முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்;கிழியும் மோடியின் கோரமுகம்!



அமெரிக்கா, ஏப்ரல் 09 : குஜராத் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பு இல்லை எனக் காட்டுவதற்காக சங்க்பரிவார சக்திகள் என்னதான் பகிரங்கமான முயற்சிகளை மேற்கொண்டாலும் உலக நடுநிலையாளர்கள் மத்தியில் மோடியின் ரத்தகரை இன்னும் மறையவில்லை என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில், உலக பயங்கரவாத நாடான அமெரிக்காவில் மோடி எனும் பயங்கரவாதிக்கு எதிராக ஆர்பாட்டம் நடந்துள்ளது. குஜராத் வன்முறைச் சம்பவங்களில் 10 -வது ஆண்டு தினத்தை அடுத்து குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியூயார்க்கில் 40 இந்திய - அமெரிகக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பதாகைகளுடன் 100 -க்கும் மேற்பட்டவர்கள் மங்கட்டனில் உள்ள மகாத்மா காண்டி சிலைக்கு அருகே சனிக்கிழமை அன்று கூடி ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். ஏற்கனவே மோடியின் அமெரிக்க விசயத்திற்கு ஆண்டுதோறும் அமெரிக்க விசா மறுத்து வரும் நிலையில், மோடிக்கு எதிரான இந்த ஆர்பாட்டம் அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவில் மோடியின் கோர முகத்தை வெளிக்கட்டியிருக்கும் இல்லையா.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை அருகே 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.




முத்துப்பேட்டை, ஏப்ரல் 08 : திருவாரூர் மாவட்டங்களில் நேற்று காரில் கடத்தி வரப்பட்ட 1 லட்சம் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில் கள் கடத்தி வரப்பட்டு திருவாரூர் மாவட்டங்களில் அதிக அளவில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட S .P . சேவிய தன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுவிலக்கு போலீசாரும் அந்தந்த காவல் சரக போலீசாரும் மது பாட்டில்களை கடத்தி வரும் காருகளை பறிமுதல் செய்வதுடன், கடத்தியவர்களின் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுகோட்டைக்கு கடத்தி வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, முத்துப்பேட்டை சரக DSP .கோபி அவர்களின் தலைமையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், முத்துப்பேட்டை எடையூர் போலீசார் நேற்று உதயமார்த்தாண்டபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 1 லட்சம் மதிப்புள்ள 750 மில்லி கொண்ட 300 மது பாட்டில்கள், 180 மில்லி அளவு கொண்ட 480 மது பாட்டில்கள், இருந்தது அப்போது தெரியவந்தது. அதில் காரை ஓட்டிவந்த புதுகோட்டையை சேர்ந்த தாஸ் 41 என்பவரை கைது செய்தனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, முஹம்மது முஹைதீன்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)