முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!
Showing posts with label இந்தியச் செய்திகள். Show all posts
Showing posts with label இந்தியச் செய்திகள். Show all posts

கை கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்ட 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கொலை.!!!


ஹைதராபாத், செப்டம்பர் 20-2016:  தெலுங்கான மாநிலம் ஹைதராபாத் ல் அமீனா என்ற 9 ஆம் வகுப்பு முஸ்லிம் மாணவி கை கட்டப்பட்ட நிலையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யும் முன் அமீனா பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என போலிசார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவரது தலையில் கல்லை போட்டு முகத்தை சிதைத்துள்ளனர். கொலையாளியை போலிசார் சிசிடிவி காணொளி மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

புர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு அமீனாவை அவன் பைக்கில் அழைத்து செல்கின்றான். சிசிடிவியில் இது பதிவாகியுள்ளது. கொலை செய்தவன் அக்பர் எனக் கூறப்படுகின்றது.

நன்றி:

முகநூல் நண்பர்கள்  

ஹைதராபாத் உள்ளாட்சி (GHMC) தேர்தல்கள்... அகில இந்திய மஜ்லிஸ் கட்சி அமோக வெற்றி...!!




ஹைதராபாத், பிப்ரவரி 06/2016: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சியின் 150 (வார்டு) இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த (02.02.2016 ) அன்று நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று மாலை 4:00 மணிக்கு துவங்கியது...
தெலுங்கானாவின் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி(TRS),  அகில இந்திய மஜ்லிஸ் கட்சி (AIMIM), காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி உள்ளிடவை முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்..

வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்திலிருந்தே ஆளும் கட்சியான TRS முன்னிலை பெற்றிருந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கடும் போட்டியை கொடுத்தது...
இறுதியாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி(AIMIM) தான் போட்டியிட்ட 60 இடங்களில் 44 இடங்களை வென்று அசத்தியது...

பெங்களூருவில் கொடூரம்: வெளி நாட்டு முஸ்லிம் மாணவியை நிர்வாணமாக்கி தாக்குதல்!




பெங்களூரு, பிப்ரவரி 04/2016: தான்சானியா நாட்டைச் சேர்ந்த மாணவியை நிர்வாணமாக்கி பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 31-ம் தேதி இரவு, சாலையில் நடந்து சென்ற சபானா தாஜ் என்ற பெண் மீது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய அந்த காரை ஓட்டி வந்த நபர், சூடான் நாட்டை சேர்ந்த முகமது இஸ்மாயில் என்ற மாணவர் என தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், இஸ்மாயிலை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தான்சானியாவைச் சேர்ந்த இளநிலை வர்த்தக மேலாண்மை (பி.பி.எம்.) படித்து வரும் மாணவி உட்பட சிலர், விபத்து ஏற்பட்ட இடம் வழியாக காரில் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், காரை மடக்கி அவர்களை தாக்கியுள்ளது. இதில், காரில் இருந்த மாணவி ஒருவரை தவிர மற்றவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், மாணவியை கடுமையாக தாக்கியதோடு, நிர்வாணமாக்கி போலீசார் முன்னிலையிலேயே ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளது. அப்போது, கிழிந்த ஆடையுடன் தன் மானத்தை காப்பாறிக்கொள்ள அந்த மாணவி, அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது, அவரைத் துரத்தி சென்ற அந்த கும்பல், அவரை கீழே இழுத்துப் போட்டு உதைத்துள்ளது.


அதேநேரத்தில், விபத்து ஏற்படுத்திய காரையும், தான்சானியா மாணவியின் காரையும் அந்த கும்பல் தீ வைத்துள்ளது. விபத்து ஏற்படுத்திய நபருக்கும், அந்த மாணவிக்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இது குறித்து பெங்களூரு காவல்துறை ஆணையர் மெகாரிக் கூறும்போது, ''மாணவியிடம் இருந்து புகார் பெறப்பட்டு உள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளோம். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம். இது போன்ற தாக்குதல்களை அனுமதிக்கவே முடியாது" என்றார்.



இதனிடையே, தான்சானியா அரசு இந்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்தியாவில் பயிலும் தான்சானிய மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அந்நாடு வலியுறுத்தியுள்ளது.



இந்நிலையில், மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தச் சம்பவம் மிகவும் வெட்ககேடானது. இதற்காக மிகவும் வேதனைப்படுகிறேன். கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாரமையாவைத் தொடர்பு கொண்டு, தான்சானிய மாணவியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளேன்" என்று கூறி உள்ளார்.

ஊடகங்களை மிரட்டும் மத்திய அரசு – யாக்கூப் மேமன் விவகாரத்தில் புதிய சர்ச்சை .!!


