முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திமுக கூட்டணியின் 40 வேட்பாளர்களின் தோல்வியும் --பின்னணியும் !!!

1.திருவள்ளூர்: விடுதலை சிறுத்தை கட்சி ரவிக்குமாருக்கு, மாவட்ட தி.மு.க.,வினர், சரியான ஒத்துழைப்பு தரவில்லை.
2.வட சென்னை: தி.மு.க., கிரிராஜனுக்கு வேலை செய்ய வேண்டிய வட சென்னை மாவட்ட தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், மத்திய சென்னைக்கு சென்று விட்டனர்.


3.தென் சென்னை: தி.மு.க.,வின் இளங்கோவனுக்கு, தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பணியில், 'சீன்' மட்டுமே காட்டினர். இல.கணேசனுக்கு கூட்டணி கட்சியினர் பூத் கமிட்டி பணிகளை சரிவர கவனிக்கவில்லை.


4.மத்திய சென்னை: தி.மு.க., வேட்பாளர் தயாநிதிக்கு, சிறுபான்மை சமுதாய ஓட்டுகள் சுளையாக கிடைக்கவில்லை.


5.ஸ்ரீபெரும்புதூர்: தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனிடம், பணம் வாங்குவதில் தான் கட்சியினர் குறிக்கோளாக இருந்தனர். ஓட்டு வாங்கி கொடுக்கவில்லை. ம.தி.மு.க., மாசிலாமணி, தொகுதிக்கு புதியவர் என்பது பலவீனமாகி விட்டது.


6.காஞ்சிபுரம்: தி.மு.க.,வின் செல்வம், மாவட்ட தி.மு.க.,வினர் கோஷ்டி பூசலினால் வெற்றி வாய்ப்பை இழந்தார். ம.தி.மு.க., மல்லை சத்யாவுக்கு, தே.மு.தி.க., மாவட்ட நிர்வாகி, கடைசி நேரத்தில், பணத்திற்காக பிரச்னை செய்தது பாதகமாக அமைந்து விட்டது.


7. அரக்கோணம்: தி.மு.க.,வின் இளங்கோ முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தாததால், வெற்றிக்கு பாதிப்பு. பா.ம.க., வேலுவுக்கு, அவர் சார்ந்த சமுதாய மக்கள் ஓட்டு போடவில்லை.


8.வேலூர்: இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமானுக்கு ஆதரவாக இல்லாமல், தி.மு.க.,வின் துரைமுருகன் ஆதரவாளர்கள் உள்குத்து பணியில் ஈடுபட்டனர். பா.ஜ., வேட்பாளர் ஏ.சி.சண்முகம், பணத்தை தண்ணீராக இறைத்தும், இரண்டாம் இடமே கிடைத்தது.


9.கிருஷ்ணகிரி: மாவட்ட முக்கிய புள்ளியின் ஆதரவாளர்கள், தி.மு.க.,வின் சின்ன பில்லப்பாவுக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை. பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டும், தொண்டர்கள் ஆளுங்கட்சி வலையில் சிக்கி விட்டனர்.


10.தர்மபுரி: தி.மு.க.,வின் தாமரைச்செல்வன், கட்சியினருக்கு சரிவர பணம் செலவு செய்யவில்லை. அ.தி.மு.க.,வின் மோகனுக்கு, சொந்த சமுதாயத்தினரின் ஓட்டுகள் கிடைக்கவில்லை.


11.சிவகங்கை: தி.மு.க.வின் சுப.துரைராஜுக்கு ஆதரவாக தி.மு.க.,வினர் சரிவர பணிகள் செய்யாமல் 'பம்மி' விட்டனர்.


12.விருதுநகர்: ம.தி.மு.க.,வின் வைகோவுக்கு, தேவர் சமுதாயத்தினரின் ஓட்டுகள் கிடைக்கவில்லை. தி.மு.க.,வின் ரத்திவேலுக்கு தொகுதி தி.மு.க.,வினர் ஆதரவு கிடைக்கவில்லை.


13.திருவண்ணாமாலை: வழக்குகளுக்கு பயந்து, மாவட்ட நிர்வாகி ஒருவர், தி.மு.க.,வின் அண்ணாதுரைக்கு ஆதரவாக தேர்தல் பணியில் ஈடுபடவில்லை


14.ஆரணி: தி.மு.க., மாவட்ட நிர்வாகி, ஒன்றிய நிர்வாகிகளுக்கு சரிவர பணப்பட்டுவாடா பண்ணவில்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்திற்கு வராததது, மூர்த்திக்கு பாதகமாகி விட்டது.


15.விழுப்புரம்: மாவட்ட நிர்வாகி ஒருவர் மீது மக்களிடம் உள்ள தீராத கோபம் தி.மு.க.,வின் முத்தையனை வீழ்த்தியது.


16.கள்ளக்குறிச்சி: தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவருக்கு வேண்டப்பட்ட வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதால், தேர்தல் பணியில் அக்கட்சியினர் ஆர்வம் காட்டவில்லை


17.சேலம்: தி.மு.க.,வின் உமாராணிக்கு எதிராக, கட்சியில் உள்ள எதிர்கோஷ்டியினர் உள்குத்து வேலையில் ஈடுபட்டனர். தே.மு.தி.க.,வின் சுதீசுக்கு, பா.ம.க., ஆதரவு கிடைக்கவில்லை.


18.நாமக்கல்: தி.மு.க.,வின் காந்தி செல்வன் மத்திய அமைச்சராக பணியாற்றிய போது, தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை.


19.ஈரோடு: தி.மு.க.,வின் பவித்ரவள்ளி புது முகம் என்பது பாதகமாகி விட்டது. ம.தி.மு.க.,வின் கணேசமூர்த்திக்கு கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.


20. திருப்பூர்: தி.மு.க.,வின் செந்தில்நாதன் பலமான வேட்பாளராக இல்லை. காங்கிரசின் இளங்கோவனுக்கு, முன்னணி நிர்வாகிகள் ஒத்துழைக்கவில்லை.


21. நீலகிரி: பா.ஜ., வேட்பாளருக்கு கிடைக்க கூடிய ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்ததால், ராசா தோல்வி அடைந்தார்.


22.கோவை: தி.மு.க.,வின் கணேஷ் குமாருக்கு பெரும்பான்மை சமுதாயத்தினரின் ஓட்டுகள் கிடைக்கவில்லை.


23.பொள்ளாச்சி: தி.மு.க.,வின் பொங்கலூர் பழனிசாமி சொந்த கட்சியினரை சரியான முறையில் அணுகவில்லை.


24.திண்டுக்கல்: தி.மு.க.,வின் காந்திராஜனுக்கு, உள்ளூர் தி.மு.க., வினர் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.


25.கரூர்: தி.மு.க.,வின் சின்னசாமி அ.திமு.க., விலிருந்து வந்தவர் என்பதால், இன்னமும் அதே கட்சியில் இருக்கிறார் என, தொகுதி மக்கள் கருதி விட்டனர்.


26.திருச்சி: முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் நலத்திட்டங்களை அதிகமாக நிறைவேற்றியதால், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி.


27.பெரம்பலூர்: முன்னாள் மத்திய அமைச்சர் நெப்போலியன் மீது இருந்த அதிருப்தியே, தி.மு.க., தோல்விக்கு முக்கிய காரணம். பாரிவேந்தர் பிரசாரத்தை தாமதமாக துவக்கியதால் தோல்வி அடைந்தார்.


28. கடலூர்: தி.மு.க.,வின் நந்தகோபால கிருஷ்ணன், பண்ருட்டியை தவிர, தொகுதியின் மற்ற பகுதிகளில் அன்னியர் என்ற நிலை காணப்பட்டது.


29.சிதம்பரம் (தனி): பா.ம.க.,வின் சுதா மணி ரத்தினம், கணிசமான ஓட்டுகளை பிரித்தது, திருமாவளன் தோல்விக்கு காரணமாகி விட்டது.


30.மயிலாடுதுறை: ம.ம.க., ஹைதர் அலிக்கு தி.மு.க., நிர்வாகி கள் ஒத்துழைப்பு சரிவர கிடைக்கவில்லை.


31. நாகப்பட்டினம் (தனி): கம்யூனிஸ்ட் கட்சியின் பலம் பொருந்திய வேட்பாளர் ஓட்டு பிரித்தது, தி.மு.க.,வின் விஜயன் தோல்விக்கு முக்கிய காரணம்.


32.தஞ்சாவூர்: தி.மு.க.,வின் டி.ஆர்.பாலு தொகுதி விட்டு தொகுதி மாறியது பின்னடைவுக்கு முக்கிய காரணம்


33.மதுரை: தி.மு.க.,வின்வேலுச்சாமிக்கு எதிராக அழகிரியின் ஆதரவாளர்கள் உள்குத்து வேலையில் ஈடுபட்டனர்.


34.தேனி: பொன்.முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக, மாவட்ட நிர்வாகிகள், தேர்தல் பணியில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கினர்.


35. ராமநாதபுரம்: தி.மு.க.,வின் முகமது ஜலீலுக்கு, கீழ் மட்ட கட்சி நிர்வாகிகளிடம் தொடர்பு இல்லை.


36. தூத்துக்குடி: கட்சியில் நிலவும் கோஷ்டி பூசலே, தி.மு.க.,வின் ஜெகன் தோல்விக்கு முக்கிய காரணம்.


37.தென்காசி (தனி): கிருஷ்ணசாமி, கூட்டணிக்கு மாறியது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.


38.திருநெல்வேலி: தி.மு.க.,வின் தேவதாஸ் சுந்தரம் பணத்தை தண்ணீராக செலவழித்தும், தி.மு.க., வினர் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டவில்லை.


39.கன்னியாகுமரி: மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி பிரமுகருக்கு, தி.மு.க.,வில்,' சீட்' வழங்கவில்லை. காங்கிரசின் வசந்தகுமார், கோஷ்டி பூசல் காரணமாக, தோல்வியை தழுவினார்.


