முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளுக்கு சவுதி அரசு பாராட்டு!!!

இன்று ஹஜ் சங்கமம் நிறைவு !








உலக முழுவதும் ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 லட்ச இஸ்லாமியர் மக்காவுக்கு வருகை தந்தார்கள் . 

இவர்கள் அனைவரும் ஹஜ்கடமையை நிறைவேற்ற மினா அரபா முஸ்தலிபா

போன்ற இடங்களுக்கு ஒட்டுமொத்த ஹாஜிகளும் ஓன்று கூடுவார்கள் . 


இந்த இடங்களில் ஹாஜிகளுக்கு வழிதடங்கள் தடுமற்றம் , மற்றும் உடல் நிலை 

பாதிக்கப்பட்ட ஹாஜிகளுக்கு உதவி செய்யும் வகையில் இந்தியா உள்ள இஸ்லாமிய 

அமைப்புகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா,முஸ்லிம் லீக் , தமுமுக , கேரளா 

சார்ந்த ஏ பி முஸ்லியார் அவர்களின் ஜமாத் ,கேரளா முஜாதீன் ஜமாத் , ஆகியோர் 

உறுப்பினர்கள்.

 ஐந்து நாட்கள் முழ நேரம் ஒய்வுயில்லாமல் ஹாஜிகளுக்கு உதவி செய்தார்கள் இதை

 பார்த்த சவுதி  ஹஜ் அமைச்சகம் அந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு  நன்றி தொிவித்து உள்ளனர் .

ரஞ்சிதாவை தொடர்ந்து நயந்தாராவையும் துரத்தும் நித்தியானந்தா ?

நடிகை நயன்தாரா மன அமைதி பெறுவதற்காக தமது ஆசிரமத்துக்கு வருமாறு நித்யானந்தா ஆசிரமம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம்.


ஏற்கனவே நயன்தாரா காதல் விஷயங்களில் ஏமாற்றம் அடைந்துள்ளார். அவருக்கு முதல் காதல் தோல்வியில் முடிந்தது. இரண்டாவது காதலும் கைகூடவில்லை. இதனால் இனிமேல் காதலே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.

கதாநாயகர்கள் சிலர் இவருடன் நெருக்கமாக நட்பு வைத்துக்கொள்ள நெருங்கியும் அவர் பிடிகொடுக்கவில்லை. முழு கவனமும் சினிமாவிலேயே இருக்கிறது. நிறைய படங்களில் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஏமாற்றங்களால் விரக்தியில் இருக்கும் நயன்தாராவுக்கு மனஅமைதி கிடைக்க செய்யும் முயற்சியில் நித்யானந்தா ஆசிரமத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் நித்யானந்த ஆசிரமத்துக்கு வருமாறு நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நிறைய பெண்கள் ஆசிரமத்துக்கு வந்து தியானம், யோகா மூலம் கவலைகளை மறக்கிறார்கள். எனவே நீங்களும் ஆசிரமத்துக்கு வந்து மன அமைதி பெறுங்கள் என்று அழைத்துள்ளனர்.

நயன்தாரா கிறிஸ்தவராக இருந்தாலும் காதலுக்காக இந்து மதத்துக்கு மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நித்யானந்தா ஆசிரம பக்தர்களின் அழைப்பை நயன்தாரா இதுவரை ஏற்கவில்லையாம்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)