மும்பை, ஆகஸ்ட் 11: யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட செய்தியை சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டதாகக் கூறி 3 செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியதற்கு இந்திய பத்திரிகையாளர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
யாகூப் தூக்கிலிடப்பட்ட பிறகு, மும்பை நிழல் உலக தாதா சோட்டா ஷகீலிடம் 2 செய்தி சேனல்கள் தொலைபேசியில் பேட்டி எடுத்து ஒளிபரப்பின. இதேபோல் மற்றொரு செய்தி சேனல், யாகூப் மேமனின் வழக்கறிஞரிடம் பேட்டி எடுத்து ஒளிபரப்பியது.
இந்த 3 சேனல்களும் யாகூப் தூக்கிலிடப்பட்ட செய்தியை சரியாக கையாளவில்லை என்றும் சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும், உள்நோக்கத்துடன் நீதித் துறைக்கு களங்கம் கற்பிக்கும் வகையிலும் செய்தி ஒளிபரப்பியதாக 3 சேனல்கள் மீதும் மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது.
இதையடுத்து, “தங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்பது குறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கேட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தை ‘எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா’ கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “கேபிள் டிவி கட்டுபாட்டு விதிமுறைகளின் கீழ் ஆஜ்தக், ஏபிபி நியூஸ், என்.டி.டிவி ஆகிய சேனல்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
அந்தக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பொதுநலன் மற்றும் பொது ஆர்வம் குறித்த சுதந்திரமான விவாதங்களுக்கு எதிராக எதுவும் இல்லை. அதாவது, அரசுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத உள்ளடக்கங்கள் இருந்தாலும் கூட கட்டுப்பாட்டு விதிமுறைகளில் இத்தகைய நோட்டீஸ் அனுப்பப்படுவதற்கான காரணிகள் இல்லை.
குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் முன்வந்த யாகூப் மேமன் விவகாரம் அதனையடுத்து தூக்கிலிடப்பட்ட விவகாரம் பரந்துபட்ட பொது ஆர்வத்தையும், பலதரப்பட்ட கருத்துகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது.
இந்த விவாதங்கள் அரசியல் பேச்சு அல்லது உரை என்ற அளவிலேயே உள்ளது. எனவே இந்த பேச்சுரிமை கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்பட வேண்டும்.
அரசால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் வன்முறையைத் தூண்டுகிறது என்றோ, துவேஷத்தை பரப்புகிறது என்றோ தண்டனைக்குரியதாக்கப்பட முடியாதது.
எனவே, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டமைப்பு, சேனல்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Reporter By 

முஹம்மது இல்யாஸ். MBA. MA. Journalism & Mass Communication 

யாகூப் மேமன் வழக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு !!!


மும்பை, ஆகஸ்ட் 10: சீராய்வு மனு விதிகள் தொடர்பான விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துமாறு, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் டைகர் மேமன் தலைமறைவானதை தொடர்ந்து அவருடைய தம்பி யாகூப் மேமன் வழக்கில் அரசிற்கு உதவி செய்வதற்காக இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆனால் காவல்துறை அப்பாவியான அவர்மீது வழக்கு பதிவு செய்து 22-ஆண்டுகள் சிறையில் அடைத்து இறுதியாக யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து யாகூப் மேமன் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. யாகூப் மேமனின் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, குரியன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, யாகூப் மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமசந்திரன், “மேமனின் சீராய்வு மனு தொடர்பான விசாரணையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; அவரது சீராய்வு மனு விசாரணையில் இருந்தபோதே அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, சீராய்வு மனு தொடர்பான விதிகள் குறித்து உரிய விளக்கங்களை செவ்வாய்க்கிழமை அளிக்குமாறு மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பிறகே, யாகூப் மேமனின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல்...



புது டெல்லி, பிப்ரவரி/26/2015: இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழுமையான வரவுசெலவுத் திட்டம் என்பதால் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னுரிமை கொடுக்க உள்ளார். இந்தியாவில் ஏழைகளும் குளிர்சாதன ரயிலில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதை ஏற்று குளர்சாதன ரயில்கள் இன்றைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில்களில் பயணக் கட்டணமும் மிகவும் குறைவாக இருக்கும்.
.

குஜராத் கலவரத்தின்போது வாஜ்பாய்-மோடி இடையே நடந்த கடித போக்குவரத்தை வெளியிட முடியாது: பிரதமர் அலுவலகம் கைவிரிப்பு



குஜராத், டிசம்பர் 18: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் நடைபெற்ற கடித போக்குவரத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மனு செய்திருந்தார்.


குறிப்பாக, கலவரம் உச்சகட்டத்தில் இருந்த 27-2-2002 முதல் 30-4-2002 வரை நடைபெற்ற கடித பரிமாற்றத்தின்போது, அந்த கலவரத்தின் பின்னணியில் இருந்த சக்திகள் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி மோடிக்கும் இடையில் இடம்பெற்ற தகவல் பரிமாற்றம் என்ன? என்று அந்த சமூக ஆர்வலர் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.



ஒரு விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும்போது, அவ்விவகாரம் தொடர்பான முக்கிய குறிப்புகளை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்க வேண்டும் என அரசை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்ற விதிவிலக்கை காரணம் காட்டி, “விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை வழங்க முடியாது” என பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

அந்நியன் -இந்தியன் பாணியில் 5 பேரை கொலை செய்த சாமியார் !!!

கண்ணன் அளித்துள்ள பகீர் வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:– 
ஸ்ரீரங்கம், டிசம்பர் 01: நான் ஸ்ரீரங்கம் பாரதி நகரில் வசித்து வருகிறேன். ஜோதிடம் பார்ப்பது, பரிகார பூஜைகள் செய்வது எனது தொழில். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வைர வியாபாரி செய்து வந்த திருவானைக்காவல் தங்கவேலு தனக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும் மீண்டும் தொழில் லாபகரமாக நடக்க பரிகார பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டு என்னிடம் வந்தார்.

