முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பெரிய நாயகி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரதின கொண்டாட்டம். ரசூல் பீவி கொடி ஏற்றினார்.





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 67- வது சுதந்திரதின விழா இன்று நடைபெற்றது. முத்துப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோவிலூர் மந்திரபுரீஸ்வர் கோவில் நிர்வாகி அதிகாரி இளங்கோ, அரிமா மாவட்ட தலைவர் டாக்டர். இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். தேசியக் கொடியை முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஹாஜி. ரசூல் பீவி ஏற்றிவைத்து பேசினார். 

அப்போது பேசிய ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் கூறிகையில் இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான இந்த பெண்கள் பள்ளி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டாண்டு காலம் இந்த பள்ளி இருந்து வருகிறது என்றும்,  அதற்க்கு ஒரு உதாரணம் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் முன்னாள் கவுன்சிலரும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்மணியுமான ஹாஜி. ரசூல் பீவி கொடி ஏற்றி வைத்து சிறப்பித்திருப்பது முத்துப்பேட்டையின் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்கிறது என்றும், மேலும் இந்த பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் அடிப்படை வசதிக்காக ரூ.70 லட்சத்தில் திட்டமதிப்பீடு செய்து இந்து அறநிலைதுறை சார்பில் அரசிடம் வழங்கி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 90 சதவீதம் திட்டப்பணி ஒதுக்கீடு செய்து குறித்து வேலைகள் முடிந்துவிட்டது இதற்கான திட்டம் விரைவில் நிறைவேற்ற உத்தரவு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் பி.டி.எ. இணைச்செயலாளர் திருநாவுக்கரசு கல்விக்குழு உறுப்பினர்கள் சம்மந்தம், தங்கமணி, முத்துராமலிங்கம், மங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன், கீழக்காடு கூட்டுறவு வங்கி தலைவர் நாராயணசாமி, அரிமா மாவட்ட தலைவர் ராஜசேகர், ஜெயபால் ரோட்டரி மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக், அறங்காவலர் ராஜேந்திரன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜெகவருல்லா, மேலாண்மை கமிட்டி உறுப்பினர் ஐயப்பன், பி.டி.எ. பொருளாளர் மருதுராஜேந்திரன், கல்விக்குழு தலைவர் குணசேகரன் உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சி இறுதியில் உதவி தலைமையாசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார். 

நமது நிருபர்:  AKL. அப்துல் ரஹ்மான்..

முத்துப்பேட்டை முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி.!!! அப்துல் ரஹ்மான் எம்.பி. கண்டனம்...






முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டையில் பெருநாள் தொழுகையின் போது முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி அறிக்கை பின்வருமாறு:

முத்துப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது பா.ஜ.க இளைஞரணி மாநில பொருப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்றனர். இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் ரமலான் பெருநாள் அன்று இவர்கள் நம்பகுதியில் எப்படி கோஷம் போட்டு செல்லலாம் என இளைஞர்கள் எண்ணி நாமும் பேரணி செல்வோம் என கூறி மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் சென்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சணை வரும் சூழ்நிலை உருவானது.

இருப்பினும் பெருநாள் அன்று காவல்துறை அதிகாரிகள் எப்படி பிஜேபினருக்கு அனுமதி அளிக்கலாம் பலமுறை மோதல்கள் உருவாகும் பகுதி முத்துப்பேட்டை என தெரிந்தும் முஸ்லிம்களுக்கு இன்று பெருநாள் என்றும் தெரிந்தும் காவல்துறையினர் அனுமதி அளித்தது தவறு அதுமட்டுமில்லாமல் பெருநாள் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குறியது .உடனடியாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அப்துர் ரஹ்மான் எம்.பி பேசினார் .அதற்கு அந்த அதிகாரி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் முஸ்லிம்களை அமைதிகாக்க சொல்லுங்கள் என திருச்சி கோட்ட காவல்துறை உயர் அதிகாரி அப்துர் ரஹ்மான் எம்.பியிடம் கேட்டுக்கொண்டார் .

தகவல்: லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)