முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தனியார் பஸ்ஸிலிருந்து இறங்க அடம் பிடித்த ''குடி''மகன்



முத்துப்பேட்டை, ஜனவரி 17: முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அற்புதம் என்ற தனியார் டவுன் பஸ் சென்று வருகிறது. வழக்கம்  போல் நேற்று பகல் 1 மணிக்கு முத்துப்பேட்டையிலிருந்து புறப்பட ஆயத்தமாகி இருந்தது. அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் கடும் குடி போதையில் ஏறி உள்ளார். நடத்துனர் சுதாகரிடம் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துவரங்குறிச்சிக்கு டிக்கெட்டும் எடுத்து உள்ளார். அவர் இறக்கும் ஸ்டாப் வந்தும் இறங்கவில்லை, பொறுத்து பார்த்த பஸ் பட்டுக்கோட்டைக்கு சென்றது, அங்கேயும் இறங்காததை கண்ட நடத்துனர் சுதாகர் அந்த குடிமகனிடம் கேட்டும் முறையான பதில் இல்லை. பின்னர் மதியம் 2.20 க்கு பட்டுக்கோட்டையிலிருந்து பஸ் புறப்பட்டது மீண்டும் அந்த குடிமகன் இறங்கும் துவரங்குறிச்சி வந்தும் இறங்காததை கண்ட நடத்துனர் இறங்கும் படி கூறியதற்கு இறங்க அடம் பிடித்து உள்ளார். 

மீண்டும் பஸ் முத்துப்பேட்டை வந்து கொண்டு இருந்தது, கடும் குடி போதையில் இருந்த அந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் சீட்டின் அடியில் உட்கார்ந்து வாந்தியும் எடுத்து உள்ளார். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது, சரியாக 3.15 மணியளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது பஸ், அங்கேயும் இறங்க அடம் பிடித்தார். மிகவும் நோந்துபோன டிரைவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு பஸ்ஸை ஓட்டி வந்தார். பின்னர் அங்கு பணியில் இருந்த காவலர்கள் சண்முகநாதன், ஜீவா ஆகியோர் குடி மகனிடம் பல மணி நேரம் போராடி நைசாக பேசி பின்னர் கீழே இறக்கி விடப்பட்டார். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை

1 comments:

  1. குடிமகன்கள் படுத்தும் பாடு பெரும்பாடாக இருக்கிறது. எல்லா ஊர்களிலும் குறிப்பாக மாலை நேரங்களில் இப்படிப்பட்ட தொந்தரவுகள் பரவலாக இருக்கின்றன. குடித்துவிட்டு வருபவர்களை பேருந்துகளில் ஏற்றக் கூடாது என்ற விதி அமுல் படுத்தப்படுமா?

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)