அமெரிக்கா, ஏப்ரல் 09 : குஜராத் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பு இல்லை எனக் காட்டுவதற்காக சங்க்பரிவார சக்திகள் என்னதான் பகிரங்கமான முயற்சிகளை மேற்கொண்டாலும் உலக நடுநிலையாளர்கள் மத்தியில் மோடியின் ரத்தகரை இன்னும் மறையவில்லை என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில், உலக பயங்கரவாத நாடான அமெரிக்காவில் மோடி எனும் பயங்கரவாதிக்கு எதிராக ஆர்பாட்டம் நடந்துள்ளது. குஜராத் வன்முறைச் சம்பவங்களில் 10 -வது ஆண்டு தினத்தை அடுத்து குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியூயார்க்கில் 40 இந்திய - அமெரிகக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பதாகைகளுடன் 100 -க்கும் மேற்பட்டவர்கள் மங்கட்டனில் உள்ள மகாத்மா காண்டி சிலைக்கு அருகே சனிக்கிழமை அன்று கூடி ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். ஏற்கனவே மோடியின் அமெரிக்க விசயத்திற்கு ஆண்டுதோறும் அமெரிக்க விசா மறுத்து வரும் நிலையில், மோடிக்கு எதிரான இந்த ஆர்பாட்டம் அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவில் மோடியின் கோர முகத்தை வெளிக்கட்டியிருக்கும் இல்லையா.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா