நடவடிக்கைகளால் மொத்த காவல்துறையும் கெட்ட பெயரை சுமக்க வேண்டியுள்ளது. வசீம்கானை ரிமாண்ட் செய்யாமல் இரண்டு நாட்கள் சட்ட விரோத காவலில் வைத்து துன்புறுத்திய முத்துப்பேட்டை காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Rported By 

முஹம்மது இல்யாஸ். MBA, MA. JMC 

யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்...


அமெரிக்கா, ஆகஸ்ட் 14: கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம். "மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்.
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.

ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; குர்ஆனை ஏற்றார்.

இது தொடர்பாக, எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான்.

அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.

இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.

Reported By

மௌலவி அ.முஹம்மது கான் பாகவி அவர்கள்.

துபாயில் உள்ள DEWA அரசு நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப்படுகிறது.


துபாய், ஆகஸ்ட் 13: துபாய் நாட்டில் உள்ள DUBAI ELECTRICITY & WATER AUTHORITY (DEWA) என்ற அரசு நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு சென்னையில் வருகிற செப்டம்பர் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. எனவே அணைத்து சகோதரர்களும் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதனுடைய தேதி, இடம் மற்றும் நேரம் தங்களுடைய ஈமெயில் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். முந்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

DEPARTMENT:
ELECTRICAL TRANSMISSION
MAINTENANCE UPTO 400KV


Positions Required :

1. Specialis ts - Crisis Management
2. Specialists - Trans Switchgear
3. Specialists - Material Management
4. Specialists - Maintenance Planning
5. Specialists - Trans. Cable
6. Specialist - Protection (Design &
Engineering)
7. Specialist - Trans. Protection Testing &
Commissioning
8. Sr. Manager/Manager (400KV Network)
9. Sr. Manager (Tender)
10. Manager - Trans. Civil Maintenance
11. Manager - RTU Maintenance
Commissioning
12. Manager - Transmission Control
Centre
13. Manager - Transmission Prot. Design &
Engineering
14. Deputy Manager - Transmission Line
Asset Management Cable
15. Deputy Manager - TAM (OHL)
16. Deputy Manager - Trans. Protection
Settings
17. Deputy Manager - Scheduling &
Resources Planning
18. Project Manager
19. Assistant Manager - Network Security
& User Support
20. Assistant Manager Electro Mechanical
Asset management
21. Asst. Manager-Trans. Prot. Inspections
Quality
22. Sr. Engineer Datacenter
23. Sr. Engineer Cable
24. Sr. Engineer Structural
25. Sr. Engineer-Transmission Asset
Management Cable
26. Sr. Engineer - Trans OHL Maintenance
27. Sr. Supervisor - Trans OHL
Maintenance
28. Sr. Lineman/Asst. Lineman
29. Sr. Engineer - Trans Line Patrol
30. Sr. Engineer - SCADA Network
31. Sr. Engineer - Asset Management
32. Sr. Engineer Planning
33. Sr Engineer-Quality & Tech
Development
34. Sr. Engineer. Permits
35. Sr. Engineer-Technical Interfaces
36. Sr. Engineer-Transformer
37. Sr. Engineer-Switchgear
38. Sr. Engineer-TCAM Electromechanical
39. Sr. Analyst
40. Engineer. Technical Development
41. Engineer - RTU Commissioning
42. Engineer-Trans Line NOC
43. Engineer /Asst. Engineer- Transmission
Equipment Maintenance
44. Engineer - RTU Maintenance
45. Engineer - Asset Mgmt
46. Engineer Project Support
47. Engineer. Site Inspection
48. Engineer - GIS Data Quality
(Electricity).
49. Engineer - Technical Architect
50. Engineer Network
51. Engineer Security
52. Engineer - SCADA System
53. Engineer/ Sr. Engineer Project
54. Engineer - Technical Support &
Coordination
55. Engineer - TAM Transformer
56. Engineer TAM OHL
57. Planning/Cost Engineer
58. Engineer RTO
59. Engineer - Reporting & Analysis
60. Engineer (Site) (132KV Network)
61. Engineer - System Studies
62. Engineer - Operation Planning
63. Engineer DTS
64. Engineer - Trans Protection Setting
65. Engineer.- Technical & Strategy
66. Asst. Engineer - SCMS Maintenance
67. Asst. Engineer - Asset Mgmt.
68. Asst. Engineer - Trans Protection
Maint.
69. Software Developer
70. Database Analyst
71. Supervisor - Civil
72. Sr. Technician Wireless
73. Sr. Technician Services Support
74. Technicians
75. Electricians
Exp Criteria :
For Sr Managers / Specialist: 15 Yrs and
above
For Managers : 12 Yrs 14 Yrs
For Sr Engineer: 8 Yrs 11 Yrs
For Engineer : 5 Yrs -7 Yrs
For Asst Engineer: 3 Yrs 5 Yrs

PLEASE SEND YOUR UPDATED RESUME
FOR CLIENT SHORTLISTING
NOTE: KINDLY MENTION ON TOP OF
YOUR RESUME FOR WHICH POSITION
YOU APPLYING FOR IS MUST.
Conticon.chennai@gmail.com

Desired Candidate Profile
B.Tech/B.E., Diploma
CONTINENTAL CONTRACTORS
CHENNAI
conticon.chennai@gmail.com

Reported By 

AKL.அப்துல் ரஹ்மான் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)