புதுக்கோட்டை, ஜூன் 20: புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் மரணித்த பள்ளி மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப் பட்டது.
புதுக்கோட்டை அருகே நேற்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வல்லநாடு என்ற இடத்தில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக எதிரே அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவர்களை ஏற்றிவந்த பால் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொருங்கியது.இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 9 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு கடயக்குடி அருகில் குண்டாற்றங்கரையில் பொக்கலின் மூலம் குழி தோண்டப்பட்டது. அனைத்து மாண வர்களின் உடல்களும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பெற்றோர்கள், சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு ஒரே குழியில் வரிசையாக அடுக்கி அடக்கம் செய்யப்பட்டது.
0 comments:
Post a Comment