முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத் அறிவிப்பு: "உம்மா கன்னி அம்மாள்"

முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மரைகாயர் தெரு மர்ஹும் ஹாஜி A.N.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மகளும் மர்ஹும் A.N.A. நெய்னா மரைகாயர் அவர்களின் மனைவியும் S.K.M. முஹம்மத் தம்பி மரைகாயர் அவர்களின் மாமியாரும், A.N.A. அயுப்கான் அவர்களின் தாயாருமாகிய "உம்மா கன்னி அம்மாள்" இன்று பகல் 1 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று இரவு 9 :00௦௦pm மணியளவில் கொத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்:
A.N.M. நெய்னா மரைக்காயர் & பிரதர்ஸ்
A.N.A. அயுப்கான்

மவுத் அறிவிப்பு: "முஹம்மத் ரபீக்"

முத்துப்பேட்டை ஜூலை 29 : அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...மவுத் அறிவிப்பு, OPM. தெரு கும்மி வீடு மர்ஹும் சு.மு. ஷேக் தாவூத் அவர்களின் பேரனும், மர்ஹும் S.M. தாவூத், ஹமீது அவர்களின் மகனும், ஆசாத் நகர் கா.சு. நெய்னா முஹம்மத் அவர்களின் மருமகனும் சென்னை A. ஜைனுல் ஆப்தின், இஸ்லாம்தீன், அவர்களின் மைத்துனரும், அகமது கபீர், ஷேக் தாவூத், அப்துல் சமது, அன்வர் பாட்சா, தமீம் அன்சாரி, அப்துல் ரஹ்மான், ஜாகிர் ஹுசைன், ஷாஜஹான், ஆகியோரின் சகோதரருமாகிய "முஹம்மத் ரபீக்" அவர்கள் இன்று அதி காலை 4 :30 மணி அளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லஹி வ இன்னா இலைகி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று (அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்) முஹிதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர் :
ச. ஹாஜா கமாலுதீன்.
சகோதரர்கள்

நமதூர் மக்களுக்கு பொது அறிவிப்பு...

உப்பூர் புதுரோடு T.T.P. மெயின் ரோட்டில் RS no: 1. புல எண்: 304/4 ஏ-1-ல் 1.23 .00 (2) புல எண்: 305 /1பி 0 .75.50 ,(3) புல எண்: 306 /6 எ 0 .76 .50 , (4) புல எண்: 304/4 எ 0 .04 .௦௦ (5) புல எண்: 306 /6 பி ௦.௦௨.௦௦ உள்ள தோட்டம் எனது தந்தையின் காலம் சென்ற A.V.M. சிக்கந்தர் வாங்கியதாகும். இந்த தோட்டத்தில் எனக்கு பாக விதம் இருக்கிறது. எனவே தாயார் திருமதி. S.பரீதா அம்மாள் அவர்கள் இந்த தோட்டத்தை சிலருக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. இது என்னை கட்டுபடுத்தாத - சட்டப்படி எண் அனுமதி இல்லாமல் விற்பனை செய்வது குற்றமாகும். மேற்படி சொத்து பற்றி வழக்கு தொடரப்பட்டுள்ளது. யாரும் இந்த சொத்தினை வாங்கிருந்தால் இதில் எனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் தெருவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு
எஸ். தாஜுதீன் S/o. A.V.M. சிக்கந்தர்,
முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள் ஒரு பார்வை...

முத்துப்பேட்டை ஜூலை 26 : அலையாத்திக் காடுகளுக்குப் பேர் போன இடம்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை. இதற்கு மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், என்று எங்கு இருந்து சென்றாலும் கிட்டத்தட்ட ஒரே பயண நேரம்தான் முத்துப்பேட்டைக்கு. பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கொஞ்சம் தூரம் பயணமானாள் ஆறும் கடலும் சங்கமிக்கும் இடம்தான் 'லகூன்!'


சுற்றிலும் வேர்களைத் தண்ணீருக்கு மேல் வைத்து சுவாசிக்கும் அலையாத்தி மரங்கள் காடாகப் பறந்து விரிந்து நிற்க, அதிக ஆழமற்ற - கடலிலும் சேர்க்க முடியாத, ஆற்றிலும் சேர்க்க முடியாத - அந்த நீர்ப்பரப்பில் செல்லும் அனுபவம், அங்கு மட்டுமே கிடைக்கும் பரவசம்!
இந்த அலையாத்திக் காடுகளில் நரிகண்டல், கருங்கண்டல், நீர்முள்ளி, திப்பரத்தை, சுப்புன்னை, வென்கடல், தில்லை என நமக்கு அறிமுகமே இல்லாத மூலிகை மரங்களையும் பூநாரை, கூலக்கட, நீர்க் காகம், ஊசிவால் வாத்து என அழியும் தருவாயை எட்டிவிட்ட பறவைகளையும் தன்னுள் புதைத்து வைத்து உள்ளது இந்த கடல் புதையல்!
படகு சவாரி கிடைக்கிறது. ஆங்காங்கே குட்டிக் குட்டித் தீவுகள் போல காடுகள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காகவே அவற்றில் குடிசைகள் அமைத்து இருக்கின்றனர்.காட்டுக்குள் நடந்து போக மரத்தில் பாலமும் அமைக்கப் பட்டுள்ளன. உயர் கோபுரங்களிலும் நின்று பார்க்கலாம். இதனை பார்க்க அலை மோதும் கூட்டம் அதில் வெளிநாட்டவர்களையும் அழைப்பதில் விட்டுவைக்கவி இல்லை அட்டகாசமான பயணத்திற்கு அலையாத்திக் காடுகள் கேரண்டிதான்!

தொகுப்பு: ரிப்போர்ட்டர் இல்யாஸ்

சுவாமி நித்தி படுக்கை அறை காட்சியை எடுத்தது ரஞ்சிதா தான்!

சென்னை ஜூலை 20: 2010 மார்ச் முதல் வாரத்தில் வெளியான சாமியார் நித்யானந்தா நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் பெரும் அதிர்வை உண்டாக்கின.
இதையடுத்து நித்யானந்தா தலைமறைவானார். பின்னர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளியே உள்ள நித்யானந்தா கடந்த 13.07.2011 அன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய சுவாமி நித்யானந்தா நக்கீரன் உள்ளிட்ட சில ஊடகங்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் மூலம் பணம் கேட்டு மிரட்டியதாக பொய் குற்றச் சாட்டை கூறினார். இதையடுத்து, 'நக்கீரன் வெளியிட்டது உண்மையான வீடியோ காட்சிகள்தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சட்டப்பூர்வமாகவும் இதனை நிரூபிப்போம்.

வீடியோ காட்சிகள் போலியானவை என்று சொல்லும் சுவாமி நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் நீதிமான்கள், சட்ட வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தடயவியல் நிபுணர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 100 பேர் முன்பாக இந்த வீடியோ காட்சிகள் போலியானவை என்பதை நிரூபிக்கத் தயாரா என்று நக்கீரன் பகிரங்கமாக சவால் விடுகிறது.

இந்த சவாலை எதிர்கொண்டு, தங்களின் பரிசுத்தத் தன்மையை நிரூபிக்க நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தயாரா?' என்று நக்கீரன் கூறியிருந்தது. இந்நிலையில் சென்னையில் 18.07.2011 அன்று செய்தியாளர்களை சந்தித்த நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்த ஸ்ரீதர், எனக்கும் நக்கீரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நித்யானந்தா தொடர்பான வழக்கை நான்தான் நக்கீரன் மீது தொடர்ந்தேன்.நான் எந்தக் கட்சியையும் சாராதவன்.

சுவாமி நித்யானந்தா எனக்கு வந்து ஒரு கிளைண்ட். நித்தியானந்தாவுக்கு யாரோ தவறான ஒரு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர் நக்கீரன் மற்றும் சில ஊடங்களை மட்டும் குற்றம் சாட்டியிருக்கிறார். அன்றைக்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உள்பட அனைத்து ஊடங்களும் நித்யானந்தா பற்றிய செய்திகளை வெளியிட்டது. யாரும் நித்யானந்தாவை மிரட்டவில்லை.

இந்த சிடி விஷயம் பற்றி தெரிந்தது 5 பேர்தான். நித்யானந்தா, ரஞ்சிதா, லெனின் தர்மானந்தா, ஆர்த்திராவ். நித்யானந்தா என்னிடம் சொல்லும் போது, சிடி உண்மையானது என்றார். அப்போது அட்வைஸ் பண்ணினோம். உண்மையான சிடியாக இருந்தால் தாமதப்படுத்த வேண்டாம். கன்சல்டிங் பாட்னர் என்று சொல்லிவிட்டு கேஸில் இருந்து தப்பிக்க பாருங்க. அதைவிட்டுட்டு ரொம்ப டீப்பா போனீங்கன்னா டிரபுள் வரும். அதற்கேற்ற மாதிரி அவர் ஒத்துக்கிட்டார்.