40.புதுச்சேரி: தி.மு.க.,வில் சீனியர்களுக்கு. 'சீட்' கொடுக்காதது நாஜீம் தோல்விக்கு காரணம். நாராயணசாமி வீழ்ச்சிக்கு, காங்., மீது உள்ள அதிருப்தி காரணம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறைந்ததின் பின்னணி என்ன ?


1) சென்ற 15-வது பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் எண்ணிக்கை முப்பதாக இருந்துள்ளது. 543 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் தற்போது இது 23 ஆக குறைந்துள்ளது.. இது மொத்தமுள்ள 23 பேர் என்பது 4.24 சதவிகிதமாகும்.இந்தியாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 13.24 சதவிகிதம்
2) பாரதிய ஜனதா கட்சி அயோத்தியில் பாபர்மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுதல், பொதுசிவில்சட்டத்தை நடைமுறைப் படுத்துதல், காஷ்மீருக்கான தனிஅந்தஸ்தை நீக்குதல் உள்ளிட்ட முஸ்லிம் எதிர்ப்பு அரசியலை முன்வைத்து இந்துப் பெருமக்களின் ஒருங்கிணைப்பு நிகழ்ந்தது.சாதிய எல்லைகள் தாண்டி இந்துமயம் என்பதின் அரசியல் வெளிப்பாடு , இந்த அரசியலில் இந்துத்துவமனமாக கட்டமைக்கப்பட்டது
3) பாரதிய ஜனதா கட்சி நிறுத்திய 428 போட்டியாளர்களில் ஏழு வேட்பாளர்கள் முஸ்லிம்கள். இவர்களில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதியஜனதாவின் வேட்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் 9485 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர் மூன்றுமுறை எம்.பி.யாக இருந்தவர்.
4) பிஜேபி கூட்டணி கட்சியான எல்.ஜே. எஸ்.பி.(Lok jan shakthi party )சார்பில் பீகார் மாநிலத்தில் போட்டியிட்ட சவுத்ரி மெகபூப் அலி கைசெர் மட்டும் வெற்றி பெற்றார். இவரும் கூட பீகார் மாநில காங்கிரஸ் கட்சிபொறுப்பாளராக இருந்தும் அக்கட்சியால் வாய்ப்பு மறுக்கப்பட்டபோது எல்ஜேஎஸ்பி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
5) முதன்முதலாக அமைந்த பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். மிக அதிக பட்சமாக ஏழாவது பாராளுமன்றத்தில் 51 எம்பிக்கள் இடம் பெற்றிருந்தார்கள். தற்போது இந்த எண்ணிக்கை 23.
6) முஸ்லிம்களின் வாக்குகள் பிஜேபி ஆளும் குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிஜேபிக்கு ஆதரவாகவே விழுந்திருக்கிறது. இல்லையென்றால் இத்தகையதொரு முழுவீச்சிலான வெற்றி பிஜேபிக்கு கிடைத்திருக்காது.
7) மேற்காணும் மாநிலங்களில் உள்ள முஸ்லிம்களின் வாழ்தல் குறித்த அச்சத்தினால் ஏற்பட்ட விளைவாகவும் சமரசமாகவும் இருக்கலாம். நம்பகரமான மாற்று கட்சிகள் அம்மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு இல்லாமல் போனதும் சிறுபான்மையராக அவர்கள் இருப்பதும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
8) பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம்கள் பிஜேபிக்கு எதிராகவே வாக்களித்து உள்ளனர்.ஆனால் முஸ்லிம் வாக்கு வங்கி ,சமஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிரிந்து விழுந்த காரணத்தால் பிஜேபி அணி எளிதில் வெற்றி பெற முடிந்தது.
9) கன்னியாகுமரி பாரளுமன்ற தொகுதியிலும் இதுதான் நடந்துள்ளது பிஜேபி வேட்பாளர் பொன்ராதா கிருஷ்ணன் வெற்றி கூட இவ்வகையில்தான் என நாம் அனுமானிக்கலாம். சிறுபான்மை கிறிஸ்தவர் 51 சதவிகிதம், முஸ்லிம்கள் 5 சதவிகிதம் என 56 சதவிகிதம் சிறுபான்மையர் இருக்கின்ற ஒரு தொகுதியில் சிறுபான்மை கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் வாக்குகள் காங்கிரஸ், திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட், ஆம்ஆத்மி என கட்சிகளுக்கு பிரிந்து போனதும், சாதி வரம்புகளைத் தண்டி இந்து அடையாள அரசியல் மேலோங்கியதையும் பிஜேபியின் வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக குறிப்பிடலாம்.
மேற்காணும் தகவல்கள் எனது நண்பர் Razool Hg அவர்களின் " பதினாறாவது பாராளுமன்றத்தில் இருபத்து மூன்று முஸ்லிம்கள் " என்கிற பதிவிலிருந்து எடுக்கப்பட்டது ..

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)