முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமிழக அரசின் விலை ஏற்றத்தால் தவிக்கும் மக்கள்கள்!!!



சென்னை, நவம்பர் 18: தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து தற்போது ஓர் அளவு குறைந்துள்ளது.தற்பொழுது அனைத்து உபயோகிக்கும் பால் விலை அதிகரித்துள்ளது.இதே போன்று பேரூந்து கட்டனும் அதிகரித்துள்ளது.சென்னை மாநகர பேருந்துகளில் பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், மாநகர சொகுசு பேருந்துகளில் 38 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்ந்துள்ளது.அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும் உயர்ந்துள்ளது.சென்னை மாநகரை தவிர பிற நகரங்களில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 7 லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 லிருந்து ரூ.3 ஆக உயருகிறது.சென்னையில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 12 லிருந்து ரூ. 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பால் விலையும் உயர்வு பேருந்து கட்டண உயர்வை அடுத்து பால் கொள்முதல் விலைகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.இதன் படி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனி ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.24 க்கு விற்க்கப்படும்.இது அட்டைதாரர்களுக்கும் பொருந்தும்.பசும்பால் கொள்முதல் விலை ரூ.18 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.எருமை பால் கொள்முதல் விலை ரூ.26 லிருந்து ரூ.28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக முதல்வராக பதியேற்றயுடன் டெல்லி சென்று தமிழக வளர்ச்சிக்காக கணிசமான நிதி பெற்று வந்த ஜெயலலிதா தற்போது மக்களின் அத்தியாவசியமான பால் மற்றும் பேருந்து கட்டணங்களை உயர்தியுள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் மின்சார கட்டணங்களை உயர்த்த, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி விரைவில் மின்சார கட்டணத்தையும் உயர்த்த தமிழக அரசு முடிவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.இதனால் பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா

தடையை மீறி யாத்திரை துவங்கும் INTJ - வின் தலைவர் ஜனாப்.SM .பாக்கர் அறிவிப்பு!






சென்னை, நவம்பர் 18 : இந்நிகழ்ச்சிக்கு ஐஎன்டிஜே மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது முனீர் தலைமை வகித்தார். "பாபரி மஸ்ஜித் மீட்பு யாத்திரைக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ரதத்தை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது" என்று முஹம்மது முனீர் குறிப்பிட்டார்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரைக்கான ரதம் அறிமுக நிகழ்ச்சி இன்று (18-11-2011) சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர்,பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது. மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, பெண்கள் இணைப்புக் குழுவின் ஷீலு உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையை துவக்கி வைக்கின்றனர்.ஏறக்குறைய இரண்டு மாத காலம் இந்த யாத்திரை குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இந்த யாத்திரை பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் - இதுநாள் வரை அமைதி காத்துவந்த காவல்துறை இப்போது அனுமதி மறுத்திருக்கிறது.ஆனால் எங்கள் அமைப்பைப் பற்றி காவல்துறை அரசாங்கத்திற்கு தவறான செய்தியை கொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அரசின் பார்வை எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எப்படி இருந்தாலும் எங்கள் உரிமையை விட்டுத் தர முடியாது.இந்த அரசு அனைத்து சமூக அமைப்புகள், கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கூட அவர்களை போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இந்த அரசின் பெயரில் வேறுபட்ட கருத்து இல்லை.
காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் தடையை மீறி யாத்திரை துவங்கும் இன்ஷா அல்லாஹ். தடையை மீறுவது எங்களின் உரிமை. கைது செய்வது காவல்துறையின் கடமை.
எங்களால் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. யாருக்கும் துன்பம் தராமல் - அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இந்த நிகழ்வு இருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் எங்களை காவல்துறை கைது செய்து இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெற விடாமல் தடுத்தாலும் எங்களது ஜனநாயக - அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இன்ஷா அல்லாஹ் நீதிமன்றத்தை நாடி எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் கடமை இருக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும்...'' என்றார் தலைவர் எஸ்.எம். பாக்கர்.
பின்னர் பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர், பத்திரிகையாளர்களுக்கு யாத்திரைக்கான ரதத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். வந்திருந்த மீடியாக்களும், புகைப்படக் கலைஞர்களும் தங்கள் கேமிராக்களால் ரதத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கத் தொடங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், பொருளாளர் அபு பக்கர், மாநிலச் செயலாளர்களான முஹம்மது ஷிப்லி, அபு ஃபைஸல், கலிமுல்லாஹ், தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தக்வா மொய்தீன் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகளான யூசுப்கான், முஹம்மது இஸ்மாயில் மற்றும் தென் சென்னை மாவட்டநிர்வாகிகளான ஆசாத் நகர் சேட், அமைந்தகரை யூனுஸ், ஹபீப், அலுவலக உதவியாளர் மதுக்கூர் முஹைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், அவரது கட்சி பிரச்சார வாகனத்தை ரத யாத்திரையுடன் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா

கரை சேவைக்கு அல்ல, இறை சேவைக்காக ஓர் யாத்திரை! SM .பாக்கர் அவர்கள் பேட்டி...




