முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


முத்துப்பேட்டை, டிசம்பர் 17 : முத்துப்பேட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 ஆம் வகுப்பை சேர்ந்த இருதரப்பு மாணவர்களுக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் பிரச்சனை குறித்து தீவிர விசாரணையில் மேற்கொண்டனர். அப்போது இரு தரப்பினரும் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருந்தனர். இதனால் பள்ளி நிர்வாகம் இரு தரப்பினர்களுக்கு மத்தியில் தல 10 பேரை தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தது. இதனால் ஆத்திரமடைந்த இரு தரப்பு மாணவர்களும் நேற்று காலை சுமார் 10 மணியளவில் ஒன்று திரண்டு பள்ளிக்கூட உல்வளாகத்திலே உள்ளிருப்பு போராட்டத்தில் இடுபட்டனர். இதனைக்கண்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களிடம் சுமார் 2 மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் அனைத்து மாணவர்களும் அப்போராட்டத்தை கலைத்துவிட்டு வழக்கம்போல வகுப்பறைக்கு சென்றார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் பாலா (ஆலங்காடு), ரிப்போர்ட்டர் யூசுப் அலி.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)