முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முரண்பாடான பேச்சால் குழம்பி போன அதிமுக தொண்டர்கள். பரபரப்பு...

முத்தப்பேட்டையில் நேற்று முன்தினம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்பொழுது பேசிய தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து 'நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர்.கோபால் யாரென்று உங்களுக்கு தெரியுமா அவர் இந்த தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வேதையனின் மருமகன்தான் அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார்' என்று அறிமுகம் செய்து வைத்தார். 

இதனால் பேச்சைக் கேட்ட தொண்டர்கள் 'காங்கிரஸ் கட்சி நமக்கு எதிரணி ஏன் இவர் இந்த நேரத்தில் இப்படி சொல்றார்' என்று தொண்டர்கள் முனுமுனுத்தனர். அடுத்ததாக பேசிய அமைச்சர் காமராஜ் 'ஒன்றியச் செயலாளர் நடராஜன் பேசும்போது அதிக ஓட்டு வாங்கித்தரும் பொறுப்பாளர்களுக்கு ஒரு பவுன் என்றார். 

அதற்கு நான் 2 பவுன் தருகிறேன் என்றேன். இது தேர்தல் விதிமுறைக்கு ஒத்துவராது என்பதால் ஒன்றியச் செயலாளர் அந்த பவுனை வழங்குவார்' என்றார். மீண்டும் தொண்டர்கள் 'எப்படியெல்லாம் அமைச்சர் தப்பிக்க பாரக்கிறார் பார் இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்காமலா இருக்கிறார்கள்' என்று பேசிக் கொண்டனர். 

அடுத்ததாக பேசிய வேட்பாளர் கோபால் 'அமைச்சர் எனது வெற்றிக்காக அயராது பாடுபடுகிறார். இரண்டு தினங்களுக்கு முன் நன்னிலம் ஜமாத் பிரமுகர் பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது அவர்கள் அரசு மருத்துவமனையில் இரவில் டாக்டர்கள் இல்லை என்று கோரிக்கை விடுத்தனர். உடன் அமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு இரவில் டாக்டரை உடன் நியமனம் செய்ய உத்தரவிட்டார். 

உடன் சுகாதாரத்துறை டாக்டர் ஒருவரை நியமனம் செய்தது அவர் என்று பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்' என்றார். தேர்தல் விதிமுறையை மீறி பேசிய வேட்பாளரின் இந்த தவலை கூட்டத்தை கண்காணிக்க வந்த தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்து கொண்டனர். இப்படி கூட்டத்தில் தலைவர்கள் பெரும் குழப்பத்துடன் பேசிய தலைவர்களால் அதிமுக தொண்டர்கள் பலரும் எரிச்சலடைந்து குழப்பத்தில காணப்பட்டனர். 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)