யமுனாவின் மீதான மோகத்தால் 5 பேரையும் கொன்றேன்: சாமியார் கண்ணன் வாக்குமூலம்
நான் தங்கவேலுவின் வீட்டிற்கு பரிகாரபூஜை செய்வதற்காக சென்றேன். அப்போதுதான் தங்க வேலுவின் மனைவி யமுனாவை முதன் முதலில் பார்த்தேன். பார்த்தது முதல் அவள் மீது எனக்கு ஆசை பிறந்தது. இதனால் அடிக்கடி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறி தங்கவேலு வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தேன். பின்னர் தங்கவேலு வீட்டில் இல்லாத போதும் அங்கு செல்வேன். சில நாட்களிலேயே யமுனாவை என் வலையில் வீழ்த்தினேன். அடிக்கடி நாங்கள் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்தோம். இந்த விஷயம் தங்கவேலுவிற்கு தெரிந்து விட்டது. அவர் கடும் கோபத்தில் யமுனாவை திட்டினார். என்னை இனி வீட்டுக்கு வராதே என்று சொன்னார். இதனால் தங்கவேலுவை கொன்றால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என யமுனாவிடம் கூறினேன். 

யமுனாவும் அதற்கு சம்மதித்தாள். தங்கவேலுவை மது குடிக்க அழைத்து சென்றேன். அதிகமாக மது குடிக்க வைத்து பின் அவரின் தலையில் இரும்பு கம்பியால் அடித்தும் கழுத்தை அறுத்தும் கொன்றேன். உடலை சாக்கு மூட்டையில் கட்டி காட்டுப் பகுதியில் புதருக்குள் வீசினேன். இது 2006ம் ஆண்டு நடந்தது. 

செல்வக்குமாரும் சிறு வயது என்பதால் இது குறித்து அவர்களுக்கு புரியவில்லை. ‘அப்பா எங்கே’? என கேட்ட அவர்களிடம், வியாபார விஷயமாக வெளிநாடு சென்று விட்டார் என கூறி யமுனா சமாளித்தாள். இதை உறவினர்களிடமும் கூறி நம்பவைத்தாள். 

இந்நிலையில் திருச்சி கிராப்பட்டி, அன்பு நகரைச் சேர்ந்த துரைராஜ் என்பவரிடம் தங்கவேலு கடன் வாங்கி இருந்தார். தங்கவேலுவை நாங்கள் கொலை செய்துவிட்டதால் அவரை தேடி துரைராஜ் யமுனாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது தங்கவேலு வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக துரைராஜிடம் யமுனா கூறினார். இதனால் கணவர் இல்லமால் தனியாக யமுனா இருப்பதை தெரிந்து கொண்ட துரைராஜ் அடிக்கடி கடனை திருப்பி கேட்கும் சாக்கில் யமுனாவை பார்க்க வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

தங்கவேலுவை கொலை செய்தது போல் துரைராஜையும் கொலை செய்து விடுவது என யமுனாவும் நானும் தீர்மானித்தோம். கடந்த 2007–ம் ஆண்டு ஜனவரி 22–ந் தேதி துரைராஜை வீட்டிற்கு வரும்படி யமுனா போன் மூலம் அழைத்தாள். துரைராஜ் தனது காரில் யமுனா வீட்டிற்கு வந்தார். அவரையும் யமுனா வீட்டில் வைத்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றேன். உடன் வந்த கார்டிரைவர் சக்திவேலுவையும் வீட்டிற்குள் நைசாக அழைத்து கம்பியால் பின் தலையில் அடித்து கொலை செய்தேன். பின்னர் உடல்களை வையம்பட்டிக்கு காரில் கொண்டு சென்று காரில் வைத்தே எரித்தோம் இதற்கு சரவணனையும், முத்துக்காத்தானையும் கூட்டாக சேர்த்துக் கொண்டேன். 

துரைராஜ் கொலை குறித்து என்னிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் சமர்த்தியமாக பதில் கூறி தப்பித்தேன். இதன்பின் எந்த பிரச்சனையும் இல்லாமல் எங்கள் உறவு தொடர்ந்தது. நான் என்ன சொன்னாலும் கேட்கும் நிலைக்கு யமுனா வந்து விட்டாள். 

இந்த நிலையில் தான் சத்யாவும், செல்வக்குமாரும் பெரியவர்களாகி விட்டனர். எங்களது கள்ள தொடர்பு குறித்து புரிந்து கொண்ட செல்வக்குமார் யமுனாவிடம் சண்டை போட்டான். மேலும் யமுனாவிற்கு சொந்தமான நிலத்தை ஒருவரிடம் அடகு வைத்து லட்சக் கணக்கில் பணம் வாங்கி இருந்தோம். அந்த பணம் குறித்தும் செல்வக்குமார் கணக்கு கேட்க தொடங்கினான். இதனால் அவைையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். இதற்கு யமுனாவையும் சம்மதிக்க வைத்தேன். 

