முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பொது மக்களை கஷ்டங்களுக்கு உட்படுத்தும் HP சிலிண்டர் நிறுவனம்!!!





முத்துப்பேட்டை ஆகஸ்ட் 20 : (Exclusive Muthupettai Express)திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் சுமார் 75 ஆயிரம் மக்கள்கள் வசித்து வருகின்றனர். இதில் அதிகமானோர் முஸ்லிம்களே வசிப்பது யாவரும் அறிந்ததே. எனினும் முத்துப்பேட்டை மக்கள் மாதம் ஒரு முறை சிலிண்டர் (கேஸ்) வாங்குவதற்கு பல மணி நேரம் வெவ்வேறு இடங்களிலிருந்தும் வந்து காத்து கிடப்பது மிகப்பெரிய ஓர் துயரமாகத்தான் இருக்கிறது. எனினும் பக்கத்து ஊருகலான அதிராம்பட்டினம், திருத்துறைப் பூண்டி, பட்டுக்கோட்டை, நாட்சிகுலம், மதுக்கூர் இன்னும் பல்வேறு முஸ்லிம்கள் வசிக்க கூடிய இடங்களில் வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்யும் இந்த "HP கேஸ் நிறுவனம்" ஏன் முத்துப்பேட்டையில் மட்டும் செய்வதில்லை. இது குறித்து "முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்" பொது மக்களிடம் கேட்டபோது அம்மக்கள் கூறும் பதில். இதில் பெண்களாகிய நாங்கள் மிகவும் சிரமத்திற்கும், கஷ்டத்திற்கும் ஆளாகிறோம். பொதுவாக முத்துப்பேட்டை பகுதிகளுக்கு சிலிண்டர் வந்தால் வீட்டில் யாரும் ஆட்கள் இல்லாதபோது வெளியில் உள்ள ஆட்களிடம் வாங்கி கேட்டல் அதற்கு அவர்கள் 50 ரூபாய், அல்லது 100 ரூபாய் , தாருங்கள் என்று கேட்கின்றனர். அனால் ஒரு சிலிண்டரின் விலை தற்போது 430 இப்படி இருக்கும் நிலையில் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. எனவே வீடு வீடாக சென்று சிலிண்டரை விநியோகம் செய்ய வேண்டும். ஆண்கள் வியாபாரம் செய்யும் நேரத்தில் வியாபாரத்தை போட்டுவிட்டு வரக்கூடிய மிக மோசமான சூழ்நிலைதான் இந்த முத்துப்பேட்டையில் அரங்கேறி வருகின்றது. ஏன் இந்த நிலை? இதற்க்கு நிரந்தர தீர்வுதான் என்ன? அரசியல் வாதிகளின் சதியா? அல்லது அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியா? பொறுந்திருந்து பாப்போம் இதற்கு விடை கிடைக்குமா என்று?

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.



முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டிய ஊடகத்துறை!!!

