முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. அதிர்ச்சி ரிப்போர்ட்.


தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் Z தமிழ்’ சேனலில`சொல்வதெல்லாம் உண்மை’னு ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்..

















ஏற்கனவே விஜய் டிவியில் லட்சுமி அரைத்த `கதையல்ல நிஜம்’ என்ற மாவு தான் இதுவும்.
இப்போது நமக்கு பிரச்னை அந்த மாவு அல்ல.. அதில் வந்து சிக்கும் அப்பாவி மக்கள். அதிகமாக கள்ளத்தொடர்பு பஞ்சாயத்துகளே அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.


பெருவாரியாக வர்க்கரீதியாகவும் கல்வியிலும் சமூக அந்தஸ்த்திலும் கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்களே சேனல்காரர்களின் டார்கெட்.
அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு தங்களின் குடும்பத்தின் அந்தரங்க கதைகளை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது சரியா.. நாம் வீடியோ வடிவில் கொடுக்கும் வாக்குமூலங்கள் பல தலைமுறைகளாக நமது சந்ததிகளை அவமானத்திற்குள்ளாக்குமே என்பது குறித்த எந்த தெளிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள்.


மிகச்சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்னையை ஒரு சேனலில் பதிவு செய்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும் ஏற்றுகிறார்கள்.


இன்று விவரம் தெரியாமல் டிவியில் வாக்குமூலம் கொடுத்தவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இதை காண நேர்ந்தால் எவ்வளவு அவமானத்திற்குள்ளாகும். பேசினால் தீர்த்துவிடக்கூடிய பிரச்னையை டிவியில் ஒளிபரப்பி பின் எப்போதும் அந்த குடும்பம் ஒன்று சேரவே முடியாதபடி செய்துவிடுகிறார்கள்.


அதோடு நிகழ்ச்சியில் திடீர் என்று அடிதடியெல்லாம் நடக்கிறது. விசாரித்ததில் திட்டமிட்டே அப்படியான சூழலை டிவி நிர்வாகமே உருவாக்குவதாக தெரிகிறது.


அதாவது ஸ்டூடியோவுக்குள் ஒரு தரப்பு கதை சொல்லிக்கொண்டிருக்கும். மறு தரப்புக்கு பக்கத்து அறையில் பெரிய டிவியில் அங்கு நடப்பதை ஒளிபரப்பி அவர்களுக்கு வெறியேற்றுவார்களாம். அப்புறமென்ன உள்ளரங்கில் கதை சொல்பவர்கள் மீது கோபத்தில் பாய அதை சேனல் ஆட்கள் சூட் பண்ணி குஷியாகிவிடுவார்களாம்..


ஏன் `அவன் பொண்டாட்டிய இவன் கரெக்ட் பண்றது.. இவ புருசனை அவ கரெக்ட் பண்றது’ போன்ற சம்பவங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் தொழிலதிபர்கள் வீட்டில் நடப்பதில்லையா என்ன.. ?திறமையிருந்தால் அப்படிப்பட்ட பிரபலங்கள் அல்லது பணக்காரர்களின் ஒரு குடும்பத்தை கூட்டி வந்து இப்படி சந்தி சிரிக்க வைக்க முடியுமா.. ?


முடியாதென்பதால் விபரமில்லாத அப்பாவிகளின் குடும்பத்தை இப்படி டிஆர்பி ரேட்டிங்கிற்காக சீரழிப்பது அசிங்கமாக இல்லையா..
முதல் வேலையாக இந்தமாதிரியான நிகழ்ச்சிகளை தடை

நாகை வடகரையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் திறப்பு -மனிதநேயமக்கள்கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி முஸ்லீம் லீக் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வடகரை-அரங்கங்குடி சமுதாய மக்கள் நிறைந்து வாழும் ஊர்களில் ஒன்றாகும்.

அங்கு அல்-கறீம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற-கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான காப்பகம் கடந்த 08.06.14 அன்று திறக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வில் நானும் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளர் அப்துல் ரஹ்மான்(Ex MP) சிவகங்கை தொழிலதிபர் ஜலீல் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டோம்.




அறக்கட்டளை நிர்வாகி நண்பர் அர்ஷத் அவர்களின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்காப்பகம் சால வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

10வயதுக்கும் குறைவான தாய்-தந்தை இல்லாத பெண் குழந்தைகளையும், கடும் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளையும் இக்காப்பகத்தில் சேர்ந்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு மார்க்க கல்வி, மற்றும் உயர்படிப்பு வரை முழு செலவையும் இவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வி முடிந்ததும் அப்பெண்ணுக்கு திருமணத்தையும் இவர்களே நடத்தி கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள்.

பெண் குழந்தைகளை பலரும் சுமையாக கருதும் ஒரு காலக்கட்டத்தில், அல்-கறீம் அறக்கட்டளை எடுத்திருக்கும் இம்முயற்சி காலம், காலமாக தொடர்ந்து தொய்வின்றி நடைபெற பிரார்த்திப்போம்.
60 பிள்ளைகள் தங்கும் அளவுக்கு வசதி இங்கு உள்ளது பெற்றோரை இழந்த அல்லது கொடிய வறுமையில் வாழும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால், உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம்
தொடர்புக்கு; அர்ஷத் 94440 21144 (மாலை 5 மணிமுதல் 8 வரை மட்டும் தொடர்பு கொள்க)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)