சென்னை, மே 13: பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு
படுத்தப்பட்டு "கிச்சான் புகாரி" உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை தமிழக
காவல்துறை கைது செய்து வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய
கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம்
இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம்
ஒப்படைத்துள்ளது.
இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும்.
பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.
இதற்கு முன், நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்,
சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்
இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என
விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.
கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும்
களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது
செய்யப்பட்டுளனர்.
பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும்,
உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்
இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.
அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு
சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாக்குவது
வேதனைக்குரியது.
வகுப்புவாத உணர்வின்றி செயல்பட வேண்டிய
உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில்
சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருகின்றனர்.
சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும்
உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது
செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும், என்ற
கோரிக்கையை முன் வைத்து "அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில்"
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.