முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கொத்பா பள்ளி 30 .12 .2011 திறப்பு, நிர்மான கமிட்டி செயலர் MKN முஹம்மது முஹைதீன் பேட்டி








முத்துப்பேட்டை, டிசம்பர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள கொத்பா பள்ளி வாசல் திறப்பு விழா வருகிற 30 .12 .2011 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளதாக கொத்பா பள்ளி நிர்வாகிகள் அறிவித்துள்ளார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த முத்துப்பேட்டை கொத்பா பள்ளி நிர்மான கமிட்டி செயலர் ஜனாப். MKN . முஹம்மது முஹைதீன் அவர்கள், இந்த பள்ளியை சென்ற மாதம் 04 .11 .2011 ஆம் தேதியே திறக்க இருந்ததாகவும், ஆனால் பள்ளிவாசலின் வேலைகள் முடிவு பெறாமல் இருந்ததின் காரணத்தால் ஒரு மாதம் காலதாமதம் செய்திருந்தோம் என்றும், தற்போது அனைத்து வேலைகளும் முடிவு பெரும் விதத்தில் இருந்து வருவதால் இன்ஷா அல்லாஹ் வருகிற 30 .12 .2011 ஆம் தேதி அன்று பள்ளியை திறக்க இருக்கிறோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். எனவே இப்பள்ளி திறப்பு விழாவிற்கு அனைத்து ஊர் மக்களும் மற்றும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாஅத் பள்ளி தலைவர்களும், மற்றும் பொது மக்களும் தவறாமல் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

அண்ணிய முதலீட்டை இந்தியாவிற்குள் விட மாட்டோம் வர்த்தக சங்கங்கள் போர்க்கொடி!







முத்துப்பேட்டை, டிசம்பர் 01 : இந்தியாவில் சில்லரை வணிகத்தில் அண்ணிய முதலீட்டில் 50 சதவீதத்தை உயர்த்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் இன்று முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது. எனினினும் இவற்றை ஆதரித்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்கள் சார்பில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை நகர வர்த்தக சங்கத்தின் தலைவர் திரு. கோ. அருணாச்சலம் அவர்கள், இந்தியாவில் உள்ள அனைத்து சில்லரை வணிகத்தில் அண்ணிய முதலீட்டை 50 சதவீதம் திணிக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது என்றும், எனவே முத்துப்பேட்டையில் உள்ள வர்த்தக சங்கம், வர்த்தக கழகம், பெரிய கடைத்தெரு வர்த்தக சங்கம் ஆகிய மூன்றும் சேர்ந்து முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து அண்ணிய முதலீட்டை உடனே தடுத்து நிறுத்த இந்த போராட்டத்தில் இறங்கி உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)