முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை கவுன்சிலர் சாக்கடை கலந்த குடிநீருடன் வந்ததால் பரபரப்பு!!!



முத்துப்பேட்டை, மார்ச் 11 : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நகர் புரங்களில் சமீப காலமாக குடிநீர் தட்டுபாடு பெரும் அளவில் உள்ளது. சமீப காலமாக அடிக்கடி ஏற்படும் கடுமையான அறிவிக்கப்படாத மின்வெட்டால் வர்த்தகம், தொழில், அரசு அலுவலக பணிகள் பெரிதளவு பாதிப்புகள் ஏற்பட்டதுடன், பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இது தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சூழ்நிலை, அதன் வகையில் முத்துப்பேட்டை நகருக்கு வரும் கொள்ளிடம் குடிநீரை சேமித்து வைக்க மின் மோட்டார் பயன்படுத்தி வருகிறார்கள். இது மின்வெட்டால் தடைபட்டது மட்டும் அல்லாமல் சுற்றுபுற நகரங்களிலிருந்து வரும் குழாய்கள் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அந்த பணி தற்போது முடிந்து முத்துப்பேட்டை நகருக்கு சில திங்கங்கலாக முறையான குடிநீர் வழங்கக்கப்பட்டு வந்த நிலையில் அப்போது திடீர் என்று பொது மக்களுக்கு ஊர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது என்ன வென்று பார்க்கும் போது குடிநீரில் சாக்கடை கலந்து வருவதுதான். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துப்பேட்டை கவுன்சிலர் ஜனாப். ஜபருல்லாஹ் சாக்கடை கலந்து குடிநீரை ஒரு பாட்டிலில் அடைத்து பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தார். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் அங்கிருந்தே தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கொடுத்தார். அப்போது இதற்க்கு உடனே நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதால் அமைதியாக சென்றார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கவுன்சிலர் .ஜபருல்லாஹ் எங்க பகுத்திக்கு வரும் குடிநீர் மட்டும் அல்ல எல்லா பகுதிகளுக்கும் வரும் குடிநீர் இதே அவலத்துடன் தான் வருகிறது என்றும், இவற்றை உடனே சரி செய்யாவிட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவேன் என்றும் அவர் தரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, EKA . முனவ்வர் கான்

1 comments:

  1. what the councillor done is higly appreciateble..this is very important and serious issue to rectitfy the drinking water(without any mix). I hope the concerned authority will eradicate this problem without any further delay.

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)