முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நகையை திருடிய திருடனை வளைத்து பிடித்த TNTJ நிர்வாகிகள்



முத்துப்பேட்டை, ஏப்ரல் 24: முத்துப்பேட்டை அடுத்து மருதங்கா வெளி ரயில் நிலையம் அருகில் திரு. ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். மகன் மாரிமுத்து வீடும் அருகில் உள்ளது. இவரது உறவினர் வீர செல்வா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இவரது மகன் பாலசிவா வயது 2 , அங்கு தூங்கினான். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீடு பூந்து அந்த சிறுவனின் காலில் உள்ள தங்க கொலுசு மற்றும் கழுத்தில் உள்ள சங்கிலியை பறித்து சென்று விட்டான். அதன் பின்பு அதே பகுதியை சேர்ந்த டைலர் கண்ணன் மகள் தேவியுடைய தாலி செய்னை பறிக்க முயற்சித்தான் அப்போது கூச்சலிட்டதால் பயந்து அவன் ஓடி விட்டான். பின்பு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகிரெட் பத்தவைக்கும் போது அவனை அடையாளம் கண்ட பொது மக்கள் துரத்தினர். அனால் இதிலும் அவன் தப்பித்து சென்று விட்டான். எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை. அதே நிலையில் அடித்த சில மணி நேரத்தில் அந்த மரும நபர் ஆலங்காடு அண்ணா சிலை அருகில் ஒரு தோப்பு வெளியை தாண்டி குதிக்கும் போது அங்குள்ள வீட்டு நபர் கூச்சலிட்டார். அப்போது அந்த பகுதியில் எதிர் பாராமல் வந்த முத்துப்பேட்டை ஆசாத் நகர் TNTJ கிளை நிர்வாகிகள் பைசல், பசூல் ரஹ்மான், யாசர் அரபாத் ஆகிய மூவரும் அந்த மரும நபரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது அவன் ஒரு பேருந்தில் ஏறி தப்பிக்க முயற்சித்தான் அப்போது இரு சக்கர வாகன மூலம் அவனை துரத்தி வளைத்து பிடித்தனர். அப்போது அவனை பிடித்து தர்ம அடிகொடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது தகவலை விசாரித்த போலீசார் அந்த மர்ம நபர் புதுகோட்டை மாவட்டம் ஜெகத பட்டினத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் தில்லை ராஜன் வயது 23 என்பது தெரிய வந்தது. முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இந்த திருடனை பிடித்த மூவரையும் போலீசார் வாழ்த்தி வரவேற்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் இல்யாஸ், யூசுப் அலி (ஆலிம்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)