முத்துப்பேட்டை, ஜூலை 30: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் மாவட்ட துணை செயலாளராக இருப்பவர் வெற்றி. இவருக்கு இஸ்லாமிய இளைஞர்களின் பழக்க வழக்கம் அதிகம் .இவர் மர இழைக்கும் ஆசாரி தொழில் செய்து வருகிறார். கடந்த 5 ஆம் தேதி 4 பேர் கொண்ட மதவெறி கும்பல் வெற்றியை அரிவாளால் மிக கொடூரமாக கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது.
இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்த வெற்றியை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த கொலைவெறி தாக்குதல் தொடர்பாக காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாதாகவும், ஆனால் காவல்துறை, தாக்குதல் நடத்தியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால்,முதலில்முதல் கட்ட போராட்டமாக சாலை மறியல் போராட்டத்தை நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினரை காவல் துறை சமாதானம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக தெரிகிறது.
கொலைவெறி கும்பல் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள், தனது இரண்டாம் கட்ட போராட்டத்தை கையிலெடுத்து "மயான கொட்டகையில்" சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் . உண்ணாவிரத போராட்டம் இருந்தவர்களை வழுக் கட்டாயமாக காவல்துறை வெளியேற்றியது.
இரண்டுகட்ட போராட்டங்களிலும் நீதி கிடைக்காத காரணத்தினால் மனவுளைச் சலடைந்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் இரண்டு பேர் செல் போன் கோபுரத்தின் உச்சிக்கு சென்று தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர்.
நடைபெற்ற அத்தனை சம்பவங்களின் உண்மையும், பின்னணியையும் பற்றி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் விளக்கியுள்ளார் வெற்றி.
வெற்றியின் பரபரப்பு பேட்டி விரைவில் வீடியோ வடிவில் காணத் தவறாதீர்கள்.