முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கோலாகலமாக நடைபெற்ற கொய்யா இல்லத் திருமணம் - களைகட்டியது கொய்யா மஹால் !!























முத்துப்பேட்டை,செப்டம்பர் 09: செல்வந்தர் கொய்யா   NA ரெஜாக் ஹாஜியார் அவர்களின் பேரனும், நேனா மோட்டார்ஸ் உரிமையாளர் புது தெரு  ASN முஹம்மது இப்ராஹீம் A. ஹஜ் அவர்களின் செல்வப் புதல்வனுமாகிய,   மௌலவி M  முஹம்மது முஜாஹிதீன் அவர்களுக்கும், செல்வந்தர் கொய்யா ஹாஜி SMKN முஹம்மது தாவுது மரைக்காயர் அவர்களின் பேத்தியும், பூக்கொய்யா ஹாஜி செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களின், செல்வப் புதல்வியுமாகிய S.ரஹ்மத் நிஷா அவர்களுக்கும், கடந்த 01-09-2013 அன்று கொய்யா மஹாலில் நிக்காஹ் நடைபெற்றது. சரியாக காலை 11 மணிக்கு நிக்காஹ் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஜமால் பாய் அவர்களின் மகனார் மௌலவி இத்ரீஸ் ஆலிம்   சுமார் 40 நிமிடங்கள் சிறப்பு பயான் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் ,வர்த்தகர்கள் ,உலமா பெருமக்கள் ,பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . குறிப்பாக இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் mp , நாகை நாடாளுமன்ற  உறுப்பினர் AKS விஜயன் ,MP, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோ. பழனிசாமி, பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் NR ரங்கராஜன், பட்டுக்கோட்டை நகரமன்ற உறுப்பினர் SR ஜவஹர்பாபு, திருத்துறைபூண்டி  சட்டமன்ற உறுப்பினர் கே. உலகநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர் .



வந்திருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பல்வேறு பணிகளின் காரணமாக திருமணம் முடிந்த பின்னரே வந்து கலந்துகொண்டனர் . 



ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால்  கொய்யா மஹால் நிரம்பி வழிந்தது. ஆண்களுக்காக மதிய விருந்து கொய்யா மஹாலிலும், பெண்களுக்காக மதிய விருந்து கொத்பா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதனால் கூட்ட நெரிசலை தவிர்த்து தொய்வின்றி உணவு பரிமாற்றம் நடப்பதற்கு ஏதுவாய் அமைந்தது .மேலும் அனைவரது தாகம் தீர்க்க குளிர்பானமும் விநியோகிக்கப்பட்டது . இதற்காக பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பான கம்பெனி ,கொய்யா மஹால் நுழைவு வாயிலில் பிரத்தியேகமாக ஸ்டால் அமைத்திருந்தது முத்துப்பேட்டை திருமண வரலாற்றில்  புதுமை என  வந்திருந்தவர்கள் கூறினார்கள் . 



திருமண மாப்பிள்ளை அரபுகள் அணியக்கூடிய தோப்பு  மற்றும் தலையில் கருப்பு நிற தலைப்பா அணிந்து மிகவும் எளிய  தோற்றத்தில் காட்சியளித்தார். மணமக்கள் நீடூழி வாழ வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.



0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)