முத்துப்பேட்டை, ஜூன் 21: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த S. சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் C. காளிதாஸ் ஆகியவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்த வர்த்தகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே நாளை காலை சரியாக கடையடைப்பு 9 மணிமுதல் 12 மணிவரையும், இதன் தொடர்ச்சியாக சரியாக 10 மணியளவில் முத்துப்பேட்டை கஸ்டம்ஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டமும் நடைபெற உள்ளது.
தொகுப்பு:
AKLT . அப்துல் ரஹ்மான்
0 comments:
Post a Comment