முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.



பிப்ரவரி 14: சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். 

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பிலே  ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்

மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள்.

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த நிலவை பிரிக்கும் அதிசயத்தை நடத்தியதாகவும் கூறக்கேட்டனர்.

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்கு பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்

தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் கொச்சின் ராயல் பேமிலி என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே இஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள்.

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது.

இறப்பு

சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (Jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை

மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர்.

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

கனிமொழியுடன் இணையதள ஆசிரியர் சந்திப்பு




சென்னை, பிப்ரவரி 14: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரான சகோதரர் ஜே.ஷேக்பரீத்  அவர்கள் கடந்த வாரம் சென்னையில் , நாடாளுமன்ற மேல் சபை உறுப்பினரான  கவிஞர்  கனிமொழியை சந்தித்தார் .சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற் இந்த சந்திப்பில்  முத்துப்பேட்டை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் , வருடாவருடம் இந்து முன்னணியினரால் நடத்தப்படும் விநாயகர் ஊர்வலத்தால் ஏற்படும்  விளைவுகள்  குறித்தும்  எடுத்துரைக்கப்பட்டது  .


நமது நிருபர்:

நதீம்கான்  BBA

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தில் பணிபுரிய ஆட்கள் தேவை...


முத்துப்பேட்டை,பிப்ரவரி 12: நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத் தள மானது கடந்த ஒரு வருடத்தை தாண்டி இரண்டாம் ஆண்டிற்கு அடியெடுத்து  வைக்கும் நிலையில் இந்த இணையத்தளம் ஊர் மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று மிக சிறப்பாக இயங்கி வருகிறது என்பது யாவரும் அறிந்ததே. மேலும் இந்த இணையத்தளத்தை விரிவுப் படுத்தவும் உடனுக்குடன் செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  ஆஹவே  இந்த இணையத்தளத்தில் பணி புரிய கீழ்க்கண்ட பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. 

1) நிருபர் (Reporter)  
2) DTP ஆபரேட்டர் (டங்க்லிஸ் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும்)
3) சேல்ஸ் மேன் (விளம்பரம் சேகரிக்க)
4) IT பெர்சன் (இணையத்தளத்தில் ஏற்படும் கோளாரை சரி செய்ய)
5) செய்தி வாசிப்பவரி (News Reader)

ஆகிய பணிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய பயோ டேட்டா மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் எங்களுக்கு கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். public.mttexpress@gmail.com மேலும் தொடர்புக்கு: 72 00 11 68 52.

குறிப்பு:

1) இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகைபட்டினம் ஆகிய ஊர்களிலிருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2) கல்வியின் தகுதி சுமார் 12 முதல் பட்டப்படிப்பு வரை படித்திருக்க வேண்டும்.

3) இந்த துறையில் அனுபவம் உள்ளவர் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் சேர்க்கப்படுவார்கள்.

4) தங்களின் தகுதியின் அடிப்படையில் தான் சம்பளம் வழங்கப்படும்.

5) இதற்கான நேர்முகத் தேர்வு முத்துப்பேட்டையில் மட்டும்  நடைபெறும்.

6) முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் ஆகிய அனைவருக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

தொகுப்பு:

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்.






முத்துப்பேட்டையில் மினி லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயம்.



முத்துப்பேட்டை,பிப்ரவரி 13: முத்துப்பேட்டை செம்படவன்காடு பைபாஸ்சாலை அருகே நேற்று மாலை பட்டுக்கோட்டையை அடுத்த காசியங்காடு பகுதியிலிருந்து கீற்று ஏற்றி கொண்டு ஒரு மினி முத்துப்பேட்டை நோக்கி வந்தது. லாரியை விஜயகுமார் (32) ஒட்டி வந்தார். அப்போது, தம்பிக்கோட்டை கீழ்காட்டை சார்ந்த ராஜேந்திரன் முத்துப்பேட்டை யிலிருந்து பைக்கில் வந்து கொண்டு இருந்தார். சம்பவ இடத்தில், மினி லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. பின்னர், லாரி தலைகுப்புற கவிழந்தது, இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை

முத்துப்பேட்டை SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 12: SDPI கட்சியின் முத்துப்பேட்டை நகரத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களின் விபரம்:

 நகர தலைவர் A. முஹம்மது மைதீன், துணை தலைவர் M . ஷேக் மைதீன் , செயலாளர் M . முஹம்மது யாசிர் , துணை செயலாளர்கள் K. நைனா முஹம்மது, சர்தார், பொருளாளர் S. நிஸார் தீன் , செயற்குழு உறுப்பினர்கள் : M. சவுக்கத் அலி, H. ஹைதர் அலி, முஹம்மது ஆசிப் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சிறப்பு விருந்தினராக PFI யின் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப் A. அபூபக்கர் சித்திக் கலந்துகொண்டார்.

நமது நிருபர்:

K. கபீர் தெற்குதெரு 


முத்துப்பேட்டைக்கு வந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்














முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் அவர்கள் 9.2.13 மதியம் 3 மணியளவில் வருகை புரிந்தார்கள். அவருக்கு சகோதரர் ஜே. ஷேக் பரீத் இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி பிரமுகர் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.

சில மாதங்கள் முன் நடந்த சகோதரர் ஷேக் பரீத் திருமணம் நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத காரணத்தில் மத்திய அமைச்சர் அவர்களால் கலந்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் தற்போது வந்து அந்த குறையினை நிவர்த்தி செய்து விட்டார் அமைச்சர் அவர்கள்.

தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 





அன்மை செய்தி : முத்துபேட்டை சுகர்னோ மரணம் :


முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டை – கல்கேணித் தெரு மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனாரும், மல்லிப்பட்டினம் மர்ஹூம் சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், ஜமால், சலீம்கான், முகமது ரபிக் ஆகியோர்களின் மச்சானும், துளசியாப்பட்டினம் ஹெச். ஹாஜகான் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் மு. முகம்மது காசிம், முகம்மது அலி ஆகியோர்களின் மருமகனும், ராஜா சுகர்னோ, ஃபைசல் சுகர்னோ ஆகியோர்களின் தகப்பானருமாகிய முகம்மது ஹெச். சுகர்னோ அவர்கள் 11.2.13 காலை 4 மணியளவில் மௌத் ஆகி விட்டார்கள். (“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்”).
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பவர் :
ராஜா சுகர்னோ
ஃபைசல் சுகர்னோ


நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை வந்தடைந்தத நீதி கேட்டு நெடும்பயண ஊர்தி



முத்துப்பேட்டை, பிப்ரவரி 11: முத்துப்பேட்டைக்கு வருகை வந்த  இந்திய தவ்ஹீத் ஜமாத் தேசிய தலைவர் பாக்கர் நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி விட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாத் எந்த காலக்கட்டத்திலும் தேர்தலில் போட்டியிடாது வருகிற தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எந்த கட்சி இட ஒதுக்கீட்டில் உறுதியாக கூறுகிறார்களோ. அந்த நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் உண்மையான குற்றவாளியாக இருந்தால் கசாப், அப்சல் குரு ஆகியவர்களை தூக்கில் போட்டதை நாங்கள் வரவேற்கிறோம். 

நாட்டிற்காக துரோகம் செய்வபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போது பா.ஜ.க அரசாக இருந்து இருந்தால் இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றி இருக்க மாட்டார்கள். ஆனால் உண்மையான ஆர்.எஸ்.எஸ். கொள்கை படைத்தவர்களான காங்கிரஸை வைத்து கச்சிதமாக முடித்து விட்டது பா.ஜ.க. எல்லாம் அமைச்சர் ஷிண்டேவை வைத்து நாடகம் ஆடிவிட்டது அரசு.

பாபர் மஸ்ஜித் இடத்தில் பா.ஜ.க அரசு இருந்த போது கோயில் கட்ட நினைக்க வில்லை ஆனால் காங்கிரஸ் அரசு பாபர் மஸ்ஜித் விசயத்தில் இஸ்லாமியர்களுக்கு துரோகம் செய்து விட்டது அப்படி இல்லையென்றால் உண்மையான குற்றவாளியான அத்வானியை தூக்கில் போட்டு இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்ற மோடியையும் தூக்கில் இட்டு இருக்க வேண்டும் மோடி நரகத்தில் இருக்க கூடியவர் பிரதமருக்கு ஒருகாலும் தகுதியில்லாதவர் இவ்வாறு கூறினார்.

தொகுப்பு:

ஜெ. ஷேக் பரீது 


சிங்கப்பூர் : முத்துப்பேட்டை அஷோசியேசனின் செயல்பாட்டுக் கூட்டமும், கலந்துரையாடலும்..




சிங்கபூர், ஜனவரி 27: முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூரின் இவ்வருட செயல் பாட்டுக் கூட்டமும், கலந்துரையாடலும் 20.01.2013 ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் பென்கூளேன் பள்ளி கீழ் தளத்தில் அமைந்துள்ள ஒரு ஹாலில் சேர்ந்த ஆலோசனைக் கூட்டாமாக நடப்புத் தலைவர் M .A .Y.ஜாஹீர் ஹுசைன் தலைமையில் நடந்தது. அதுசமயம் செயலாளர் D .ஷபீர் அஹ்மத் அவர்கள் சிறப்பான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

 அதன் அடிப்படையில், பொது தூரநோக்குnசிந்தனையின் வெளிப்பாடாக நமது M .A .S .அசோசியேசன், சக அசோசியேசனின் தோழமையுடன் இணைந்து இரத்ததானம் வழங்குதல்,முதியோர்களின் இல்லத்திற்கு சென்று உதவியும், உடல் உழைப்பு சேவையும், சிங்கை குடியரசில் முக்கிய சேவையாக தேவைப்படும் சமயத்தில் நாமும் நமது M .A .S .யைபிரதி நிதித்து கலந்து கொள்ளுதல் என்றும்,ஒவ்வொரு இரு மாதத்திற்கு ஒருமுறை M .A .S .கூடி நடந்த, நடக்க இருக்கின்ற தேவைகளை ஆலோசனை செய்து தேவைப்படும் மாற்றங்களை சரி செய்வது என்றும், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 17.03.2013 ஞாயிற்றுக் கிழமை நமது M .A .S .ன் குடும்ப தினமாக நாம் அனைவரும் தத்தம் குடுபத்தினர்களோடு ஓன்று கூடி சிறப்பாக கொண்டாடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.  

அதனை தாமதிக்காமல் உடனே செயல்படுத்துவது என்றும் தீர்மானமாக குறிக்கப்பட்டது. இந்த வருட முக்கிய நிகழ்வாக நமது M .A .S .க்கு தன்னார்வ நன்கொடையாக மனமுவந்து அதிகமாக தந்துதவும் சகோதரர்களையும்,தரும் தொகையின் அளவிற்கு ஏற்ப வருசைப்படுத்தி தகவல் தருவது, ஒவ்வொரு M .A .S .ன் குடுபத்தினரும் குறைந்த பட்ச நன்கொடையாக $50/= கொடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது. இந்த நிகழ்சிக்கு M .A .S .ன்முன்னாள் தலைவர் ஜனாப்.M.A.முஹம்மது முஸ்தபா, M.A.முஹம்மது யூசுப், பொருளாளர் முஹம்மது நூருல் அமீன், ஹாஜா அலாவுதீன், அப்துல் லத்திப், ரஷீத் அலி, முஹம்மது அசாருதீன்,  தமீம் நசீர், தப்ரே ஆலம், எர்ஷாத், அப்துல் பாஸித், ஷேக் அப்துல் காதர், அப்துல் பாஸித் அப்துல் சலாம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள், இறுதியாக சிற்றுண்டியுடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
source from: www.muthupettaiexpress.com

தொகுப்பு:

ஜெ. ஷேக் பரீது 

மவுத்து அறிவிப்பு; "ஹாஜி. முகம்மது மைதீன்"



முத்துப்பேட்டை, ஜனவரி 24: நடுத்தெரு மர்ஹூம் முஹம்மது லெப்பை கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது சாலிஹூ அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல்ஹமீது, ஜனாப் ஹபீப் முஹம்மது  ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் முஹம்மது கனி, ஜனாப் முகைதீன் பிச்சை, ஜனாப் அப்துல் காதர் ஆகியோர்களின் மச்சானும், ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்களின் சகலையும், ஷேக்தாவூது அவர்களின் சிறிய தகப்பானரும், ஹாஜா அலாவுதீன், ஜாகிர் உசேன் ஆகியோர்களின் மாமனாரும், ஜெகபர் சாதிக், முஹம்மது காசிம், சுலைமான் ஆகியோர்களின் பெரிய தகப்பானருமாகிய ஹாஜி. முகம்மது மைதீன் அவர்கள் நேற்று 5 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும். 

நமது நிருபர் 

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் தனியார் பஸ்ஸிலிருந்து இறங்க அடம் பிடித்த ''குடி''மகன்



முத்துப்பேட்டை, ஜனவரி 17: முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அற்புதம் என்ற தனியார் டவுன் பஸ் சென்று வருகிறது. வழக்கம்  போல் நேற்று பகல் 1 மணிக்கு முத்துப்பேட்டையிலிருந்து புறப்பட ஆயத்தமாகி இருந்தது. அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் கடும் குடி போதையில் ஏறி உள்ளார். நடத்துனர் சுதாகரிடம் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துவரங்குறிச்சிக்கு டிக்கெட்டும் எடுத்து உள்ளார். அவர் இறக்கும் ஸ்டாப் வந்தும் இறங்கவில்லை, பொறுத்து பார்த்த பஸ் பட்டுக்கோட்டைக்கு சென்றது, அங்கேயும் இறங்காததை கண்ட நடத்துனர் சுதாகர் அந்த குடிமகனிடம் கேட்டும் முறையான பதில் இல்லை. பின்னர் மதியம் 2.20 க்கு பட்டுக்கோட்டையிலிருந்து பஸ் புறப்பட்டது மீண்டும் அந்த குடிமகன் இறங்கும் துவரங்குறிச்சி வந்தும் இறங்காததை கண்ட நடத்துனர் இறங்கும் படி கூறியதற்கு இறங்க அடம் பிடித்து உள்ளார். 

மீண்டும் பஸ் முத்துப்பேட்டை வந்து கொண்டு இருந்தது, கடும் குடி போதையில் இருந்த அந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் சீட்டின் அடியில் உட்கார்ந்து வாந்தியும் எடுத்து உள்ளார். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது, சரியாக 3.15 மணியளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது பஸ், அங்கேயும் இறங்க அடம் பிடித்தார். மிகவும் நோந்துபோன டிரைவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு பஸ்ஸை ஓட்டி வந்தார். பின்னர் அங்கு பணியில் இருந்த காவலர்கள் சண்முகநாதன், ஜீவா ஆகியோர் குடி மகனிடம் பல மணி நேரம் போராடி நைசாக பேசி பின்னர் கீழே இறக்கி விடப்பட்டார். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை

உலக நாயகன்? கமலுக்கு உலக பொதுமறை வழங்கும் INTJ!



சென்னை, ஜனவரி 17: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்கும் தஃவா, எதிலும் தஃவா என்ற கொள்கையை மையமாக கொண்டு, எக்களதையும் தஃவா களமாக மாற்றி இஸ்லாத்தை நோக்கி அழைத்து விடுத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் 

இவ்வழிமுறையை பின்பற்றி கடந்த வாரம் விஸ்வரூபம் என்ற திரைப்படம் சம்மந்தமாக நடிகர் கமலஹாசனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நடிகர் கமலின் திரைபடங்களில் இடம் பெற்றுவரும் இஸ்லாமிய விரோதப்போக்கை கண்டித்து, முஸ்லிம்கள் யாரும் பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ, வந்தேறி வந்த அந்நியர்களோ அல்ல, இம்மண்ணின் மைந்தர்கள், ஒரு தொப்புள் கொடி உறவுகள் என்று கூறி, இஸ்லாத்தை பற்றி விளக்கி, இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி அழைப்பு விடுத்து, திருமறை குர்ஆன் தமிழாக்கத்தையும் INTJ துணை தலைவர் முஹம்மது முனீர் அன்பளிப்புச் செய்தார்.

உலக நாயகன் என்ற போலியான புனைப் பெயர்களால் அழைக்கப்படும் நடிகர் கமல் போன்றோரை, உலகம் போற்றும் உத்தமர், எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றி வாழச்செய்ய, அல்லாஹ் போதுமானவன். 

எனவே நடிகர் கமல் அவர்கள் நேர்வழி பெற இறைவனை பிராத்திக்கும் படி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ஜெ. சேக்  பரீது 

பட்டுக்கோட்டையில் மத கலவரத்தை தூண்ட முயற்ச்சி!



பட்டுக்கோட்டை ஜனவரி 16: நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதனை அறிந்த இமாம் அவர்களுடைய மாமனார் தடுக்க சென்றுள்ளார். அவரை துளுக்க நாயே உங்களை இத்தோடு ஒழித்துவிடுவோம் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட SDPI-ன் நகர தலைவர் அமானுல்லாஹ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விளக்கிவிட்டுள்ளார். அப்போது உன்னையும் கொல்லாமல் விட மாட்டோம் என கூறி பைப், உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், மேலும் இமாம் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். 

இந்த சம்பவத்தை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய வழியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் சார்பில் மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக சென்று DSPI -யிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த ஊர்வளத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ஜெ . சேக் பரீது  

திருத்துறைபூண்டி வழக்கறிஞர் சங்க பொருளாளராக முத்துபேட்டை தீன் முஹம்மது தேர்வு :



முத்துபேட்டை, ஜனவரி 16: முத்துப்பேட்டை நகர மனித நேய மக்கள் கட்சியின் செயலாளராக இருப்பவர் தீன் முஹம்மது .32 வயதாகும் இவர் த.மு மு. க வில் மாநில மாணவரணி செயலாளர் , உட்பட மாவட்ட ,நகர ,பொறுப்புகளை வகித்தவர் .திருச்சி சட்டக்கல்லூரியில் 2003 ஆம் ஆண்டு சட்டம் பயின்று ,பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை திருத்துறைபூண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் பார் கவுன்சில் பொருளாளராக தேர்வாகி இருப்பதற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .


நமது நிருபர்:
A .முஹம்மது ஷபான் .DCE 

தமுமுகவை காப்பி அடித்து சிலர் கட்சி நடத்துகிறார்கள் :மாலிக் பேட்டி :


முத்துப்பேட்டை, ஜனவரி 12: 
ஏன் இந்த பொதுக்கூட்டம்?
முத்துபேட்டையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அதை உடனே திறந்திட கோரியும்,முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின்நிலையம் அமைக்க கோரியும்,முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவிக்க கோரியும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளோம் .

2.த.மு.மு.க மற்றும் ம.ம.க-வின் வளர்ச்சி எப்படி உள்ளது?
திருவாரூர் மாவட்டம் முழுவதும் மது கடைகளுக்கு எதிரான பிரச்சாரம், அந்நிய முதலீட்டுக்கு எதிரான பிரச்சாரம் வீரியமாக நடைபெற்றது.காவிரி நீரில் தமிழகத்திற்க்குள்ள உரிமையை நிலைநாட்ட தலையில் கருப்பு முண்டாசு கட்டி போராட்டம் நடைபெற்றது.இஸ்லாமிய இளைஞர்களும் மாற்றுமத அன்பர்களும் த.மு.மு.க மற்றும் ம.ம.க-வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

3.முத்துப்பேட்டையில் த.மு.மு.க வீழ்ந்து விட்டதாக சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்களே?
தமிழக மண்ணில் முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க,வீதிக்கு வந்து போராடத்தெரியாத நிலையை மாற்றி போராட்ட களத்திற்கு அழைத்து வந்த பெருமை த.மு.மு.க-வையே சாரும். கொடி வேண்டாம், போராட்டம் வேண்டாம்,அரசியல் வேண்டாம்  என்று நேற்று கூறியவர்கள்,இன்று த.மு.மு.க-வை பார்த்து ஈயடிச்சான் காப்பி வேலையை செய்து வருகிறார்கள். நாங்கள் ஒரு போதும் வீழமாட்டோம், பீனிக்ஸ் பறவையை போல் எழுந்து நிற்ப்போம்.

4.உள்ளாட்சி மன்ற தேர்தலில் உங்களின் வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு பலர் கூறியும் நீங்கள் பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறதே?
இதை சொல்பர்கள் முதலில் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும் நான்தான் பலரிடம் போய்எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர்கள் பதவி வெறியில் ஆணவத்தோடு பதில் கூறினார்கள் .நாங்கள்தான் இந்த ஊருக்கு தியாகம் செய்தவர்கள் என்று சொன்னார்கள்.அது என்ன தியாகமோ?
 சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் 

முத்துப்பேட்டையில் சாலை பணியை உடனே துவங்க வேண்டும் SDPI ஆர்பாட்டம்.!!!




முத்துபேட்டை, நவம்பர் 28 : முத்துப்பேட்டை தெற்குக் காடு கொய்யா தோப்பு மங்களூர் இணைப்பு புதிய சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதுக்கு 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பனியும் துவங்கி செயல்பட்டு வந்தது. இதில் ஆக்கிரபிப்பு செய்த ஒரு சிலர் இந்த பணியை தடை செய்ய முயற்சித்து வருவதால் அப்பகுதியில் பெரும் பிரச்சனையும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இந்த நிலையில் கோர்ட்டு வரை சென்ற இந்த பிரச்சனையை அரசு பல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் அந்த பணியை உடனே துவங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்களும் SDPI கட்சியுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்க்கு நகர தலைவர் முஹைதீன் தலைமை வகித்தார். நகர துணைத் தலைவர் சேக் முஹைதீன் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, SDPI நகர செயலாளர் காளிமுத்து, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜபருல்லா, தம்பு சாமி உள்பட பலரும் ஆர்பாட்டத்தில் பேசினார்கள். பேரூராட்சி முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை  