கடந்த அக்டோபர் மாதம் ஒருநாள் காலையில் யமுனாவின் வீட்டிற்கு சென்றேன். சத்யா வேலைக்கு சென்று விட்டாள். செல்வக்குமார் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். யமுனாவும் அவளது தாய் சீதாலட்சுமியும் ஒரு அறையில் இருந்தார்கள். நானும் அவர்களுடன் காத்திருந்தேன். தூக்கம் கலைந்து எழுந்த செல்வக்குமார் பாத்ரூமுக்கு சென்றான். அப்போது பின்புறமாக சென்று அவன் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தேன். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவன் கீழே விழுந்தான். கத்தியால் அவன் கழுத்தை அறுத்து கொன்றேன். 

செல்வக்குமாரை கொல்லும் வரை யமுனாவும் அவளது தாயும் அறைக்குள்ளேயே இருந்தனர். பின்னர் அவன் உடலை புலிவலம் காட்டு பகுதியில் வீசினேன். தம்பியை காணாத சத்யா அவன் எங்கே என்று கேட்டு யமுனாவிடம் தகராறு செய்ய ஆரம்பித்தாள். 

இந்த நிலையில் தான் கையில் யமுனாவின் பெயரை பச்சை குத்திய நிலையில் செல்வக்குமார் பிணமாக கிடந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்தது. இதை பார்த்த சத்யா நாங்கள் தான் அவனை கொலை செய்தோம் என்றும் போலீசிடம் இதை சொல்லப் போவதாகவும் யமுனாவிடம் கூறினாள். சத்யாவை உயிருடன் விட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோம் என்பதால் அவளையும் கொலை செய்ய முடிவு செய்தோம். 

கடந்த 15–ந் தேதி அதிகாலையில் யமுனா வீட்டிற்கு சென்றேன். செல்வக்குமாரை கொன்றது போல் பாத்ரூம் அருகில் வைத்து சத்யாவை இரும்பு கம்பியால் அடித்தும் கத்தியால் கழுத்தை அறுத்தும் கொன்றேன். அவள் உடலையும் புலிவலத்தில் செல்வக்குமாரின் உடலை வீசிய இடத்தில் கொண்டு போட்டேன். இத்தனை கொலைகளையும் யமுனாவின் மீது நான் கொண்டிருந்த தீவிரமான மோகத்தால் தான் செய்ய நேர்ந்தது. 

சத்யா– செல்வக்குமார் கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்ததால் நானும், யமுனாவும் அவளின் தாய் சீதாலட்சுமியை கூட்டிக் கொண்டு ஆந்திராவிற்கு தப்பி சென்றோம். பின்னர் மீண்டும் திருச்சி வந்த போது யமுனாவையும் சீதாலட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். வேறு வழியில்லாமல் நானும் சரண் அடைந்து விட்டேன். 

இவ்வாறு கண்ணன் வாக்கு மூலத்தில் கூறி உள்ளான்.

காந்தியை ஏன் கொலை செய்யக் கூடாது? இந்த தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.. -இந்துத்துவப் பெண்ணின் திமிர் பேச்சு!

சென்னை, நவம்பர் 04: சன் டிவி வளாகத்தில் பேராசியர் மார்க்ஸ் அவர்களுக்கும் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலின் சுருக்கும்:

முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறை ஒன்று குறித்து விவாதிக்க 'சன் டிவி' வீரபாண்டியன் கூப்பிட்டிருந்தார்.

முன்னதாக கான்டீனில் அமர்ந்து நானும் அவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் என்னுடன் விவாதிக்க இருந்த இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்தார்.

வந்தவுடன் எங்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு 'டி.வி.டி'யைத் தந்தார். படு பந்தாவாகப் பேசிக் கொண்டிருந்தார்.

தான், ஒரு முறை காரில் திருச்சி சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகில் காரில் ஏதோ ரிப்பேர் ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் அங்கு நிற்க நேரிட்டதாம்.

அதற்குள் ஏகப்பட்ட லாரிகளில் மாடுகள் கேரளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்தாராம்.

அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படம் இது, என்றார்.

அப்படியா, வீட்டிற்குப் போய் பார்க்கிறேன் என்றேன்.

cow slaughter தொடர்பான அந்தப் படம் எடுக்கும்போது பல மாநிலங்களிலும் தகவல் திரட்டுவதில் ஏற்பட்ட கஷ்டத்தை விளக்கிய அவர், குஜராத் மாநில நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.

குஜராத் மாநில 'அனிமல் ஹஸ்பன்டரி' இயக்குனரிடம், அங்குள்ள நிலை குறித்து கேட்ட மாத்திரத்தில் விவரங்களை அடுத்த கணமே அவர் கூறி விட்டாராம்.

அந்த அம்மையாரின் அலட்டல்களால் சற்றே எரிச்சலுற்றிருந்த நான், இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன்.

"why, why, why are you laughing?" என்றார்.

"ஒண்னும் இல்ல. அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது" என்றேன்.

"what, what, what do you mean?" என்றார்.

"we don't slaughter cows. we slaughter only Muslims"

அப்படீன்னு அவர் சொன்னாரா? என்றேன்

கொதித்துப் போனார் அவர். சட்டென்று நாற்காலியிருந்து எழுந்தார். "இப்பிடியெல்லாம் பேசக் கூடாது. இங்கே எவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கு? எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டிருக்காங்க, அதை எல்லாம் பேசுவீங்களா?' எனச் சீறினார்.

விவாதம் முற்றியது...

காந்தி கொலை பற்றிப் பேச்சு வந்தது. "காந்தியையே கொல்லவில்லையா நீங்கள்?" என்றேன்.

"Yes, Gandhi was killed. Why not one kill him.. இந்தை தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.."என்றார்.

வீரபாண்டியனுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. என்ன இருந்தாலும் அவர் host அல்லவா. ஒரு மாதிரியாகச் சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார்.

அன்று நிகழ்ச்சி விவாதமும் படு காரசாரமாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து கீழே செல்ல லிஃப்டை நோக்கிச் சென்றோம். ஊழியர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லிஃப்ட் அருகில் வந்ததும் அவர், "நான் இந்த ஆளோட போக மாட்டேன்.." எனச் சத்தமாகச் சொல்லிவிட்டு எதிரே இருந்த லிஃப்டை நோக்கி தட தடவென ஓடினார்...

அழைத்து வந்த ஊழியர் ஒரு கணம் திகைத்துப் பின் புன்னகைத்தார்.

17 மாதங்களாக ரூமில் அடைத்துவைத்து முஸ்லிம் மாணவி கற்பழிப்பு :ஹைதராபாத்தில் பயங்கரம்


ஹைதராபாத், செப்டம்பர் 22: ஹைதராபாத் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவி ஒருவரை (பெயர் வெளியிடப்படவில்லை) அந்த கல்லூரியில் கேன்டீன் நடத்தி வரும் முதலாளி கடத்தி சுமார் 17 மாதங்கள் பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.அம்மாணவி அவனிடமிருந்து தப்பித்து வந்து காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது அவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் ஹைதராபாத் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியிருக்கிறது.
அது குறித்த போலிசில் அம்மாணவி அளித்துள்ள புகார் பற்றிய விபரம் வருமாறு…


ஹைதராபாத் நகரின் டி.ஆர்.ஆர் என்ற பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று கொண்டிருந்த இந்த முஸ்லிம் மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் நாள் அந்த கல்லூரியின் கேண்டீனில் உணவருந்த சென்ற வேளையில்,அந்த கேன்டீன் முதலாளி சத்யபிரகாஷ் சிங் என்பவன் அவர் சாப்பிட்ட உணவில் மயக்க மருந்தை கலந்து மயக்கமுறச் செய்து அம்மாணவியை கடத்தி சென்றுள்ளான்.ரகசிய இடங்களில் மறைத்து வைத்து இவரை சுமார் 17 மாதங்களாக சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியும் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக சீரழித்துள்ளான்.


தாம் சீரழிக்கப்படுவதை கண்டு அழுது புலம்பிய இம்மாணவிக்கு உதவி செய்வார் யாருமில்லாத நிலையில் தொடர்ந்து அந்த மாணவியை கொடுமைப்படுத்துவதிலும் பாலியல் ரீதியாக சீரழிப்பதிலும் தான் அவன் குறியாக இருந்துள்ளான். சில மாதங்கள் கழித்து இம்மாணவி அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டு முதலாளியின் நெருக்கடியை தொடர்ந்து இந்த மாணவியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கிறான்.
முஸ்லிம் என்பதால் தான் உன்னை சீரழிக்கிறேன்..

தொடர்ந்து பாலியல் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருந்த அவன் எல்லா முஸ்லிம் பெண்களையும் இது போலவே நான் சீரழிப்பேன்.நான் சீரழிக்கும் ஐந்தாவது முஸ்லிம் பெண் தான் நீ என்றும்,மற்ற பெண்களையும் உன்னைப் போலவே சீரழித்து கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டேன் என்றும் அடிக்கடி கூறியிருக்கிறான். தமது தந்தை பாதுகாப்புத் துறையில் வேலை பார்ப்பதாகவும் தமது சகோதரன் ஒரு கிரிமினல் வழக்கறிஞர் என்பதாலும் இத்தகைய குற்றச் செயல்களுக்காக சட்டத்தின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து தப்பி வருவதாக சொல்லியிருக்கிறான்.

பல்வேறு நெருக்கடிகளை,தாண்டி கடத்தப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில் மே 2012ல் தனது அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாம் கடத்தப்பட்டு சீரழிக்கப்படுவதை பற்றி கூறியிருக்கிறார்.இதனையடுத்து அவரது குடும்பத்தினர் இது பற்றி காவல் துறையில் புகார் கொடுத்துள்ளனர்.ஆயினும் இந்த புகார் குறித்து காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இம்மாணவி அவனது செல்போன் மூலமாக தனது அம்மாவை தொடர்பு கொள்ள முயன்ற போது நீ என்ன தான் முயன்றாலும் காவல் துறை என்னை அழைத்து செல்லும்.ஆனால் என்னை உடனடியாக வெளியே அனுப்பி விடுவார்கள்.தெலுங்கு தேச கட்சியின் பிரமுகரும் ஹைதராபாத் நகர முன்னாள் மேயருமான தீகலா கிருஷ்னா ரெட்டி தம்மை காப்பாற்றி விடுவார் என்று சொல்லியிருக்கிறான்.இந்த ரெட்டி தான் அந்த கல்லூரியின் உரிமையாளரும் கூட.

காவல் துறையினரும் கூட….
ஒரு முறை இந்த மாணவி தடுத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை பற்றி அக்கம் பக்கத்தில் இருப்போர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரை விசாரிப்பதற்காக அந்த வீட்டிற்கு வந்த போலிசார் மூன்று பேரும் இம்மாணவியை சீரழித்த கொடுமையும் நடந்திருக்கிறது.அந்த போலிசாரும் அவனுக்கு வேண்டப் பட்டவர்கள் என்கிறார் அந்த மாணவி.


பாதிக்கப்பட்ட அந்த மாணவி காவல்துறையிடம் நேரில் புகார் அளித்த போது…

இதனையைடுத்து அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.உடனே ஒரு மருத்துவமணைக்கு அழைத்து சென்று கர்ப்பத்தை கலைத்திருக்கிறான்.அந்த மருத்துவமணை டாக்டர்களிடமும் ஊழியர்களிடமும் தனது நிலையை விளக்கியுள்ளார்; அந்த மாணவி.அவர்கள் கூட இந்த அபலை மாணவிக்கு உதவத் தயாராக இல்லை.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ம் தேதி குடித்து விட்டு வீட்டைப் பூட்டாமல் அப்படியே மயங்கி இருக்கிறான்.இதனை பயன்படுத்திக் கொண்டு அம்மாணவி அவன் பிடியிலிருந்து தப்பி வந்து தற்போது போலிசில் புகார் அளித்துள்ளார்.


இப்புகாரையடுத்து அந்த மிருகத்தை காவல்துறை கைது செய்து பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.(கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.இந் சட்டத்தின் படி அந்த டெல்லி மானவியை சீரழித்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது)


இது குறித்து ஆந்திர மாநில மனிதஉரிமை ஆணையம் காவல்துறைத் தலைவர் மற்றும் வருவாய்துறைக்கும் உரிய நடவடிக்கை எடுத்து விசாரனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.மேலும் பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு பொருளாதார உதவி செய்யுமாறு ஹைதராபாத் மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமைகள் ஆணைய தலைவர் அம்ஜதுல்லா கான் உத்தரவிட்டுள்ளார்.


டெல்லியிலும்,மும்பையிலும் பெண்கள் சீரழிக்கப்பட்டால் அது குறித்து முழு தகவல்களையும் அவ்வப்போது பதிவு செய்து வரும் ஊடகங்கள் சுமார் 17 மாத காலங்கள் முஸ்லிம் என்பதால் கடத்தி பாலியல் சீரழிவுக்கு உட்படுத்தப் பட்ட விவகாரத்தை நமது இந்திய ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.இந்த விரிவான தகவல் கூட துபையிலிருந்து வெளிவரும் கல்ஃப் நியூஸ் ஆங்கில ஏட்டின் இணைய தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டவை.
முஸ்லிம்களை மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் அனுகும் இந்த விபச்சார ஊடகங்கள் தமது செயலை திருத்திக் கொள்ள முன் வரவேண்டும்.

   தொகுப்பு    :ஜே .ஷேக்பரீத்

மோடியை இந்துக்கள் ஆதரிக்கவில்லை :மனிதநேய மக்கள் கட்சி கருத்து !!

மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்பு நாடெங்கிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது!

பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்! பலர் கவலைப்படுகிறார்கள்! பலர் பதறுகிறார்கள்! நாடெங்கிலும் வெவ்வேறு விதமான உணர்வுகள் பிரதிபலிக்கிறது என்பது உண்மை!

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு! வெறித்தனம் கொண்டவர்களை இந்தியர்கள் அங்கீகரிப்பதில்லை!

அரசியல் தெளிவுள்ளவர்கள் நிதானமாகவே இருக்கிறார்கள். காரணம் பாஜக நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதில்லை! 200 இடங்களை நெருங்குவதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் என்பது மோடிக்கு நன்றாகவே தெரியும்!

அந்த 200 இடங்களை ஒருவேளை நெருங்கினாலும், அத்வானி ஆதரவு எம்.பி.க்கள் கலகம் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை. ம.பி.யின் பாஜக முதல்வர் சிவ்ராஜ்சிங் சவ்கான், அத்வானியின் ஆதரவாளர். அவர்தான் அதிகமாக எம்.பி.க்களை பாஜகவுக்கு வென்று கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது பிராந்தியக் கட்சிகளில் மராட்டியத்தில் சிவசேனாவை மட்டுமே பாஜக நம்பியுள்ளது.

மோடி பிரதமர் வேட்பாளர் என்றதும் ஜெயலலிதாவே சற்று அச்சத்தில்தான் இருக்கிறார். அதனால்தான் ‘சோ’ அவரை அவசரமாக சந்தித்துப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.

‘மோடி‘க்கு ஆதரவாக சில ஊடகங்கள்தான் மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. ‘நன்றி’ விசுவாசம் அவர்களைக் கட்டிப் போட்டிருக்கிறது போல? (பணம் பத்தும் செய்யும்).

ஒரு விளக்கு அணைவதற்கு முன்பு வேகமாக எரியும்! அதன் ஒளி வடிவம் ஆகும்! பிறகு அணைந்து விடும்! மோ(ச)டி வித்தைகளின் இறுதி நிலை அப்படித்தான் ஆகும் என்பதை விரைவில் நடக்கவிருக்கும் 5 வடமாநில தேர்தல் முடிவுகள் உணர்த்தும்!

அதே நேரம் காங்கிரஸ் கட்சி தனது தூக்கத்தைக் கலைத்து வெளிவர வேண்டும்! 81 கோடி மக்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, நாட்டின் வளர்ச்சிக்காக நிலம் கையகப்படுத்தும் போது நில உரிமையாளர்களுக்கு 5 மடங்கு நட்டஈடு வழங்குவது, சாலையோர வியாபாரிகளின் வாழ்வுரிமையைக் காத்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை வழங்கியது, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்தது போன்ற நல்ல சாதனைகளை மக்களிடம் எடுத்துச்செல்ல பிரச்சாரக் குழுக்களை அமைத்து செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது!

குறிப்பாக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராகவும், பிரியங்கா காந்தியை பிரச்சாரக்குழு தலைவராகவும் முன்னிறுத்தினால் கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புற மக்களும் காங்கிரஸை நோக்கி திரள்வார்கள்!

மோடிக்கு நகர்ப்புற மக்களுக்கு மத்தியில்தான் பரபரப்பு இருக்கிறது. ஆனால் நேரு குடும்பத்திற்குத்தான் கிராமப்புறங்களிலும் செல்வாக்கு இருக்கிறது.

சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்திலும், ஈழத்தமிழர்களுக்கான துரோகம் விவகாரத்திலும் காங்கிரஸ் கட்சி தவறுகளை உணர்ந்து திருத்திக்கொண்டால் அதன் வெற்றி பிரகாசமாகும்!

இன்னும் காலமிருக்கிறது! மோ(ச)டியை முனை மழுங்கச் செய்யும் மாநில கட்சிகளுடனான உறவை அக்கட்சி வலுப்படுத்திக் கொள்வதும் நலம் பயக்கும்!
அதேசமயம், சிறுபான்மையினரும், நலிந்த பிரிவு மக்களும் மோ(ச)டியைக் கண்டு பதறத் தேவையில்லை.

இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் உணர்வோடும், சகோதரத்துவத்தோடும் நம்மோடுதான் உள்ளார்கள்!

மோ(ச)டி அலை வீசவில்லை! வீசுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது!


ராஜபக்ஷே சந்திக்கும் அதே நெருக்கடிகளை மோ(ச)டியும் சந்திக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

அவரை முன்னிறுத்துவது அரசியல் பேரழிவு என அத்வானியே கூறியுள்ளார்! அது யாருடைய அரசியல் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை!

எனவே சமூக ஊடகங்களில் பணியாற்றும் மத நல்லிணக்க மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் குஜராத்தின் கிராமப்புற நிலை குறித்தும், அங்கு மோடியின் தவறான நிர்வாகக் குறைகள் குறித்து புள்ளி விபரங்களைக் கணக்கெடுத்து, ஒப்பீட்டளவில் மோடி, பீஹாரின் நிதிஷ்குமாரின் சாதனைகளை விட பின்தங்கியுள்ள உண்மைகளை அம்பலப்படுத்திட வேண்டும்!

மாறாக, தனிநபர் விமர்சனம் மூலம் மோடிக்கு அனுதாபத்தையோ, விளம்பரத்தையோ ஏற்படுத்திக் கொடுத்திடக் கூடாது!

காரணம் மோடி அதைத்தான் விரும்புகிறார்.



M.தமிமுன் அன்சாரி ,
 மாநில பொது செயலாளர்
 மனிதநேய மக்கள் கட்சி ! !

கலவரத்தை தடுக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும்: முலாயம் சிங் வீட்டை நோக்கி SDPI கட்சி மாபெரும் கண்டன பேரணி:

sdpi protest for up riot
 உத்தர பிரதேசம், செப்டம்பர் 17: உத்தர பிரதேசத்தில் நடைபெறும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கோரி SDPI கட்சியின் சார்பில் இன்று(10.9.2013) டெல்லி ஜந்தர் மந்தரில் முலாயம் சிங் வீட்டை நோக்கி மாபெரும் கண்டன பேரணி நடைபெற்றது.
கலவரத்திற்கு காரணமான குற்றவாளிகளை விரைவாக கைது செய்யக்கோரியும், சுதந்திரமான விசாரணை கோரியும், வகுப்புவாத வன்முறை தடுப்பு சட்டத்தை அமல்படுத்தக்கோரியும், வகுப்புவாத அரசியலை பா.ஜ.க மற்றும் சமாஜ்வாதி பார்ட்டி நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணி நடைபெற்றது.பேரணியாக சென்ற எஸ்.டி.பி.ஐ கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்த கண்டன பேரணியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் டெல்லி பிரதேச தலைவர் வழக்கறிஞர் முஹம்மது அப்பாஸ் தலைமை தாங்கி நடத்தினார்.இதில் ஏராளனமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
செய்தி  :ஜே .ஷேக்பரீத் 

முஸ்லீம்கள் மீது பழி போடுவதை ஆர்.எஸ்.எஸ்.நிறுத்திக் கொள்ள வேண்டும் !!!

