முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காவல்நிலையத்தில் சிறைவைக்கப்பட்ட சட்டவிரோத பிள்ளையார், காமெடியாய் கலகலத்துப்போன பா.ஜ.க .வின் உண்ணாவிரதம்.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 28 : முத்துப்பேட்டையில்  இந்துக்களும் ,முஸ்லீம்களும்  பழங்காலந்தொட்டே அண்ணன்  தம்பிகளாக சகோதர வாஞ்சையுடன் பழகி வருகின்றனர்  .கடந்த 20 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒரு வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றி ,இந்து முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கோடு மதக்கலவர தீயை மூட்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றனர் இந்து முன்னணி ,
ஆர் .எஸ் .எஸ் .போன்ற தீவிரவாத சக்திகள் .
                          இந்நிலையில் இந்த வருடம் முத்துப்பேட்டையில் இந்துமுன்னனியின் சார்பாக  இருபதாம் ஆண்டு விநாயகர் ஊர்வலத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர் .முத்துப்பேட்டையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெற்றுவிடாமல் இருக்க ,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒருமுறையும் ,முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் ஒருமுறையும் இருசமுதயத்தை சார்ந்தவர்களையும் அழைத்து அமைதிக்கான ஒத்துழைப்பு  மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .நடந்து முடிந்த இந்த இருகூட்டங்களிலும் நீதிமன்றம் அனுமதித்த பாதையில் மட்டும்தான் செல்லவேண்டும் என்றும் ,பிறமதங்களை புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக்கூடாது என்றும் ,ஊர்வலத்தை விரைவாக நடத்திமுடிக்கவேண்டும் என்றும் ,உள்ளூர்வாசிகள் மட்டுமே இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள  வேண்டும் என்றும் ,வெளியூர்களிலிருந்து வருபவர்களை இந்த ஊர்வலத்தில் அனுமதிக்க கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர் .
                              இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன் பேட்டையில்,உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டவிரோதமான முறையில் மூன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வந்தனர் இந்துமுன்னணியினர் . .பேட்டையிலிருந்து அரபுசாகிபு பள்ளிவாசல் வழியாக ஊர்வலமாக பங்களாவாசல வந்தடைவதற்காக வைக்கப்பட்டிருந்த அந்த சட்டவிரோதமான மூன்று சிலைகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு எடுத்து வந்தனர் முத்துப்பேட்டை காவல்துறையினர் .
                               இதை பெரிதுபடுத்தி ,முத்துப்பேட்டையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டுருந்த இந்துமுன்னணியினர் ,பேட்டையில் பா.ஜ .க .வின் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் நேற்று உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு கலகலத்து  போன ,காமெடி நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் .பேட்டையில் உள்ள  அனைத்து இந்துக்களையும் உசுப்பேற்றி ,இஸ்லாமியர்களுக்கு எதிராய் சிண்டுமுடித்து விடலாம் என்ற கற்பனையோடு திட்டம் தீட்டப்பட்ட இந்த காமெடி விரதத்தில் ஒருசிலரை தவிர மெஜாரிடியான இந்துக்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்ததால் இந்த உண்ணாவிரதம் பிசுபிசுத்துப்போன காமெடி விரதமாய் காட்சியளித்தது .
source from:www.muthupettai express.com
தொகுப்பு :  

துபாயிலிருந்து ஜே .ஷேக்பரீத் . 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)