9:04 PM
அதிரை ECR சாலையில் இன்று மாலை பேருந்து மற்றும் பைக் ஆகியவை நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர்.
ஆவனத்தை சேர்ந்த விஜய் மற்றும் விக்கி ஆகியோர் தங்களது இருசக்கர மோட்டார் பைக்கில் அதிரை நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்பொழுது ECR சாலை வழியாக ஏர்வாடி நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா பேருந்து எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பைக்கின் மீது பயங்கரமாக மோதியது. இக்கோர விபத்தில் விஜய் மற்றும் விக்கி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்த அப்பகுதிவாசிகள் சம்பவ இடத்திருக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.
இவ்விபத்து குறித்து அதிராம்பட்டினம் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
8:53 PM
இதுவரை இந்திய பிரதமர்கள் பதவி ஏற்பு விழாவில் இல்லாத நடைமுறையாக நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதன் முறையாக வகுப்புவாத கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது வெளிநாட்டு பார்வையாளர்களையும், விருந்தினர்களையும், மதசார்பற்றவாதிகளையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இன்று மாலை 6.00 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடைய பதவி பிரமாணம் நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ‘ஜெய் ஶ்ரீராம்..! பாரத் மாதாகி ஜெய்!!” – என்ற கோஷங்கள் உரக்க எழுந்தன.
அதன் பிறகு மரபு ரீதியாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேடைக்கு வர தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் முடிந்ததும், மேடையிலிருந்த பாஜக தலைவர்களும், பார்வையாளர்கள் மத்தியிலிருந்த இந்துத்துவவாதிகளும் மீண்டும் “ஜெய் ஶ்ரீராம்..! பாரத் மாதாகி ஜெய்..!!” என்று கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.
இது பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த வெளிநாட்டு பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் மதசார்பற்றவாதிகள் மத்தியில் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஏனென்றால், மதசார்பற்ற அரசியலமைப்பின் ஆட்சி, அதிகாரம் கொண்ட இந்திய நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. அத்தோடு, இதே கோஷங்கள்தான் 1990-களில், இந்துத்துவ வெறி இயக்கமாக உருவெடுத்தது. அதன் விளைவாக உத்திரப்பிரதேசத்தின் அயோத்தியில் 15-ம், நூற்றாண்டின் பழமைவாய்ந்த பாபரி மசூதி இடிக்கப்பட்டது. இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் கேலிகூத்தாக்கப்பட்டன.
மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு 44 பேர் கொண்ட அவரது புதிய அரசின் உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பாஜகவின் தலைவர் ராஜநாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி மற்றும் நஜ்மா ஹெப்துல்லாஹ் ஆகியோர் இதில் அடங்குவர்.
8:42 PM
முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல் பிறை 14, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 28-05-2014 புதன் கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை குட்டியார் பள்ளிவாச லில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.
எனவே எனது உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.
இப்படிக்கு: S.M.S.G.அப்துல் மாலிக்
தொடர்புக்கு:7708176136,9842547390