பெங்களூர், மே 24: மத்திய சிறையில் கிச்சான் புகாரி உள்ளிட்ட நான்கு சகோதரர்களையும் சந்தித்தோம் 30 நாட்கள் காவல்துறை விசாரணையில் இருந்த புகாரி, பஷீர் ஆகியோரை முதல் 15 நாட்கள் கடுமையாக சித்தரவதை செய்துள்ளனர் கர்நாடக காவல்துறையினர்.
மதானி சொல்லித்தான் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியாக ஒப்புகொள்ள வேண்டும் எனவும்,INTJ தலைவர் பாக்கர் செய்யும் உதவிகள் என்ன என்றெல்லாம் கேட்டு மிகவும் கடுமையான முறையில் அடித்துள்ளனர்.
நன்கு உடல்வாகு கொண்ட முரட்டு காவல்துறை நபர்கள் நன்றாக மதுவருந்தி விட்டு கீழ்க்கண்டவாறு சித்திரவதைகளை செய்வார்களாம்.
1.பஞ்சாப் கட் - கால்தொடைகள் மீது காவலர்கள் ஏறிக்கொள்ள சிலர் முதுகை சுவற்றின் மீது சாய்த்தவாறு வைத்து விட்டு கால்களை சுவற்றின் பக்கம் வளைப்பார்கள்.
2.எரோப்லன் மெதட் - கை கால்களை கட்டி மாட்டுக்கு லாடம் கட்டுவது போல் அந்தரத்தில் தொங்கவிட்டு அடிப்பது.
இப்படி அடித்தபோது சில நேரங்களில் அவருக்கு சிறுநீர்,விந்து வெளி வந்து விட்டதாம்.
3.நிர்வானபடுத்தி விட்டு பிறப்புறுப்பில் தொடைகளில் பெற்றோலை ஊற்றி விட்டு மிளகாய் பொடி தூவியுள்ளனர்.அந்த வேதனையை பார்த்து ரசித்து சிரித்துள்ளனர்.
4.குடிகார காவலர்கள் அடிக்கும்போது வழியில் எவ்வளவு கத்தினாலும் விட மாட்டார்கள்.
மயக்கமடைந்தாள் பல்ஸ் பார்த்து சுடு நீர் ஊற்றி ஒத்தடம் கொடுத்து விட்டு pain killer spray அடித்து விட்டு மீண்டும் அடிப்பார்கள்.
5.அடிக்கும் போது வலி தாங்காமல் அல்லாஹ் என்று கத்தினால் கூபுட்றா உன் அல்லாஹ்வை வரானா பாப்போம் என்று கிண்டல் செய்வது.
இவ்வளவு கொடுமைகளையும் சந்தித்து பொறுமையோடு துஆ செய்யுங்கள் என்று கூறிய சகோதரர் களுக்காக துஆ செய்வோம்.சட்ட ரீதி யாக ஒற்றுமையாக பாசிச காவல் துறையை எதிர் கொள்வோம்.வாய்பிருந்தால் பெங்களூர் சிறை சென்று சகோதரர்களை சந்தியுங்க
இவ்வாறு ஜைனுல்ஆபிதீன் கூறினார்.
0 comments:
Post a Comment