முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

விபத்தில் மரணித்த பள்ளி மாணவர்கள் ஒரே இடத்தில் அடக்கம்


புதுக்கோட்டை, ஜூன் 20: புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மரணித்த பள்ளி மாணவர்களின்  உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டது.
புதுக்கோட்டை அருகே நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வல்லநாடு என்ற இடத்தில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவர்களை ஏற்றிவந்த பால் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொருங்கியது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த  மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு  ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு கடயக்குடி அருகில் குண்டாற்றங்கரையில் பொக்கலின் மூலம் குழி தோண்டப்பட்டது. அனைத்து மாண வர்களின் உடல்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பெற்றோர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள்  அஞ்சலி செலுத்திய பிறகு ஒரே குழியில் வரிசையாக அடுக்கி அடக்கம் செய்யப்பட்டது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)