முத்துப்பேட்டை, மே 17 : முத்துப்பேட்டை யில் கடந்த சில ஆங்குளாக 108 ஆம்புலன்ஸ் இயங்கி வந்தது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி ஏற்பட்டு வரும் விபத்துகளை சரிசெய்யப்பட்டு வந்தன. இது இப்பகுதி மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்த 108 ஆம்புலன்ஸை ஏனோ காரணத்தால் திருவாரூருக்கு எடுத்து சென்றனர். இதனால் வெறுப்படைந்த பொது மக்கள் அதிகாரிகளிடம் புகர் கொடுத்தனர். மேலும் போராட்டங்களையும் அறிவித்தனர். பின்னர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பொது மக்கள் 108 ஆம்புலன்ஸ் எப்சி வேலைக்காக சென்று உள்ளதாகவும், பணிமுடித்த வுடன் வந்து விடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள். முத்துப்பேட்டை ஆப்லன்சை ரத்து செய்ய இருப்பதாக தகவல் அறிந்த பொது மக்கள் மற்றும் பொது நல அமைப்புகள் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். அதில் வர்த்தக கழக கவுரவ தலைவர் இரா.திருஞானம், தர்ஹா. பேரவை மாநில தலைவர் S.S. பாக்கர் அலி சாஹிப், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி சுல்தான் இபுராஹீம், தமிழ் நாடு இளைஞர் பேரவை மாநில தலைவர் சதீஸ் குமார், பேரூராட்சி கவுல்சிலர் பாவா பகுருதீன், ஜபருல்லா கான், மெட்ரோ மாலிக், அமைப்புகள் மற்றும் பொது மக்கள் 108 ஆம்புலன்ஸை முற்றுகை இட்டு சாவியை பிடுங்கி மறைத்து கீழே உட்கார்ந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருவாரூர் மாவட்ட 108 நிர்வாகி பிரசாத் போராட்ட காரரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியில் முத்துப்பேட்டையில் இது தொடர்ந்து நடைபெறும் என்று உறுதி யளித்ததின் பேரில் போராட்டத்தை வாபெஸ் பெற்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)