முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்படுமா?

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கடைத்தெரு பகுதியில் கடந்த 2 தினங்களாக சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்தரிகிறார். 

சிவப்புக் கலர் டாப்ஸ் கருப்பு பேண்ட் உள்ள சுடிதார் அணிந்திருக்கும் சிறுமி சமீபத்தில்தான் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் தெரிகிறது. வெளிமாநில மொழி பேசுவதால் சிறுமி பேசுவது என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தின இரவு அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் மற்றும் சாலையில் செல்லும் காம வெறியர்கள் தங்களது காம பசிக்கு துரத்தியுள்ளனர். 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீட்டு பாதுகாத்துள்ளனர். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்நிலைத்திற்கும், வருவாய்த்துறைக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு ஒப்படைக்கவில்லை. இதனால் மீண்டும் சிறுமி அப்பகுதியை சுற்றி வருகிறார். சிறுமியின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த சிறுமியை மீட்டு தக்க நேரத்தில் காப்பகத்தில் சம்மந்தபட்ட அதிகாரிகள் சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

முத்துப்பேட்டையில் ஆப்பிள் வியாபாரியின் பொது நல பார்வை !!

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை பகுதி பழக்கடைகளுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யபப்டுகிறது. 

ஒரு கிலோ 150 முதல் 220 வரை விற்கப்படும் ஆப்பிள்கள், விற்பனை கவர்ச்சிக்காக ஆப்பிள் மீது பாலிஸ் கொடுப்பது, தனித்தனியாக உறைகள் மாட்டுவது, ஸ்டிக்கர்கள் ஒட்டி பார்வையாக அமைப்பது போன்ற செயல்களில் ஆப்பிள் மொத்த வியாபாரிகள் செய்து வருகிறார்கள். 

ஆப்பிள் மீது பாலிஸ் கொடுக்கும் மெழுகுகள் உடலுக்கு கெடுதல் என்று உணராமல் மக்கள் ஆப்பிள்களை ஆசையுடன் சென்று அப்படியே கடித்து சாப்பிடுவதும,; சிலர் பெயரளவில் தண்ணீரில் நனைத்துவிட்டு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பலவகை கெடுதல்கள் எற்படுவதை உணராமல் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். 


சமீபத்தில் நடந்த ஆய்வில் ஆப்பிள் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும,; பல்வேறு கெடுதல்கள் உடல் நலத்திற்கு ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

ஆனாலும் மக்கள் கடைகளில் கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதால் வேறு எந்தவொரு மாநிலத்திலும் விற்காத அளவிற்கு தமிழகத்தில் அதிக அளவில் விற்பனை ஆகுவதாக மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்ட் அருகில் பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவர் கடையில் ஏகப்பட்ட பலவித ரகங்கள் கொண்ட ஆப்பிள்கள் குவிக்கப்பட்டுள்ளது. 



தினமும் அதிக அளவில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் பாலகுமார் ஒவ்வொரு முறையும் தான் கடையில் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆப்பிள் மீது பூசப்பட்டுள்ள மெழுகை கத்தியால் சுரண்டி காட்டி அதனை கெடுதலையும் உணர்த்துகிறார். மேலும் ஆப்பிள் சாப்பிடும்பொழுது இப்படி சுரண்டிவிட்டு சாப்பிடனும் என்றும,; அல்லது தோலை அகற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். 

மக்களின் உடல் நலத்தில் மீது அக்கறை கொண்டு வியாபாரம் செய்யும் பாலகுமார் கடையில் ஆப்பிள் வாங்குவதற்கென மக்;கள் கூட்டமாக காணப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களும் பாலகுமாரை பாராட்டி செல்கிறார்கள்.

முத்துப்பேட்டையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் AKS .விஜயன் --பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !!

முத்துப்பேட்டையில் முக்கிய பிரமுகர்களை நாகை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் ஏ.கே.எஸ் விஜயன் சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் சென்ற விஜயன் அங்கு நகர தலைவர் நைனா முகம்மது, நகர செயலாளர் வக்கில் தீன்முகம்மது, தமுமுக ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் பைசல், நகர பொருளாளர் தாவூதுஷா, முன்னால் தலைவாகள்; துவான் அப்துல் ரஹ்மான், தாவூது மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். 



