முத்துப்பேட்டை, அக்டோபர் 12 : முத்துப்பேட்டையில் உள்ள செம்படவன்காடு பாமணி ஆற்றில் இளம்பெண் குத்தித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூரை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகள் மீனா (27) பீகாம் பட்டதாரியான இவர் கடந்த ஒருவருடம் தனது தாயார் உடல் நிலை சரி இல்லாததால் ஜாம்புவோநோடை தர்ஹாவில் வேண்டுதலுக்காக தனது தாயாருடன் மீனா தங்கி உள்ளார்.
பல மாதங்கள் தங்கி உள்ள மீனா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் மீரா உசேன் மீது காதல் ஏற்பட்டு கடந்த வருடம் இருவரும் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் தனது தாயாரும் இறந்து விட்டார். இந்த நிலையில் மதுக்கூரில் உள்ள மீனாவின் அண்ணன் வீட்டில் இருவரும் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
அப்போது மீரா உசேனும் அங்குள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேன் அடிக்கடி காணமல் போவதும் திரும்ப வருவதுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் மீராஉசேனுக்கு ஏற்கனவே ஆலங்காட்டை சேர்ந்த பெண்ணுடன் திருமணமாகி உள்ள சம்பவம் தெரிகிறது அதிர்ப்த்தி அடைந்த மீனா மீரா உசேனிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. மேலும் மீரா உசேனை காணவில்லை. மேலும் மீனா எங்கும் தேடியும் கிடைக்காததால் முத்துப்பேட்டைக்கு வந்து முதல் மனைவியிடம் விசாரித்தார் அப்போது முதல் மனைவிடம் தங்கி உள்ளதாக தெரிகிறது. மேலும் இருவரும் மீனாவை திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் மீரா உசேன் மீனாவை பார்த்து நான் இனிமேல் உன்னிடம் சேர்ந்து வாழமாட்டேன் என்றும் உறுதியுடன் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்பப்த்தி அடைந்த மீனா என்ன செய்வது என்று நடந்தே பல மீட்டர் தூரம் சென்றுள்ளார். மேலும் இதனால் ஆத்திரம் அடைந்த மீனா இனி நம்ம வாழ்க்கை கிடைக்காது என்று எண்ணி ஒரு வெள்ளை பேப்பர் தாளில் என் சாவுக்கு காரணம் மீரா உசேனும் அவரின் முதல் மனைவியும் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு செம்படவன் காடு பாமணி ஆற்று பாலத்தின் மீது ஏறி குத்தித்து உள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த வேல்முருகன், ஸ்டாலின், அழகர் ஆகியோர் குதித்த பெண்ணை காப்பாற்றி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீனாவை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், ஏட்டு சந்திரமோகன் ஆகியோர் விசாரித்து மீனாக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மீனா தற்போது 5 மாதம் கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை