முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சென்னையில் உதயமானது மறுமலர்ச்சி தமுமுக ----தமுமுக விலிரிந்து பிரிந்து சென்றவர்களின் புதிய முயற்சி !!!
















மறுமலர்ச்சி தமுமுக என்ற புதிய  இஸ்லாமிய அமைப்பின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான காஞ்சி .ஜைனுலாபிதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில துணை தலைவர் கேப்டன் அமீருதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா ,   தமுமுக வின் முன்னாள் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் எஸ் .பி ,  தமுமுக வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் திருவள்ளூர்  இஸ்மாயீல்,தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் புளியங்குடி செய்யதலி ,தமுமுக வின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர் .இதில் வெள்ளை கருப்பு வெள்ளை நிறத்திலான மூவர்ண கொடியை மறுமலர்ச்சி தமுமுக வின் அமைப்பாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜைனுலாபிதீன் அறிமுகம் செய்து வைத்தார் .

பின்னர் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த வழக்கறிஞர் ஜைனுலாபிதீன் , இரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களை தமுமுக தலைமை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார் .தாம் தொடங்கியுள்ள இந்த இயக்கம் சமூக ஒற்றுமைக்காகவும் ,மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் செயல்பட போவதாகவும்  கூறினார் .மேலும் இந்த அமைப்பிற்கு தமுமுகவின் முன்னாள் துணை தலைவர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஜைனுலாபிதீன் தெரிவித்தார் .

தகவல் .ஜே .ஷேக் பரீத் .


பைக்கில் நடமாடும் பல்பொருள் அங்காடி. அசத்தும் வாலிப முதியவர்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(62). முதியவரான இவர் சங்கேந்தி கடைத்தெருவில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். ஆனால் கடையில் இருப்பதில்லை. 




தனது மைத்துனர் தேவராஜை கடையில் வைத்துவிட்டு தனது பைக்கில் மினி பல்பொருள் அங்காடி போல் அமைத்துக் கொண்டு தினமும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை விற்பனை செய்து வரும் இவரிடம் கிடைக்காத பொருட்களே இல்லை. 

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை வைத்துள்ளார். வேறு ஏதும் மக்களுக்கு தேவைப்பட்டால் போனில் தொடர்புக் கொள்வார். அல்லது இன்று சொன்னால் நாளை நேரடியாக கொடுத்து விடுகிறார். 

வயது 62-ஐ கடந்தாலும் இன்னும் வாலிப பையன் போல் வலம் வரும் பாண்டியனை முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கடைத்தெருவில் மடக்கி விசாரித்ததில் அவர் கூறுகையில் நான் 25 வருடங்களுக்கு மேலாக இந்த தொழில் செய்து வருகிறேன். 

முதலில் சைக்கிளில் சென்று வந்தேன். அதன் பிறகு டிவிஎஸ் 50-ல் அப்புறம் ஸ்கூட்டரில் வந்தேன். இப்பொழுது டிவிஎஸ் விக்டர் வைத்துள்ளேன். தினமும் 200 முதல் 500 வரை எல்லா செலவும் போக கிடைக்கிறது. கடையில் நாள் முழுவதும் உட்கார்ந்தால் கூட இந்த வருமானம் கிடைக்காது. 

அதனால் இப்படி கிளம்பி விடுவேன். இது எனது உடல் ஆரேக்கியத்துக்கும் நல்லதாக உள்ளது. என்னிடம் சமையலுக்குத் தேவையான பருப்பு முதல் காலில் அணியும் செருப்புவரை வைத்துள்ளேன். கடையில் விற்காத பொருட்களை கூட இப்படி கொண்டுவந்து விற்று காசு பார்த்துவிடுவேன் என்ற அவர் தற்பொழுது தேர்தல் சுறுசுறுப்பு இல்லை. 

எனக்கும் தேர்தல் ஆர்வம் கிடையாது என்றார். நடமாடும் இந்த மினி பல்பொருள் அங்காடியை கொண்டுவரும் பாண்டியனை மக்கள் வேடிக்கையுடன் பார்த்து வருகிறார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)