உலகம் ஆகஸ்ட் 20 : ஊடகம் (மீடியா) இன்று உலகை சுருக்கிகி உள்ளங்கையில் தந்து விட்டது. அதன் வளர்ச்சியும் பிரம்மாண்டமும் இன்று ஒவ்வொரு தனி மனிதன் மீதும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பிரம்மிக்கத் தக்க வளர்ச்சியும் வளமும் கொண்டதாய் திகழ்கின்றது. வெகு ஜன கருத்தை உருவாக்கவும் மக்கள் சமூகத்தின் ஆளுமையை வளர்பதிலும் கூட அது தன் ஆதிக்கத்தை நிலை நாட்டியுள்ளது .ஆனால் இவ்வளவு ஆற்றல் மிகுந்த ஊடகம் (மீடியா) எவ்வாறு தவறாக பயன்படுத்தபடுகிறது. என்பதைப் பற்றி ஆராயும் முன்பு ஊடகம் (மீடியா) என்றல் என்ன? என்பதனைப்பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஊடகம் (மீடியா) என்பதன் விளக்கம்:
ஊடகம் (மீடியா) என்றால் சென்றடையும் வழி என்பது பொருளாகும். அதாவது ஒரு தகவல் மற்றொருவருக்கு சேருவதற்கு பயன்படுத்துகின்ற சாதனங்களின் வழியாகத்தான் செய்திகள் பிறரிடம் சென்றடையும் அதனால்தான் ஊடுருவிச் செல்லக்கூடியவை என்ற அடிப்படையில் இது ஊடகம் எனபடுகிறது.
இந்த ஊடகம் ஒரு காலத்தில் தெருமுனைகளில் நடக்கும், தெருக்கூத்து நாடகம் ஆகியவைகளிலிருந்து தொடங்கி இன்று தினசரி, வார, மாத, இதழ்கள் தொலைக்காச்சி வானொலி, கணினி வலை என்று விரிந்து அபரிமிதமான தொழில் நுட்ப மாற்றங்களைப் பெற்று திகழ்கிறது.
ஊடகம் செய்து வருவது என்ன
இதன் மூலம் மக்களை உயர்த்தி விதவ வேண்டிய மீடியா இன்று அவர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிடுகின்ற காரியத்தை செய்து வருகின்றது. ஹிட்லாரின் அமைச்சர் கோயபல்ஸ் பாணியில் பொய் பிரசாரமும் மக்களின் வாழ்க்கை முறையை மாற்றிப்போடும் கலாச்சார சிரழிவுகலாயுமே வழங்கி இன்று மனிதனை மதிமயக்கும் போதை மருந்துகளாக மாற்றி வருகின்றன. அத்துடன் அந்த மீடியா அதிகமான இலாபம் சம்பாதிக்கும் தொழிலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இத்தகைய வேதனையான நிலையினால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. என்றாலும் கூட இன்று பெரும்பாலும் ஊடகம் (மீடியா) இஸ்லாத்திற்கு எதிரான பயங்கரமானதொரு கருத்துப் போரில் ஈடுபட்டிருப்பது முஸ்லிம் சமுதாயம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
முஸ்லிம்கள் எல்லாவற்றிலும் கீழ்நிலையில் இருப்பதை போன்றே ஊடகத்திலும் கீழ்நிலையில் இருப்பது யாவரும் அறிந்ததே அதற்கு காரணம் முஸ்லிம்களது கீழ்நிலைலான கல்வித்தரத்தின் எதிரொலியே.
இஸ்லாமிய சமுதாயத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய பத்திரிக்கையளர்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இந்நிலை மாறவேண்டும்.குறைந்தது ஊருக்கு ஒருவராவது முஸ்லிம் பத்திரிக்கையாளர் இருக்கும் நிலையை இன்ஷா அல்லா நாம் உருவாக்க வேண்டும். இது ஒருபுறம் இருக்கட்டும். இன்று நம்மில் எத்தனை பேர் வாசகர் கடிதம் எழுதுகிறோம். நம் பங்களிப்பு அந்த அளவிலாவது இருக்க வேண்டாமா.?
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் பற்றி தவறான அவதூறான செய்திகள் பரப்பப்படும்போது ஆத்திரத்திற்கு ஆட்படாமல் அல்லாஹ்வின் கட்டளையான பொறுமையை மேற்கொண்டு மிக ஆழகான முறை யில் சர்ச்சைக்குரிய பிரச்சனையான ஜிஹாத், தீவிரவாதம், பார்த்த போன்ற வற்றில் இஸ்லாமியக் கண்ணோட்டம் குறித்து சம்மந்தப்பட்ட நாளிதழ், வார,மாத, இதழ் டிவி, இவர்களுக்கு அனுப்பிவைத்து தேளிவன முறையில் புரிய வைத்திட வேண்டும்.
ஒருவேளை வேன்றுமென்றே வன்மமான கலவர நிலையை உருவாக்கிட இதுபோல் வேலிடப்பட்டாலும் கூட ஆத்திரப்படாமல் பொறுமையை அணிகலனாகக் கொண்டு நமது சார்பிலேயே இஸ்லாத்தை எடுத்து விளக்கிடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இம் முயற்சி அவர்களது எண்ணத்தில் மண்ணைக் கவ்வச்செய்யும்.
இனியாவது முஸ்லிம் சமூகத்தை கல்வியில் உயர்த்தி அவர்களின் சிலரை ஊடகத்திற்கு வழங்குவதன் மூலம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு நாம் உதவிடுவோம். அதே வேலையில் நாமும் அவ்வப்போது தொடர்ந்து சர்ச்சைக் குரிய கருத்துகளுக்கு இஸ்லாமியத் தீர்வுதான் என்ன? என்ற வின எழுப்பி அதற்கான தீர்வுகளை ஊடகத்தின் வாயிலாக வேலிடச் செய்வதின் மூலம் ஊடகத்தையும் தூய்மை படுத்தி நமக்குச் சாதகமான சிந்தனைக்கு வழி வகுப்போம்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)