பின்னர் ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிக்கு சென்று தொழுகை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பிரிலியண்ட் பள்ளிக்கு சென்று முதல்வர் முகம்மது யாகூபை சந்தித்தார், முஸ்லிம் லிக் அலுவலகம் சென்று மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை, நிர்வாகி முகம்மது அலி, கவுன்சிலர் தம்பி மறைக்காயர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அப்பொழுது தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் நகர துணைச் செயலாளர் நவாஸ் கான்,மாவட்ட பிரதிநிதிகள் இபுராஹிம், மகாராஜா தமீம், நிர்வாகிகள் செல்வம், பாலு ஆகியோர் உடன் இருந்தனர். 

முத்துப்பேட்டை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முரண்பாடான பேச்சால் குழம்பி போன அதிமுக தொண்டர்கள். பரபரப்பு...

முத்தப்பேட்டையில் நேற்று முன்தினம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்பொழுது பேசிய தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து 'நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர்.கோபால் யாரென்று உங்களுக்கு தெரியுமா அவர் இந்த தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வேதையனின் மருமகன்தான் அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார்' என்று அறிமுகம் செய்து வைத்தார். 

இதனால் பேச்சைக் கேட்ட தொண்டர்கள் 'காங்கிரஸ் கட்சி நமக்கு எதிரணி ஏன் இவர் இந்த நேரத்தில் இப்படி சொல்றார்' என்று தொண்டர்கள் முனுமுனுத்தனர். அடுத்ததாக பேசிய அமைச்சர் காமராஜ் 'ஒன்றியச் செயலாளர் நடராஜன் பேசும்போது அதிக ஓட்டு வாங்கித்தரும் பொறுப்பாளர்களுக்கு ஒரு பவுன் என்றார். 

அதற்கு நான் 2 பவுன் தருகிறேன் என்றேன். இது தேர்தல் விதிமுறைக்கு ஒத்துவராது என்பதால் ஒன்றியச் செயலாளர் அந்த பவுனை வழங்குவார்' என்றார். மீண்டும் தொண்டர்கள் 'எப்படியெல்லாம் அமைச்சர் தப்பிக்க பாரக்கிறார் பார் இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்காமலா இருக்கிறார்கள்' என்று பேசிக் கொண்டனர். 

அடுத்ததாக பேசிய வேட்பாளர் கோபால் 'அமைச்சர் எனது வெற்றிக்காக அயராது பாடுபடுகிறார். இரண்டு தினங்களுக்கு முன் நன்னிலம் ஜமாத் பிரமுகர் பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது அவர்கள் அரசு மருத்துவமனையில் இரவில் டாக்டர்கள் இல்லை என்று கோரிக்கை விடுத்தனர். உடன் அமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு இரவில் டாக்டரை உடன் நியமனம் செய்ய உத்தரவிட்டார். 

உடன் சுகாதாரத்துறை டாக்டர் ஒருவரை நியமனம் செய்தது அவர் என்று பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்' என்றார். தேர்தல் விதிமுறையை மீறி பேசிய வேட்பாளரின் இந்த தவலை கூட்டத்தை கண்காணிக்க வந்த தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்து கொண்டனர். இப்படி கூட்டத்தில் தலைவர்கள் பெரும் குழப்பத்துடன் பேசிய தலைவர்களால் அதிமுக தொண்டர்கள் பலரும் எரிச்சலடைந்து குழப்பத்தில காணப்பட்டனர். 

முத்துப்பேட்டை தெற்கு தெரு கோரையாற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு !!






முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை தெற்குத் தெரு அரபுசாகிப் பள்ளிவாசல் அருகில் உள்ள கோரையாறு வாய்க்காலில் நேற்று காலை பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதிக்கு காலை கடன் முடிக்கச் சென்ற ஒருசிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், பெர்னான்டஸ், ராமலிங்கம் கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உதவியோடு பிணம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 

அப்பொழுது நடத்திய விசாரணையில் முத்துப்பேட்டை சின்னக்கட்சி மரைக்காயர் தெருவைச் சேரந்த கமால் என்பவரது மகன் அன்சாரி என்கிற ஷேக் அப்துல்லா(27) என்று தெரிய வந்தது. ஷேக் அப்துல்லா நேற்று அதிகாலை காலைக்கடன் முடிப்பதற்காக கோரையாற்றுக்கு வந்து பிறகு கால் அலசுவதற்காக வாய்க்காலுக்குள் இறங்கியதில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. மேலும் ஷேக் அப்துல்லாவுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் நடுக்கம் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. முத்துப்பேட்டை போலிசார் ஷேக் அப்துல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)