சென்னை, நவம்பர் 18 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வருகிற 19 .11 .2011 ஆம் தேதி மேலப்பாளையத்தில் பாபரி மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை நடத்த உள்ளதாக இயக்கத்தின் மாநில தலைவர் ஜனாப் .SM .பாக்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர், ஜனாப் .SM .பாக்கர் அவர்களை நேரில் சந்தித்து சில வினாக்களை தொடுத்தனர். இதன் பின்னர் பதிலளித்த அவர், பாபரி மஸ்ஜித் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை என்றும், ஆனால் இந்த பிரச்சனையை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், அனைத்து மக்களும் ஓரணியில் ஒன்று சேர்ந்து போராடினால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை கூட நம்மால் மாற்றி விட முடியும் என்றும், ஏனெனில் இது ஓர் ஜனநாயக நாடு என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு ஓர் உதாரணம் சென்ற சாபான் வழக்கின் தீர்ப்பை கூட நமக்கு சாதகமாக மாற்ற முடிந்தது, ஏனெனில் நாம் அனைவரின் ஒற்றுமை அங்கு நிலைத்திருந்தது தான் காரணம். மேலும் இந்த பிரச்சனை ஓர் அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது என்றும், அதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை ஓர் நினைவு நாளாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த பிரச்சனை ஒரு தலைமுறைக்கு என்னவென்று தெரியாமல் போய்விட்டது. நியாய உள்ளம் படைத்த நமது தொப்புள் கொடி உறவுகளாக இருக்கின்ற இந்துக்கள் மற்றும் கிருஸ்தவ மக்களிடமும் நம்முடைய நீதி மறுக்கப்பட்டதை நாம் அவர்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். பாபரி மசூதி கட்டப்பட்டது என்பதும், இடிக்கப்பட்டது என்பதும் இதிகாசமோ, புராணமோ அல்ல இது ஓர் உலக வரலாற்றினுடைய குறிப்பீடு என்றும், இது நிகழ்கால உண்மை இவற்றை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கற்பனையை உண்மையாக்க முயல்வோர் மத்தியில் உண்மை, நேர்மை, சத்தியம் ஆகிய இந்த வரலாற்றுச் சுவடுகளை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எடுத்துச்சொல்லி நீதியை நிலைநாட்ட, பாபரி பள்ளியை மீட்க இந்த பயணம் புறப்படுகிறதே தவிர, இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், மற்றும் அனைத்து ஜாமாத்தார்களும் தள்ளி நின்று வாய்ப்பொத்தி மவ்ளிகலாக வேடிக்கை பார்கின்ற போது களத்தில் இறங்கி உண்மையை சொல்லவதும், இறைப்பள்ளியை மீட்பதும் ஒவ்வொரு நம்பிக்கையாளரின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரதயாத்திரை கரசேவைக்காக அல்ல என்றும், இது ஓர்
இறைச் சேவைக்காக அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜாமாத் என்றும் அவர் தெரிவித்தார். இது நடக்குமா? இது நம்மால் முடிமா? இவர்களை அரசாங்கம் அடக்கிவிட மாட்டார்களா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு மத்தியில் அஞ்சுவதும், அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்குத்தான் என்வது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை தத்துவம் என்றும், தடைசெய்தால் உடைத்தெறிவோம், சிறை சென்றேனும் இறைசேவை செய்வோம் என்று உங்களை அழைக்கிறது INTJ என்று அவர் தெரிவித்தார்.



சென்னை சேலையூரிலிருந்து INTJ வின் தலைமை அலுவலகம் வந்து இந்த ரதயாத்திரைக்காக ரூ.5 ,000 காசோலையை கொடுத்துவிட்டு தானும் இந்த ரதயாத்திரையில் கலந்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிய 70 வயது முதியவரின் பெயர் சீனி முஹம்மது அல்ல "சீனிவாசன்" என்பதே இதற்க்கு ஓர் அத்தாட்சி.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா.

பேஸ்புக்கின் மற்றுமொரு அசிங்கத்தால் அதிர்ந்து போன இந்தியா!!!


இந்தியா,நவம்பர் 18: பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன.இதைப் பார்த்தும் உடனே கம்ப்யூட்டரையே பலர் ஆப் செய்து விட்டனர். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் செக்ஸ் படங்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் போன் செய்து விசாரித்தனர். ஏறக்குறைய 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்களில் இதுபோல் செக்ஸ் படங்கள் ஊடுருவி இருந்தன. கடுப்பாகிப் போன பலர் தங்கள் பேஸ்புக் அக்கவுன்டுகளை குளோஸ் செய்து விட்டனர். பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், வைரஸ், ஆபாச படங்கள் அடங்கிய சாப்ட்வேரை டவுண்லோடு செய்யுமாறு வந்த லிங்க்கை கிளிக் செய்ததால், அதன் மூலம் ஆபாச படங்கள் பேஸ்புக் உறுப்பினர்களின் பதிவுகளில் ஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது. ஆபாச படத்தை ஊடுருவ விட்டவர்களை நெருங்கி விட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

நன்றி - www.adiraithunder.blogspot.com

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)