முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அருகே 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.




முத்துப்பேட்டை, ஏப்ரல் 08 : திருவாரூர் மாவட்டங்களில் நேற்று காரில் கடத்தி வரப்பட்ட 1 லட்சம் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில் கள் கடத்தி வரப்பட்டு திருவாரூர் மாவட்டங்களில் அதிக அளவில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட S .P . சேவிய தன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுவிலக்கு போலீசாரும் அந்தந்த காவல் சரக போலீசாரும் மது பாட்டில்களை கடத்தி வரும் காருகளை பறிமுதல் செய்வதுடன், கடத்தியவர்களின் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுகோட்டைக்கு கடத்தி வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, முத்துப்பேட்டை சரக DSP .கோபி அவர்களின் தலைமையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், முத்துப்பேட்டை எடையூர் போலீசார் நேற்று உதயமார்த்தாண்டபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 1 லட்சம் மதிப்புள்ள 750 மில்லி கொண்ட 300 மது பாட்டில்கள், 180 மில்லி அளவு கொண்ட 480 மது பாட்டில்கள், இருந்தது அப்போது தெரியவந்தது. அதில் காரை ஓட்டிவந்த புதுகோட்டையை சேர்ந்த தாஸ் 41 என்பவரை கைது செய்தனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, முஹம்மது முஹைதீன்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)