முத்துப்பேட்டை, செப்டம்பர் 11: முத்துப்பேட்டை அடுத்து செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் கீழே சாமி சிலை ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த செய்தியை கேட்டு பின்னர் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் தனி பிரிவு காவலர் கோபால் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று பார்வை இட்டனர். பின்னர் அங்குள்ள பொது மக்கள் உதவியுடன் ஆற்றில் உள்ள சிலையை தூக்கி கரையில் வைத்தனர். அப்போது மூன்று அடி உயரமான சிலை என்று தெரிய வந்தது. இது குறித்து வருவாய் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. இந்தனை அறிந்த முத்துப்பேட்டை வருவாய் ஆய்வாளர் ராமலிங்கம்,கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம், உதவியாளர்கள் கண்ணையன், சங்கர் ஆகியோர் அட்சிலையை கைப்பற்றி முத்துப்பேட்டை வி.ஏ.ஒ. அலுவலகத்தில் வைக்கப்பட்டனர்.
இந்த சிலையை பாலத்திற்கு மேற்புறத்திலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கலாம் ஏனெனில் அந்த சிலையில் பாசிபிடித்து காணப்படுகிறது. இந்த ஆற்றில் தண்ணீர் வற்றியதால் தான் இந்த சிலை கிடந்தது தெரியவந்தது. இதை தூக்கி வீசப்பட்டதின் காரணம் என்ன? இந்த சிலை ஐபோன் சிலை என்று திருடிவிட்டு பிறகு திருடன் இது கல் சிலைதான் என்று ஏமாந்த நிலையில் நள்ளிரவில் வந்து இதை ஆற்றில் வீசி விட்டு சென்றார்களா?
முத்துப்பேட்டை நகரில் அது போன்ற சிலையை யாரும் பார்க்கவில்லை என்றும் எந்த சிலைகளும் திருட்டு போக வில்லை என்றும் வேறு எங்கேயாவது திருடி வந்துள்ளது என்று பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தெரிகிறது. இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பானது.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை