முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் : வியாபாரிகள் உண்ணாவிரத முயற்சி...





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிக்கபட்ட கடைகள் 100க்கும் மேற்பட்ட பேரூராட்சி அனுமதித்த ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பேரூராட்சி அனுமதியுடன் செயல்படும் பத்து கடைக ளை அப்புறபடுத்த பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வியாபாரிகள் மறுத்து பதில் நோட்டீஸ் அனுப்பினர். சென்ற வாரம் பேரூராட்சி நிர்வாகம் அந்த கடைகளுக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பியது. மீண்டும் வியாபாரிகள் பதில் மனு கொடுத்தனர்.
 இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் கடைகள் அரசு மருத்துவ மனைக்கு இடையூறாக இருப்பதாகவும் அதில் மருத்துவமனை நுழைவுவாசல் பகுதியில் உள்ள கடைகள் மட்டும் அப்புறப்படுத்தினால் போதும் என்று பேரூராட்சி நிர்வாகம் கூறியது. அதற்கு வியாபாரிகள் சம்மதம்  தெரிவித்து இருந்த நிலையில் நேற்று அதிரடியாகக் காவல் துறை உதவியுடன் அகற்றப்போவதாக நேற்று முன்தினம் வியாபாரிகளுக்கு தெரிந்தது. உடன் வியாபாரிகள் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ரசூல்பீவி தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்தனர்.
 இதற்கு முத்துப்பேட்டை காவல் துறை உண்ணா விரதத்திற்கு அனுமதி மறுத்து, மீறி செய்தால் கைது செய்வோம் என்று ரசூல்பீவி வீட்டில் காவல் துறை நோட்டீஸ் ஒட்டியது. இதனால் வியாபாரிகள் மத்தியில் பெறும் பரபரப்பானது. இந்த நிலையில் நேற்று காலை அதிரடியாக பத்து கடைகளை அகற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் ராஜகோபால் ,முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில் போலீசார் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகீம் வருவாய் ஆய்வாளர் ராம சந்திரன்  உட்பட அதிகாரிகள் வந்தனர்.
இதனை கண்ட பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மார்க்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி  செயலாளர் காளிமுத்து மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் ஆகியோரின்  தலைமையில் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். உடன் அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகீம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு புதிய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் உடன் அமைத்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு பத்து கடைகளும் அகற்றப்பட்டு அதனை புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி பணியா ளர்கள் வைக்கும் பொழுது அங்கு இயங்கி வரும் ஆட்டோ சங்கம் வேன் சங்கம் , எதிர்ப்பு தெரிவித் ததால் பெறும் பரபரப்பு ஆனது. உடன் தாசில்தார் ராஜகோபால்  சமரசம் பேசி கடைகள் வைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் காலை முதல் மாலை வரை பெறும் பரபரப்பாக காணப்பட்டன.
                  
நன்றி - செம்பருத்தி 

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)