கடந்த வாரம் வேலூரில் ஆர்.எஸ்.எஸ்.மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் படுகொலையைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 90 ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளதற்கான புள்ளி விவரங்களை காவல்துறை வைத்துள்ளது.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் படுகொலையின் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினரே இருப்பதாக ரமகோபாலன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதில் வெள்ளையப்பனின் படுகொலையிலும் அது பிரதிபலித்துள்ளது. கடந்த சில நாட்களாக 'லவ் ஜிஹாத்' திற்கு எதிராக வெள்ளையப்பனின் கடும் எச்சரிக்கையே அவரின் படுகொலைக்குக் காரணம் என்று முஸ்லிம்கள் மீது பழி சுமத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஆனால் வேறு கோணங்களில் ஏன் இவர்கள் சிந்திப்பதில்லை என்று தெரியவில்லை. இந்து முன்னணியினருக்கு வேறு எதிரிகளே இல்லையா? அவர்களும் மனிதர்கள் தானே.! வட்டி, சொத்துப் பிரச்சனை, இன்னபிற தொடர்புகளில் எதிரிகள் எல்லோருக்கும் உண்டு.

ஆனால் மதப் பிரச்சனைதான் ஒரு மதம் சார்ந்த அமைப்பினரின் மரணத்திற்கு காரணம் என்று கூறுவதை முதலில் தவிற்க வேண்டும். எதிரிகளை அருகில் வைத்துக் கொண்டு எங்கேயோ தேடுவதுதான் தற்போதைய பல இழப்புகளுக்குக் காரணம். இது இந்து அமைப்பினர் என்று இல்லை. எல்லா அமைப்பினருக்கும் இது பொருந்தும்.

இந்தியா, ஜூலை 12: எதிரி இவனாகத்தான் இருக்கக் கூடும் என்று தன் பார்வை வேறொரு புறம் இருக்க உண்மையான எதிரி இதை சாதகமாகப் பயன் படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறான். இதை ஏன் நம் மக்கள் உணர்வதில்லை?

முஸ்லிம்களை சினிமா உள்ளிட்ட மீடியாக்கள் ஒட்டுமொத்தமாக தீவிரவாதியாக குத்தகை எடுத்துள்ளது அதைவிட கொடுமை.

இந்தியாவின் பெருந்தலைவர்களை கொன்றவர்கள் லிஸ்டில் எந்த முஸ்லிமும் இல்லை. காந்தி முதற்கொண்டு ராஜீவ் காந்தி கொல்லப் பட்டது வரையிலான வரலாற்றில் முஸ்லிம் அல்லாதவர்களே கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்.

தற்போது எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் அதில் முஸ்லிம்களை சம்மந்தப் படுத்தி திசை

திருப்புவதை அரசு முதற்கொண்டு செய்து வருகிறது.

ஏறகனவே பல ரூபங்களில் பழியை தாங்கி நிற்கும் முஸ்லிம்கள். தன் மீதுதான் பழி வரும் என்று அறிந்தும் இதுபோன்ற காரியங்களில் இறங்குவார்களா? என்ற நுண் அறிவுகூட இல்லாத அரசும் அதிகாரிகளும் இருக்கும் வரை இழப்புக்கள் தவிர்க்கமுடியாததாகிவிடும்.

கல்வியிலும் ஜாதியிலும் மேலோங்கி நிற்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கவாதிகளுக்குமா இது புரியவில்லை?

முஸ்லிம்கள் மீது பழி போடுவதை முதலில் நிறுத்திவிட்டு உண்மையான குற்றவாளியை கண்டுபிடுக்க முனைப்புடன் களமிறங்க வேண்டியது அரசின் கடமை. பொதுமக்களும் இதில் அரசுக்கு உதவ வேண்டும். ஆர்.எஸ்.எஸும் இதற்கு விதிவிலக்கல்ல.


 தொகுப்பு:ஜே :ஷேக் பரீத் 

இந்திய பணக்காரவர்களின் கறுப்புப் பண விவகாரம், விக்கி லீக்ஸ் வெளியிட்டது.




இந்தியா, பிப்ரவரி 16:  ஏழை எளிய மக்களின் பணத்தை கொள்ளை அடித்து சுவிஸ் வங்கியிலே 

கருப்புப் பணமாக வைத்திருக்கும் முதல் 13 இந்தியர்களின் பெயர் விபரங்களை விக்கி லீக்ஸ் 

வெளியிட்டு உள்ளது.

ராஜ் பவுண்டேசன்..........1,89,008 கோடி

அர்சத்மேதா.................1,35,800 கோடி


லல்லு பிரசாத் யாதவ்.........28,900 கோடி


ராஜீவ் காந்தி..................19,800 கோடி


கருணாநிதி....................35,000 கோடி


சிதம்பரம்.......................32,000 கோடி


சரத் பவார்.....................28,000 கோடி


கலாநிதி மாறன்...............15,000 கோடி


HD குமாரசாமி................14,500 கோடி


JM சிந்தியா......................9,000 கோடி


கேடன் பிரகாஷ்..................8,200 கோடி


A ராஜா...........................7,800 கோடி


சுரேஷ் கல்மாடி..................5,900 கோடி

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)