முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருவாரூர் மாவட்ட SP: நேரில் சந்தித்த தமுமுக வினர்..



  • முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! !
    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் கடந்த 17 ம் தேதி நடைபெற்றது .இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமகாவும் கோஷங்கள் எழுப்பபட்டன. அதோடு காவல்துறை விதித்த நேரமும், நீதிமன்ற ஆணையையும் அவமதித்தும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதாமகவே ஊர்வலம் வரபட்டது. அதோடு இத்ரீஸ் என்பவர் வீட்டின் மீதும் கலவர நோக்கில் கற்களை எறிந்து சென்றுள்ளனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமுமுக சார்பில் 25-09-2013 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.
    இந்சந்திப்பில் நூர்தீன் மாவட்ட தலைவர் தமுமுக , முகம்மது மாலிக் மாவட்ட செயலாளர் மமக , நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக, வக்கீல் தீன் முகம்மது நகர செயலாளர் மமக, முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக, முகம்மது தாவுது முன்னால் நகர தலைவர் தமுமுக மற்றும் சமூக ஆர்வலர் சேட்டு நஜீம், பாட்ஷா உடன் இருந்தார்கள்...

    Thanks For

    Muhaitheen

கண்மணிகளே இந்த நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்....!!


இந்த புகைப்படத்தில் காணப்படும் சுஷ்மிதா என்ற பெண் தன்னுடைய முகநூலில் தம்முடைய போட்டோவை பதிவேற்றம் செய்திருந்தார்.
காமத்தின் சகதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கயவர்கள் சுஷ்மிதாவின் போட்டோவை வைத்து பல்வேறு போலி முகநூல் கணக்கு திறந்து...
இவர் விலை மாது என்று விளம்பரம் செய்து சமுதாயத்தில் இழிவை ஏற்படுத்தியிருந்தார்கள்.
தான் இழிவுப்படுத்தப்பட்டதை அறிந்த பெண்ணும், இந்த பெண்ணின் குடும்பத்தினரும் தற்கொலையை தேர்வு செய்து...
இந்த மாபாதக முடிவுக்கு வந்து விட்டார்கள்.
கண்ணியமாக வாழ்ந்து வரும் சமுதாய கண்மணிகளே... எத்தனையோ முறை சொல்லிவிட்டோம் உங்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்று...
வாழும் உலகில் இந்த பெண்ணை போன்று நீங்களும் உங்களது வாழ்வை தொலைக்க வேண்டுமா ? என்பதை நீங்களே சிந்தனை செய்து 
கொள்ளுங்கள்.

திருவாரூர் மாவட்ட SP காளிராஜ் மகேஷ்குமாரை நேரில் சந்தித்த TNTJ


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை சார்பாக  ஊர்வலத்தில் வரம்பு மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இன்னும் சில கோரிக்கைகளை முன்னிருத்தியும் 28.09.2013 அன்று  திருவாரூர் மாவட்டகாவல்துறை   கன்கானிப்பாளர் காளிராஜ் மகேஷ்குமாரை நேரில் சந்தித்து வலியுருத்தப்பட்டது

இது சம்மந்தமாக எஸ்பியை சந்திக்க போன குழுவிற்க்கு தலைமை தாங்கி போன கிளை உதவி தலைவர் கட்டி நாநா அவர்கள் நம்மிடம் எஸ்பியை சந்தித்த போது நடந்தது என்ன என்பதை விளக்கினார்

நாம் போய் எஸ்பியை சந்திந்ததுமே அவர் நம்மிடம் அந்த வரம்பு மீறிய ஊர்வல ஏற்பாட்டாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டதாக கூறினார்

மேலும் அவர் கூறுகையில் இரவு நேரத்தில் இருட்டில் பிரச்சனை செய்யலாம் என்று திட்டம் போட்டுதான் நேரம் கடந்து வந்திருப்பார்கள் என்பதை ஒத்து கொண்டார்

இந்த நிலை வரும் வருடங்களில் நீடிக்காமல் இருக்க தவ்ஹித்ஜமாத் வலியுறுத்தும் இரண்டு ஆலோசனைகளான 1. மன்னார்குடி ரோடு வழியாக இசிஆர் ரோட்டில் போகவேண்டும் 2. காலை 10 மனிமுதல் பகல் 2 மனிக்குள் ஊர்வலத்தை முடித்துவிட வேண்டும்  என்பதை கூறினோம்

மிகவும் சரியான ஆலோசனை இதை அமல்படுத்தினாலே பெறிய அளவிலான  டென்சன் குரைந்துவிடும் இதை நடை முறை படுத்த முயற்ச்சிப்பதாக வாக்குறுதியளித்தார்

இதுவல்லாமல் இன்னும் சில வேலைகளையும் தவ்ஹித்ஜமாத் சட்டபூர்வமாக செய்துவருகிறது அதன் முழு விபரம் இப்போது கூற இயலாது இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியாக நடக்கும் நீங்களும் துவா செய்யுங்கள் என்று நமது இனையதளத்திற்க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)