முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம்...






தஞ்சை, ஆகஸ்ட் 24: தஞ்சை மாவட்டம் இராஜகிரியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஐந்துஅம்ச கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்டத்தலைவர் குடந்தை ஜாபர் தலைமையில். நடைபெற்றது.மாநிலச்செயலாளர் ரஸ்தாசெல்வம் மாவட்டபொருளாளர் ஹனாஇஸ்மாயில் மாவட்டசெயலாளர்முகம்மதுநபில் மா.தகவல் தொடர்பாள் ஹாஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடக்கமாக மாநிலப்பேச்சாளர் ஒளிமுகம்மது பூரண மதுவிலக்கு வேண்டும் என்ற தலைப்பிலும் மாநிலசெயலாளர் நா.கோவில் ஜாஃபர் வஃக்பு சொத்துக்களை மீட்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
மாநிலச்செயலாளர் அப்துல்காதர்மன்ப ஈ அப்பாவிசிறைவாசிகளின் விடுதலை என்ற தலைப்பிலும் மாநிலதுணைத் தலைவர் முகம்மதுமுனீர் முஸ்லிம்களுக்குதனி இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ற தலைப்பிலும் மாநிலத் தலைவர் S.M. பாக்கர் ஊடகங்களின்சதிவலைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவாக ஜாவித்முகம்மது நன்றியுரை கூறினார்
கூட்டம் ஆரம்பம் முதல் மழை தொடர்ந்து பெய்துகொண்டு இருந்தபோதும் ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் திரண்டு வருகை தந்துஇருந்த்து குறிப்பிடத்தகுந்த்து.
அன்று காலை இந்தியதவ்ஹீத்ஜமாஅத் சார்பில் நடைபெற இருந்த மைதீன் மருத்துவமனை மீண்டும் செயல்பட வலியுறுத்தி கண்டண ஆர்ப்பாட்டம் இறுதிநேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதால் நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது்
கூட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீது தாக்குதல் நடைபெற இருந்த சம்பவத்திற்கு கடும்கண்டணம் தீர்மானமாக நிறைவேற்றியதுடன் அவருக்கு தமிழகரசு உரியபாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது்

Reported By 

SMB  

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)