மவுத்து அறிவிப்பு:"M.நூருல் ஹிபா (3 வயது குழந்தை)"



முத்துப்பேட்டை, நவம்பர் 22 : S.P.K.M. தோட்டவளாகம் S.K.M.அப்துல் காதர் அவர்களின் பேத்தியும், கட்டிமேடு ஜனாப்M.அப்துல் ஹாதி அவர்களின் பேத்தியும், A.முஹம்மது ரியாஸ்தீன் அவர்களின் மகளும்மாகிய M.நூருல் ஹிபா (மூன்று வயது குழந்தை) (11.11.2012) அன்று காலை 11.00 மணியளவில் மவுத்தாகி விட்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா (11.11.2012) அன்று  இரவு 9.00 மணியளவில் கட்டிமேடு பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை அறிவிக்கிறார்கள்.

அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.

இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

Source from: Ameeraham Muththuppettai islaamiya nala sangam 
அறிவிப்பவர் :-

S.K.M.அப்துல் காதர் - துபை. 

தொடர்புக்கு:-

S.K.M.அப்துல் காதர்                : 00971 – 050 - 7643388

A.முஹம்மது ரியாஸ்தீன்          : 0091 - 9789335170

A.முஹம்மது நியாஸ்             : 00971 – 050 – 8535765


குவைத்தில் உள்ள பிரபல நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை

குவைத், நவம்பர் 12 : குவைத்தில் உள்ள "Integrated Logistics Co Kuwait" பிரபல நிறுவனத்திற்கு கீழ் கண்ட பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவை: டிரைவர், லேபர், ரிக்கர் உள்ளிட்ட 10 பணிகளுக்கு உடனடி ஆட்கள் தேவைப் படுகிறது. இன்னும் 2 நாட்களுக்குள் தங்களுடைய பாஸ்போட் காப்பியை கீழ் கண்ட இரு முகவரிக்கு அனுப்பி வைக்கவும். 

For labour 60 KDwith over time around 100 KD

For Rigger 70 KDwith over time around 120 KD

For driver 80 KD with over time around 150 KD 

(must have Indian heavy license). 

Yearly one month vocation with one month salary


public.mttexpress@gmail.com, muhmdirfan@gmail.com 

மேலும் தொடர்புக்கு:


துபாய் இலியாஸ்: 00971 - 562730116

குவைத் இர்பான்: 00965 - 67723389

நமது நிருபர் :

முஹம்மது இர்பான் (குவைத்)

மவுத்து அறிவிப்பு: "H.ஹம்சா அம்மாள்"




முத்துப்பேட்டை, நவம்பர் 05 : புதுமனை தெரு மர்ஹும் H. ஹபீப் ராவுத்தர் அவர்களின் மனைவியும்N.S.ஹாஜா கமால்,N.S.பஷீர் அஹமது, N.S.ஜகபர் அலி, இவர்களின் சிறிய தாயாரும், S.அமீருதீன் அவர்களின் பாட்டியாவும், முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் தலைவர் H.ஷேக் தாவூது அவர்களின் தாயாருமாகிய H.ஹம்சா அம்மாள் அவர்கள் நேற்று (04.11.2012) இரவு 9.30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று (05.11.2012) மாலை 5.00 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்

S.அமீருதீன் (AJMAN – U.A.E).

தொடர்புக்கு:-

H.ஷேக் தாவூது                                 - 0091 -9715036338

M.அப்துல் சமது (ரோஜாஸ் ரெடிமேட்)   - 0091 - 9942698669 

N.S.பஷீர் அஹமது                     - 00971 - 050 - 2568579

N.S.ஜகபர் அலி                                    - 00971 – 050 -6554010

S.அமீருதீன்                                          - 00971 – 056 - 7494715

நமது நிருபர் 

K.M. காதர் கனி (பாடகர்)

திருவாரூர் மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் கார்த்திக் அவர்களின் புது மனைப் புகுவிழா ..







முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று தி.மு.க. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் M.S. கார்த்திக் அவர்களின் புகுமனை புகுவிழா மிக சிறப்பாக திறக்கப்பட்டது. இதில் திருவாரூர் மற்றும் தி.மு.க. கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

முத்துப்பேட்டையில் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை...



முத்துப்பேட்டை, அக்டோபர் 28 : முத்துப்பேட்டையில் நேற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை குத்பா பள்ளி, புதுப் பள்ளி, நூர் பள்ளி, ஆசாத் நகர் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அவற்றில் சில புகைப்படக் காட்சிகள் உங்கள் பார்வைக்கு..
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)