இதையடுத்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் சிடியில் இருந்தது நான்தான் என்று ஒப்புக்கொண்டார். அப்போது யோக நிலையில் இருந்ததாக கூறியிருந்தார். அதைப்போல ரஞ்சிதாவும், ஆமாம் நான் சாமிக்கு சேவை செய்வேன் என்று பேட்டி கொடுத்தார். தற்போது சிடி பொய் என்று கூறுகின்றனர். இது வழக்கை திசை திருப்பும் செயல். அந்த சிடியை பார்த்தால் நித்யானந்தா எழுந்து கையை நீட்டி அங்கபாரு என்று சொல்லும்போது, ரஞ்சிதா அதுவெல்லாம் ஒன்றும் இல்லைபடு என்று சொல்லுகிற மாதிரி இருக்கும்.

அதை உன்னிப்பா கவனித்தால் தெரியும். கண்டிப்பா ரஞ்சிதா படுக்கை அறை காட்சியை, போக்கஸ் லைட் நடுவில் எடுத்திருக்காங்க அப்படியின்னா வேர்க்க விறுவிறுத்துதான் எடுத்திருப்பாங்க. அப்போது நான் வழக்கறிஞராக சொல்லிவிட்டேன். ரஞ்சிதாதான் எடுத்திருக்காங்க. ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்து நித்யானந்தா அந்த அட்வைஸை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் என்று கூறினார்.

இஸ்லாம் ஒரு அறிவுச் சுடர்

பாரத் நாட்டின் ஆன்மிகச் செல்வம் இஸ்லாம். இம்மார்க்கத்தில் இருந்து இரண்டு விதத்தில் லாபம் அடைந்திருக்கிறது. இறைவன் ஒருவனே, இறைவன் ஒன்றுதான் என்பதைப் பற்றி எள்ளளவும் குழப்பமின்றி உறுதியாக ஊர்ஜிதப்படுத்தியது இஸ்லாம் நமக்குச் செய்த முதல் பனி. மக்களிடயே சகோதர சமத்துவத்தை வாழ்கையில் நடத்திக் காட்டியது இரண்டாவது பணி. இவ்விரண்டையும் மகத்தானவியகக் கருதுகிறேன்.
இஸ்லாம் உச்ச ஸ்தானத்தில் இருக்கும்போது அது ஏனைய மதங்களிடத்தில் சகிப்புத்தன்மை காட்டமல் இருந்ததில்லை. தவிரவும், அது முழு உலகத்தின் நன்மதிப்பையும் பெட்டரு, சிறந்து விளங்கிற்று, மேல்நாடுகள் அந்தகாரத்தில் ஆழ்த்திருந்த சமயத்தில் கீழ்நாட்டில் மிகவும் ஒளிமிக்க விண்மீனொன்று உதயமாகி, உலகத்துக்கு அறிவுசுடரையும் ஆற்றலையும் அளித்துள்ளது.
இஸ்லாத்தின் ஈடில்லாப் பெருமைக்குக் காரணம் வாலாயுதம் அல்ல. கஷ்டமிக்க தியாகங்களும், அதன் ஆரம்பகால கலிபாக்களின் கண்ணியமுமே காரணம்.
என் இந்து சகோதரர்கள் பரிசுத்த உள்ளத்துடன் குரானைப் படிக்கப் புகுந்தால் இஸ்லாமியத் தத்துவத்தின் இணையட்ட்ற தன்மையும், உண்மை உபதேசமும் வெளியாவதை உணர்வார்கள்.

எங்களைப்பற்றி


முத்துப்பேட்டை, ஜூலை 07: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமானது தங்களுடைய அனைத்து விதமானக கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் மேலும் சமூகம், சமுதாயம் இவற்றின் நன்மையான கருத்துக்களை வெளி கொண்டு வருவதற்காகத்தான் இந்த இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளம் எவ்வகையான இலாப நோக்கிலோ, அல்லது புகழுக்காகவோ இயக்கப்பட வில்லை என்றும் குறிப்பாக இந்த இணைத்தளம் சமுதாய வளர்ச்சிக்குத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
தங்களின் கருத்துக்களை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் அவற்றை நாங்கள் உலகத்திற்கு பகிர்ந்து கொடுக்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
மேலும் தொடர்புக்கு: public.mttexpress@gmail.com 

இப்படிக்கு:
அ. முஹம்மது இல்யாஸ். MBA. MA. (Journalism & Mass Communication)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)