அதிரை ECR சாலையில் இன்று மாலை பேருந்து மற்றும் பைக் ஆகியவை நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர்.
ஆவனத்தை சேர்ந்த விஜய் மற்றும் விக்கி ஆகியோர் தங்களது இருசக்கர மோட்டார் பைக்கில் அதிரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது ECR சாலை வழியாக ஏர்வாடி நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா பேருந்து எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இக்கோர விபத்தில் விஜய் மற்றும் விக்கி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த அப்பகுதிவாசிகள் சம்பவ இடத்திருக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
0 comments:
Post a Comment