முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் குடி போதையால் நாயை கட்டிபிடித்து தூங்கிய இளைஞர்...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 07: முத்துப்பேட்டையில் உள்ள மிகவும் பிரபலமான காளியம்மன் கோயில் வாசலில் இன்று மதியம் கடுமையான குடிபோதையில் ஒரு இளைஞர் பல மணிநேரம் ஒரு நாயுடன் தூங்கினார். இதனை கோயிலுக்கு வந்த பக்கதர்கள் மற்றும் பொது மக்கள் வேடிக்கையுடன் அந்த விசித்திர காட்சியை கூட்டம் கூட்டமாக பார்த்து சென்றனர். நீண்ட நேரம் ஆகியும் அந்த நாயும், இளைஞரும் எழுந்து போகாததால் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும் அதிகமான கூட்டம் கூடின. பின்பு அங்கு வந்த சில இளைஞர்கள் குச்சியை வைத்து இவர்கள் உயிருடன் தான் இருக்கிறார்களா அல்லது செத்து விட்டார்களா என்று குத்தி பார்த்தனர். அப்போது நாய் எழுந்து ஓடியது. அதன் பின்பு அந்த இளைஞன் போதையில் அந்த நாயை தேடிய காட்சி மக்கள் மத்தியில் பெரும் காமடியை ஏற்படுத்தியது. பின்பு இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அந்த வாலிபரை விசாரித்ததில் அந்த நபருக்கு வாய்பேச முடியாது என்றும், அவருக்கு வயது 30 ஐ தாண்டி விட்டதாகவும் அப்போது தெரியவந்தது.மேலும் இவர் பழைய பேருந்து நிலைய வட்டாரத்தில் லோடு ரிக்க்ஷா ஒட்டி வந்தவர் என்றும், அப்போது அப்பகுதி மக்களிடம் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றும் அதற்கான தொகையை தான் தருவதாகவும் அசைவுகளால் கூறிவந்துள்ளார். இந்த மன உளைச்சளின் காரணத்தால் தான் இவர் எந்நேரமும் போதையில் இருந்து வருகிறார் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
source from; www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)