முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை SDPI - யின் வளர்ச்சிநிதி வசூல் இயக்கம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை


முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI ஆல விருச்சமாய் வேரூன்றிட நிதி தாரீர் என்று வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் என்று பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது எனவே இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், SDPI கட்சி ஆல விருச்சமாய் வேரூன்றிட அதிகமான நிதிகள் தேவைப்படுகிறது என்றும் எனவே இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் தேச நலன், சமுதாய முன்னேற்றம், நமது சந்ததிகளின் எதிர்காலம், அநீதிக் கெதிரான போராட்டங்கள், உரிமைக்குரல், மக்கள் சேவைப்பணிகள், தேர்தல் கலங்கள் ஆகிய அனைத்தும் கொண்டு ஓர் களமாக விளங்கிட உதவிட வாரீர் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தொடர்புக்கு: 98654 27777 , SDPI மாவட்ட பொருளாளர். நெய்னா முஹம்மது: 96583 37915 , SDPI மாவட்ட செயலாளர். அப்துல் அஜீஸ்: 99427 05536

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR . அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்...


முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : முத்துப்பேட்டையில் நேற்று அனைத்து கட்சி சார்பில் வீரவணக்கநாள் என்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். இந்த பொது கூட்டத்தில் ஏராளமான பேச்சாளர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு இக்கூட்டத்தை சிறப்பித்தனர். மேலும் DMK மாவட்ட துணைச் செயலாளர் MS . கார்த்திக், தலைமை பேச்சாளர் பெர்ணார்ட், கரூர் சேகர், தஞ்சை மன்னர்மன்னன் ஒன்றிய செயலாளர் சிவ சாமி ஆகியோர் கலந்து கொண்டு அவரவர் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiepxress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டையில் குடி போதையால் நாயை கட்டிபிடித்து தூங்கிய இளைஞர்...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 07: முத்துப்பேட்டையில் உள்ள மிகவும் பிரபலமான காளியம்மன் கோயில் வாசலில் இன்று மதியம் கடுமையான குடிபோதையில் ஒரு இளைஞர் பல மணிநேரம் ஒரு நாயுடன் தூங்கினார். இதனை கோயிலுக்கு வந்த பக்கதர்கள் மற்றும் பொது மக்கள் வேடிக்கையுடன் அந்த விசித்திர காட்சியை கூட்டம் கூட்டமாக பார்த்து சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அந்த நாயும், இளைஞரும் எழுந்து போகாததால் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அதிகமான கூட்டம் கூடின. பின்பு அங்கு வந்த சில இளைஞர்கள் குச்சியை வைத்து இவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா அல்லது செத்து விட்டார்களா என்று குத்தி பார்த்தனர். அப்போது நாய் எழுந்து ஓடியது. அதன் பின்பு அந்த இளைஞன் போதையில் அந்த நாயை தேடிய காட்சி மக்கள் மத்தியில் பெரும் காமடியை ஏற்படுத்தியது. பின்பு இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அந்த வாலிபரை விசாரித்ததில் அந்த நபருக்கு வாய்பேச முடியாது என்றும், அவருக்கு வயது 30 ஐ தாண்டி விட்டதாகவும் அப்போது தெரியவந்தது.மேலும் இவர் பழைய பேருந்து நிலைய வட்டாரத்தில் லோடு ரிக்க்ஷா ஒட்டி வந்தவர் என்றும், அப்போது அப்பகுதி மக்களிடம் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றும் அதற்கான தொகையை தான் தருவதாகவும் அசைவுகளால் கூறிவந்துள்ளார். இந்த மன உளைச்சளின் காரணத்தால் தான் இவர் எந்நேரமும் போதையில் இருந்து வருகிறார் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
source from; www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை தர்ஹாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்ட மீலாது நபி விழா..




முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : முத்துப்பேட்டை அடுத்த ஜம்போனோடையில் உள்ள தர்ஹாவில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இந்த விழா தர்ஹா தலைமை நிர்வாகி ஜனாப். S .S . பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
source from www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,ரிப்போர்ட்டர் இல்யாஸ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)