முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

புத்தகயா குண்டு வெடிப்பு: தமீமுன் அன்சாரி பரபரப்பு பேட்டி...





சென்னை, ஜூலை 09: புத்தர்களின் புதின பூமியாக கருதப்படும் புத்தகயாவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குண்டுவெடிப்பு கடும் கண்டனத்திற்குரியது. ஆரியர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்த சீர்திருத்தவாதிதான் புத்தர். இந்தியாவில் புத்த மதம் தான் ஒரு காலத்தில் பெரும்பான்மை மதமாக இருந்தது.


பார்ப்பனீயம் புத்த மதத்திற்குள் ஊடுருவி அதை ஹீனயானம், மஹாயானம் என இரண்டு பிரிவாக உடைத்து. இதில் ஒரு தரப்பு புத்தரை சீர்திருத்தவாதியாக அறிவித்தது. இன்னொரு பிரிவு அவரை கடவுளாக அறிவித்தது.

பிறகு பார்ப்பனியம் புத்த மதத்தை மெல்ல அழித்து புத்தரை விஷ்ணுவின் அவதாரம் என்று கூறியது. இந்தியாவில் பார்ப்பனர்களால் பலவீனமடைந்த புத்த மதம் சீனா, ஜப்பான், பர்மா, கொரியா, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது.

இன்று கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாத்திற்கு அடுத்த பெரிய மதம் எண்ணிக்கையின் அடிப்படையில் புத்த மதம்தான்.

உலகெங்கும் வாழும் புத்தர்கள் புத்தர் ஞானம் பெற்றதாக கூறப்படும் போதி மரம் நிற்கும் பீகார் மாநிலத்தில் இருக்கும் கயாவிற்குதான் வருகை தருகின்றனர்.

அங்கு நடைபெற்ற குண்டு வெடிப்பு நுட்பமான பின்னணியில் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்தர்களால் முஸ்லிம்கள் தாக்கப்படும் நிலையில் இச்சம்பவத்தை முஸ்லிம் அமைப்புகள் தான் செய்திருக்க வேண்டும் என தினமணி, Times of India போன்ற ஏடுகள் விஷத்தை கக்கி இருக்கின்றன.

இதற்கு பின்னணியில் RSS இன் ஆதரவோடு செயல்படுவதாக கூறப்படும் அபினவ் பாரத் என்ற பயங்கரவாத அமைப்பை கூர்ந்து புலன் விசாரணை செய்ய வேண்டும். காரணம் நேற்று இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக காவி பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவரின் அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு புலனாய்வு துறையால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

எனவே, முற்போக்கு பார்ப்பனராக தன்னை காட்டி கொள்ளும் தினமணி ஆசிரியர் சற்று நிதானமாக, நடுநிலையாக தங்கள் தலையங்கத்தில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

புத்தர் பார்ப்பனியத்திற்கு எதிராக கழகம் செய்தவர். அவர் பீகாரில் பிறந்த ஒரு பெரியார். அவர்களது கருத்துக்களோடு கொள்கை அளவில் பல மாறுபாடுகள் நமக்கு உண்டு. அதே நேரம், பர்மா, இலங்கையை தவிர மற்ற ஏராளமான புத்த நாடுகளில் முஸ்லிம்களும், புத்தர்களும் சகோதரர்களாக வாழ்கிறார்கள்.

அந்த உறவை பாழ்படுத்து யார் முயற்சி செய்தாலும் அதை கண்டிப்போம். புத்த கயாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு பின்னணியில் இருக்கும் உண்மையான பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

அமைதியை குலைக்கும் யாருக்கும் இந்த மண்ணில் இடமில்லை.

முத்துப்பேட்டையில் பெட்டிக்கடை கமால் அவர்களின் கடையில் திடீர் தீ விபத்து!!!



முத்துப்பேட்டை, ஜூலை 09: முத்துப்பேட்டை மஜீதியா தெருவை சார்ந்த கமால்  முஹம்மது அவர்களுக்கு சொந்தமான  வெளிநாட்டு பொருட்கள் விநியோகம் செய்யும் கடையில் திடீர் மின்கசிவு காரணத்தால் அதிகாலை பெரிய கடைத்தெரு மீன் மார்க்கெட் அருகில் உள்ள கடையில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின இதனுடைய மொத்த இழப்பீடின் பதிப்பு சுமார் 50 ஆயீரம் ஆகும் என்று கடை உரிமையாளர் தெரிவித்தார். 

தொகுப்பு:

பரக்கத்து நிஷா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)